Skip to main content

بَدِيعُ
நூதன படைப்பாளன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியின்
أَنَّىٰ
எவ்வாறு?
يَكُونُ
இருக்கும்
لَهُۥ
அவனுக்கு
وَلَدٌ
சந்ததி
وَلَمْ تَكُن
இல்லையே
لَّهُۥ
அவனுக்கு
صَٰحِبَةٌۖ
மனைவி
وَخَلَقَ
இன்னும் படைத்தான்
كُلَّ شَىْءٍۖ
எல்லாவற்றையும்
وَهُوَ
அவன்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Badee'us samaawaati wal ardi annnaa yakoonu lahoo waladunw wa lam takul lahoo saahibatunw wa khalaqa kulla shai'in 'Aleem

முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكُمُ
அவன்
ٱللَّهُ
அல்லாஹ்
رَبُّكُمْۖ
உங்கள் இறைவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
خَٰلِقُ
படைப்பாளன்
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
فَٱعْبُدُوهُۚ
வணங்குங்கள்/அவனை
وَهُوَ
அவன்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
وَكِيلٌ
கண்காணிப்பவன், பொறுப்பாளன்

Zaalikumul laahu Rabbukum laaa ilaaha illaa huwa khaaliqu kulli shai'in fa'budooh; wa huwa 'alaa kulli shai'inw Wakeel

இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே.

Tafseer

لَّا تُدْرِكُهُ
அடையாது/அவனை
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
وَهُوَ
அவன்தான்
يُدْرِكُ
அடைகிறான்
ٱلْأَبْصَٰرَۖ
பார்வைகளை
وَهُوَ
அவன்
ٱللَّطِيفُ
மிக நுட்பமானவன்
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிந்தவன்

Laa tudrikuhul absaaru wa Huwa yudrikul absaara wa huwal Lateeful Khabeer

பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.

Tafseer

قَدْ
வந்துவிட்டன
جَآءَكُم
உங்களுக்கு
بَصَآئِرُ
ஆதாரங்கள்
مِن
இருந்து
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
فَمَنْ
எனவே எவர்
أَبْصَرَ
பார்த்தாரோ
فَلِنَفْسِهِۦۖ
அவருக்குத்தான் நன்மை
وَمَنْ
இன்னும் எவர்
عَمِىَ
குருடாகி விட்டாரோ
فَعَلَيْهَاۚ
அவருக்குத்தான் கேடாகும்
وَمَآ أَنَا۠
நான் இல்லை
عَلَيْكُم
உங்கள் மீது
بِحَفِيظٍ
காவலனாக

Qad jaaa'akum basaaa'iru mir Rabbikum faman absara falinafsihee wa man 'amiya fa'alaihaa; wa maaa ana 'alaikum bihafeez

உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைக் காப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்).

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறு
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
وَلِيَقُولُوا۟
இன்னும் அவர்கள்சொல்வதற்கு
دَرَسْتَ
படித்தீர்
وَلِنُبَيِّنَهُۥ
இன்னும் நாம் தெளிவுபடுத்துவதற்காக/அதை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَعْلَمُونَ
அறிவார்கள்

Wa kazaalika nusarriful Aayaati wa liyaqooloo darasta wa linubaiyinahoo liqawminy ya'lamoon

(இதனை) நீங்கள் (எங்களுக்கு) நன்கு ஓதிக்காண்பித்(து அறிவித்)தீர்கள் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதனைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்முடைய) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கின்றோம்.

Tafseer

ٱتَّبِعْ
பின்பற்றுவீராக
مَآ أُوحِىَ
எதை/வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن
இருந்து
رَّبِّكَۖ
உம் இறைவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குறியவன்
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
عَنِ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களை

ittabi' maaa oohiya ilaika mir Rabbika laaa ilaaha illaa Huwa wa a'rid 'anil mushrikeen

(நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள்.

Tafseer

وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَآ أَشْرَكُوا۟ۗ
இணைவைத்திருக்க மாட்டார்கள்
وَمَا جَعَلْنَٰكَ
நாம் ஆக்கவில்லை/உம்மை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَفِيظًاۖ
காவலராக
وَمَآ أَنتَ
இன்னும் நீர் இல்லை
عَلَيْهِم
அவர்கள் மீது
بِوَكِيلٍ
பொறுப்பாளராக

Wa law shaaa'al laahu maaa ashrakoo; wa maa ja'alnaaka 'alaihim hafeezanw wa maaa anta 'alaihim biwakeel

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உங்களை ஏற்படுத்தவில்லை. நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல.

Tafseer

وَلَا تَسُبُّوا۟
திட்டாதீர்கள்
ٱلَّذِينَ يَدْعُونَ
எவர்களை/வணங்குகிறார்கள்
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
فَيَسُبُّوا۟
அதனால் திட்டுவார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَدْوًۢا
வரம்பு மீறி
بِغَيْرِ عِلْمٍۗ
அறிவின்றி
كَذَٰلِكَ
இவ்வாறே
زَيَّنَّا
அலங்கரித்தோம்
لِكُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍ
வகுப்பினர்
عَمَلَهُمْ
அவர்களுடைய செயல்களை
ثُمَّ إِلَىٰ
அவர்களுடைய இறைவனிடமே
مَّرْجِعُهُمْ
மீட்சி/அவர்களுடைய
فَيُنَبِّئُهُم
ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு
بِمَا كَانُوا۟
எதை/இருந்தார்கள்/செய்வார்கள்

Wa laa tasubbul lazeena yad'oona min doonil laahi fa yasubbul laaha 'adwam bighairi 'ilm; kazaalika zaiyannaa likulli ummatin 'amalahum summa ilaa Rabbihim marji'uhum fa yunabbi'uhum bimaa kaanooya'maloon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.

Tafseer

وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
جَهْدَ
உறுதியாக
أَيْمَٰنِهِمْ
அவர்களின் சத்தியம்
لَئِن جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
لَّيُؤْمِنُنَّ
நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்
بِهَاۚ
அதை
قُلْ
கூறுவீராக
إِنَّمَا ٱلْءَايَٰتُ
எல்லாம்/அத்தாட்சிகள்
عِندَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமே
وَمَا يُشْعِرُكُمْ
நீங்கள் அறிவீர்களா?
أَنَّهَآ
நிச்சயமாக அவை
إِذَا جَآءَتْ
வந்தால்
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in jaaa'at hum Aayatul la yu'minunna bihaa; qul innamal Aayaatu 'indal laahi wa maa yush'irukum annahaaa izaa jaaa'at laa yu'minoon

(அவர்கள் விருப்பப்படி) யாதொரு அத்தாட்சி தங்களுக்காக வரும் சமயத்தில், "நிச்சயமாக நாங்கள் அதனை நம்புவோம்" என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுங்கள். (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) வரும் சமயத்திலும் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?

Tafseer

وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ
புரட்டுகிறோம்/உள்ளங்களை/அவர்களுடைய
وَأَبْصَٰرَهُمْ
இன்னும் பார்வைகளை/அவர்களுடைய
كَمَا
போன்று
لَمْ يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை
بِهِۦٓ
இதை
أَوَّلَ
முதல்
مَرَّةٍ
முறையாக
وَنَذَرُهُمْ
விடுகிறோம்/அவர்களை
فِى طُغْيَٰنِهِمْ
அட்டூழியத்தில்/அவர்களுடைய
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்வார்கள்

Wa nuqallibu af'idatahum wa absaarahum kamaa lam yu'minoo biheee awwala marratinw wa wa nazaruhum fee tughyaanihim ya'mahoon

முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கின்றோம்.

Tafseer