Skip to main content

فَخَرَجَ
அவர் வெளியேறி வந்தார்
عَلَىٰ قَوْمِهِۦ
தனது மக்களுக்கு முன்
مِنَ
இருந்து
ٱلْمِحْرَابِ
தொழுமிடம்
فَأَوْحَىٰٓ
ஜாடை காண்பித்தார்
إِلَيْهِمْ
அவர்களை நோக்கி
أَن سَبِّحُوا۟
துதியுங்கள் என்று
بُكْرَةً
காலையிலும்
وَعَشِيًّا
மாலையிலும்

Fakharaja 'alaa qawmihee minal mihraabi fa-awhaaa ilaihim an sabbihoo bukratanw wa 'ashiyyaa

பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார்.

Tafseer

يَٰيَحْيَىٰ
யஹ்யாவே
خُذِ
பற்றிப் பிடிப்பீராக
ٱلْكِتَٰبَ
வேதத்தை
بِقُوَّةٍۖ
பலமாக
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
ٱلْحُكْمَ
ஞானத்தை
صَبِيًّا
சிறு குழந்தை

Yaa Yahyaa khuzil Kitaaba biquwwatinw wa aatainaahul hukma saiyyaa

(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.

Tafseer

وَحَنَانًا
இரக்கத்தையும்
مِّن لَّدُنَّا
நம்மிடமிருந்து
وَزَكَوٰةًۖ
தூய்மையையும்
وَكَانَ
இன்னும் அவர் இருந்தார்
تَقِيًّا
இறையச்சமுடையவராக

Wa hanaanam mil ladunnaa wa zakaatanw wa kaana taqiyyaa

அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார்.

Tafseer

وَبَرًّۢا
இன்னும் நன்மை புரிபவராக
بِوَٰلِدَيْهِ
தன் பெற்றோருக்கு
وَلَمْ يَكُن
அவர் இருக்கவில்லை
جَبَّارًا
முரடராக
عَصِيًّا
மாறுசெய்பவராக

Wa barram biwaalidayhi wa lam yakum jabbaaran 'asiyyaa

அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.

Tafseer

وَسَلَٰمٌ
இன்னும் ஈடேற்றம்
عَلَيْهِ
அவருக்கு
يَوْمَ
நாளிலும்
وُلِدَ وَيَوْمَ
பிறந்த/நாளிலும்
يَمُوتُ
அவர் மரணிக்கின்ற
وَيَوْمَ يُبْعَثُ
அவர் எழுப்பப்படுகின்ற நாளிலும்
حَيًّا
உயிர் பெற்றவராக

Wa salaamun 'alaihi yawma wulida wa yawma yamootu wa yawma yub'asu haiyaa

அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!

Tafseer

وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
مَرْيَمَ
மர்யமை
إِذِ ٱنتَبَذَتْ
ஒதுங்கியபோது
مِنْ أَهْلِهَا
தன் குடும்பத்தினரை விட்டு
مَكَانًا
இடத்திற்கு
شَرْقِيًّا
கிழக்கில்

Wazkur fil Kitaabi Marya; izin tabazat min ahlihaa makaanan shariqyyaa

(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்னுடைய) அறைக்குச் சென்று,

Tafseer

فَٱتَّخَذَتْ
அவர் ஏற்படுத்திக் கொண்டார்
مِن دُونِهِمْ
அவர்களுக்கு முன்னாலிருந்து
حِجَابًا
ஒரு திரையை
فَأَرْسَلْنَآ
நாம் அனுப்பினோம்
إِلَيْهَا
அவரிடம்
رُوحَنَا
நமது தூதரை
فَتَمَثَّلَ
அவர் தோன்றினார்
لَهَا
அவளுக்கு
بَشَرًا
ஒரு மனிதராக
سَوِيًّا
முழுமையான

Fattakhazat min doonihim hijaaban fa arsalnaaa ilaihaa roohanaa fatamassala lahaa basharan sawiyyaa

(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.

Tafseer

قَالَتْ
கூறினார்
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعُوذُ
பாதுகாவல் தேடுகிறேன்
بِٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
مِنكَ
உம்மிடமிருந்து
إِن كُنتَ
நீர் இருந்தால்
تَقِيًّا
இறையச்சமுடையவராக

Qaalat inneee a'oozu bir Rahmaani minka in kunta taqiyyaa

(அவரைக் கண்டதும்) "நிச்சயமாக நான் உங்களிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பரிசுத்தமானவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுங்கள்)" என்றார்.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
إِنَّمَآ أَنَا۠
நானெல்லாம்
رَسُولُ
தூதர்தான்
رَبِّكِ
உமது இறைவனின்
لِأَهَبَ
நான்வழங்குவதற்காக
لَكِ
உமக்கு
غُلَٰمًا
ஒரு குழந்தையை
زَكِيًّا
பரிசுத்தமான

Qaala innamaa ana rasoolu Rabbiki li ahaba laki ghulaaman zakiyyaa

அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை "உங்களுக்களி(க் கப்படும் என்பதை உங்களுக்கு அறிவி)ப்பதற்காக நான் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட (மலக்காகிய) ஒரு தூதர்தான்" என்றார்.

Tafseer

قَالَتْ
அவர் கூறினார்
أَنَّىٰ
எப்படி?
يَكُونُ لِى
எனக்கு ஏற்படும்
غُلَٰمٌ
குழந்தை
وَلَمْ يَمْسَسْنِى
இன்னும் என்னை தொடவில்லை
بَشَرٌ
ஓர் ஆடவர்
وَلَمْ أَكُ
இன்னும் நான் இல்லையே
بَغِيًّا
விபச்சாரியாக

Qaalat anna yakoonu lee ghulaamunw wa lam yamsasnee bashrunw wa lam aku baghiyyaa

அதற்கவர் "எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே" என்று கூறினார்.

Tafseer