Skip to main content

وَجَعَلَنِى
இன்னும் அவன் என்னை ஆக்குவான்
مُبَارَكًا
அருள்மிக்கவனாக
أَيْنَ مَا
நான் எங்கிருந்தாலும்
وَأَوْصَٰنِى
எனக்கு கட்டளையிட்டுள்ளான்
بِٱلصَّلَوٰةِ
தொழுகையைக் கொண்டும்
وَٱلزَّكَوٰةِ
ஸகாத்தைக் கொண்டும்
مَا دُمْتُ
நான்இருக்கின்றவரை
حَيًّا
உயிருள்ளவனாக

Wa ja'alanee mubaarakan aina maa kuntu wa awsaanee bis Salaati waz Zakaati maa dumtu haiyaa

நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.

Tafseer

وَبَرًّۢا
நன்மைசெய்பவனாக
بِوَٰلِدَتِى
என் தாய்க்கு
وَلَمْ يَجْعَلْنِى
இன்னும் அவன் என்னை ஆக்கவில்லை
جَبَّارًا
பெருமையுடையவனாக
شَقِيًّا
தீயவனாக

Wa barram biwaalidatee wa lam yaj'alnee jabbaaran shaqiyyaa

என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான்.

Tafseer

وَٱلسَّلَٰمُ
ஈடேற்றம் உண்டாகுக
عَلَىَّ
எனக்கு
يَوْمَ
நாளிலும்
وُلِدتُّ
நான் பிறந்த
وَيَوْمَ أَمُوتُ
நான் மரணிக்கின்றநாளிலும்
وَيَوْمَ أُبْعَثُ
நான் எழுப்பப்படுகின்ற நாளிலும்
حَيًّا
உயிருள்ளவனாக

Wassalaamu 'alaiya yawma wulittu wa yawma amootu wa yawma ub'asu baiyaa

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது).

Tafseer

ذَٰلِكَ
இவர்தான்
عِيسَى
ஈஸா
ٱبْنُ
மகன்
مَرْيَمَۚ
மர்யமுடைய
قَوْلَ
கூறுங்கள்
ٱلْحَقِّ
உண்மையானகூற்றை
ٱلَّذِى فِيهِ
எது/இதில்தான்
يَمْتَرُونَ
அவர்கள் தர்க்கிக்கின்றனர்

Zaalika 'Eesab-nu Marya; qawlal haqqil lazee feehi yamtaroon

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.

Tafseer

مَا كَانَ
தகுந்ததல்ல
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
أَن يَتَّخِذَ
அவன் எடுத்துக் கொள்வது
مِن وَلَدٍۖ
குழந்தையை
سُبْحَٰنَهُۥٓۚ
அவன் மகா பரிசுத்தமானவன்
إِذَا قَضَىٰٓ
அவன் முடிவு செய்தால்
أَمْرًا
ஒரு காரியத்தை
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
لَهُۥ
அதற்கு
كُن
ஆகு
فَيَكُونُ
அது ஆகிவிடும்

Maa kaana lillaahi ai yattakhiza minw waladin Subhaanah; izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fa yakoon

ஆகவே, (அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்தான்
رَبِّى
என் இறைவனும்
وَرَبُّكُمْ
உங்கள் இறைவனும்
فَٱعْبُدُوهُۚ
ஆகவே, அவனையே வணங்குங்கள்!
هَٰذَا
இதுதான்
صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
நேரான பாதை

Wa innal laaha Rabbee wa Rabbukum fa'budooh; haazaa Siraatum Mustaqeem

நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்களது இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.)

Tafseer

فَٱخْتَلَفَ
ஆனால் தர்க்கித்தனர்
ٱلْأَحْزَابُ
பல பிரிவினர்
مِنۢ بَيْنِهِمْۖ
தங்களுக்கு மத்தியில்
فَوَيْلٌ
ஆகவே கேடுதான்
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களுக்கு
مِن مَّشْهَدِ
அவர் காணும்போது
يَوْمٍ
நாளை
عَظِيمٍ
மகத்தான

Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena kafaroo mim mashhadi Yawmin 'azeem

ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதனை, நிராகரிப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் அவர்களுக்குக் கேடுதான்.

Tafseer

أَسْمِعْ
நன்றாக செவிசாய்ப்பார்கள்
بِهِمْ
அவர்கள்
وَأَبْصِرْ
நன்றாக பார்ப்பார்கள்
يَوْمَ
நாளில்
يَأْتُونَنَاۖ
நம்மிடம் அவர்கள் வருகின்ற
لَٰكِنِ
எனினும்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
مُّبِينٍ
தெளிவான

Asmi' bihim wa absir Yawma yaatoonanaa laakiniz zaalimoonal yawma fee dalaalim mubeen

(இன்றைய தினம் இதனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம்முடைய கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவி சாய்ப்பார்கள். (நம்முடைய வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.

Tafseer

وَأَنذِرْهُمْ
அவர்களை எச்சரிப்பீராக
يَوْمَ
நாளை(ப் பற்றி)
ٱلْحَسْرَةِ
துயரமான
إِذْ قُضِىَ
தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது
وَهُمْ
அவர்கள் இருக்கின்றனர்
فِى غَفْلَةٍ
அறியாமையில்
وَهُمْ
அவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Wa anzirhum Yawmal hasrati iz qudiyal amr; wa hum fee ghaflatinw wa hum laa yu'minoon

ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Tafseer

إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
نَرِثُ
வாரிசாகுவோம்
ٱلْأَرْضَ وَمَنْ
பூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்கு
وَإِلَيْنَا
இன்னும் நம்மிடமே
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்

Innaa NNahnu narisul arda wa man 'alaihaa wa ilainaa yurja'oon

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவைகளுக்கும் அனந்தரம் கொள்வோம். அவர்கள் (அனைவரும்) நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer