Skip to main content

وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
أَنْ خَلَقَ
அவன் படைத்தது
لَكُم
உங்களுக்காக
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
أَزْوَٰجًا
மனைவிகளை
لِّتَسْكُنُوٓا۟
நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக
إِلَيْهَا
அவர்களிடம்
وَجَعَلَ
இன்னும் அவன் ஏற்படுத்தினான்
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
مَّوَدَّةً
அன்பையும்
وَرَحْمَةًۚ
கருணையையும்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Wa min Aayaatiheee an khalaqa lakum min anfusikum azwaajal litaskunooo ilaihaa wa ja'ala bainakum mawad datanw wa rahmah; inna fee zaalika la Aayaatil liqawminy yatafakkaroon

நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவைகளில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
خَلْقُ
படைத்ததும்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضِ
பூமியையும்
وَٱخْتِلَٰفُ
வேறுபட்டு இருப்பதும்
أَلْسِنَتِكُمْ
உங்கள் மொழிகளும்
وَأَلْوَٰنِكُمْۚ
உங்கள் நிறங்களும்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّلْعَٰلِمِينَ
கல்விமான்களுக்கு

Wa min Aayaatihee khalqus samaawaati wal aardi wakhtilaafu alsinatikum wa alwaanikum; inna fee zaalika la Aayaatil lil'aalimeen

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் கல்விமான்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
مَنَامُكُم
நீங்கள் தூங்குவதும்
بِٱلَّيْلِ
இரவிலும்
وَٱلنَّهَارِ
பகலிலும்
وَٱبْتِغَآؤُكُم
நீங்கள் தேடுவதும்
مِّن فَضْلِهِۦٓۚ
அவனுடைய அருளிலிருந்து
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَسْمَعُونَ
செவியேற்கின்றனர்

Wa min Aayaatihee manaamukum bil laili wannahaari wabtighaaa'ukum min fadlih; inna fee zaalika la Aayaatil liqawminy yasma'oon

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்து இளைப்பாறிக் கொள்வதும் (பூமியின் பல பாகங்களிலும் சென்று) நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (நல்லுபதேசத்தைச்) செவியுறும் மக்களுக்கு இதிலும் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦ
அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து
يُرِيكُمُ
அவன் உங்களுக்கு காட்டுகின்றான்
ٱلْبَرْقَ
மின்னலை
خَوْفًا
பயமாகவும்
وَطَمَعًا
ஆசையாகவும்
وَيُنَزِّلُ
இன்னும் இறக்குகின்றான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَيُحْىِۦ
உயிர்ப்பிக்கின்றான்
بِهِ
அதன் மூலம்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَآۚ
அது மரணித்த
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்

Wa min Aayaatihee yureekumul barqa khawfanw wa tama'anw wa yunazzilu minas samaaa'i maaa'an fa yuhyee bihil arda ba'da mawtihaaa inna fee zaalika la Aayaatil liqawminy ya'qiloon

நயமும் பயமும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்குக் காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦٓ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
أَن تَقُومَ
நிற்பது
ٱلسَّمَآءُ
வானமும்
وَٱلْأَرْضُ
பூமியும்
بِأَمْرِهِۦۚ
அவனுடைய கட்டளையின்படி
ثُمَّ
பிறகு
إِذَا
அவன் அழைத்தால்
دَعَاكُمْ
உங்களை
دَعْوَةً
ஒரு முறை அழைத்தல்
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
إِذَآ أَنتُمْ
அப்போது நீங்கள்
تَخْرُجُونَ
வெளியேறுவீர்கள்

Wa min Aayaatihee an taqoomas samaaa'u wal ardu bi-amrih; summa izaa da'aakum da'watam minal ardi izaaa antum takhrujoon

வானமும் பூமியும் அவன் கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். (உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அதில் உயிர் வாழ்ந்து மரணித்துப் பூமியில் அடக்கப்பட்டதன் பின்னரும்) அவன் உங்களை அழைக்கும்போது ஒரே அழைப்பில் நீங்கள் பூமியில் இருந்து வெளிப்பட்டு விடுவீர்கள்.

Tafseer

وَلَهُۥ
அவனுக்கே உரியவர்கள்
مَن
எவர்கள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியிலும்
كُلٌّ
எல்லோரும்
لَّهُۥ
அவனுக்கே
قَٰنِتُونَ
பணிந்துநடக்கின்றனர்

Wa lahoo man fissamaawaati wal ardi kullul lahoo qaanitoon

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
يَبْدَؤُا۟
ஆரம்பமாக படைக்கின்றான்
ٱلْخَلْقَ
படைப்புகளை
ثُمَّ
பிறகு
يُعِيدُهُۥ
அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான்
وَهُوَ
அது
أَهْوَنُ
மிக இலகுவானதே
عَلَيْهِۚ
அவனுக்கு
وَلَهُ
அவனுக்கே உரியன
ٱلْمَثَلُ
தன்மைகள்
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்த
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
وَهُوَ ٱلْعَزِيزُ
அவன்தான் மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Wa Huwal lazee yabda'ul khalqa summa yu'eeduhoo wa huwa ahwanu 'alaih; wa lahul masalul la'laa fissamaawaati wal-ard; wa Huwal 'Azeezul Hakeem

அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீளவைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

ضَرَبَ
அவன் விவரிக்கின்றான்
لَكُم
உங்களுக்கு
مَّثَلًا
ஓர் உதாரணத்தை
مِّنْ أَنفُسِكُمْۖ
உங்களிலிருந்து
هَل
?
لَّكُم
உங்களுக்கு
مِّن مَّا
சொந்தமாக்கியவர்களில்
أَيْمَٰنُكُم
உங்கள் வலக்கரங்கள்
مِّن شُرَكَآءَ
பங்காளிகள் யாரும்
فِى مَا
நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில்
فَأَنتُمْ فِيهِ
நீங்கள்/அதில்
سَوَآءٌ
சமமானவர்களாக
تَخَافُونَهُمْ
அவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள்
كَخِيفَتِكُمْ
நீங்கள் பயப்படுவது போன்று
أَنفُسَكُمْۚ
உங்களை
كَذَٰلِكَ
இவ்வாறு
نُفَصِّلُ
விவரிக்கின்றோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்

Daraba lakum masalam min anfusikum hal lakum mimmaa malakat aymaanukum min shurakaaa'a fee maa razaqnaakum fa antum feehi sawaaa'un takhaafoonahum kakheefa tikum anfusakum; kazaalika nufassilul Aayaati liqawminy ya'qiloon

(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்துகொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்களுடைய பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட் படுத்துவதைப் போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவைகளை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு நம்முடைய வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்.

Tafseer

بَلِ
மாறாக
ٱتَّبَعَ
பின்பற்றுகின்றனர்
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
அநியாயக்காரர்கள்
أَهْوَآءَهُم
மன இச்சைகளை தங்கள்
بِغَيْرِ
இன்றி
عِلْمٍۖ
கல்வி அறிவு
فَمَن
யார்
يَهْدِى
நேர்வழி செலுத்துவார்
مَنْ
எவரை
أَضَلَّ
வழிகெடுத்தான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்

Balit taba'al lazeena zalamooo ahwaaa'ahum bighairi 'ilmin famai yahdee man adallal laahu wa maa lahum min naasireen

எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்துவிட்டுத்) தங்களுடைய சரீர இச்சையைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக் கூடியவர் யார்? இத்தகையவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை.

Tafseer

فَأَقِمْ
ஆகவே நிறுத்துவீராக!
وَجْهَكَ
உம் முகத்தை
لِلدِّينِ
மார்க்கத்தின் பக்கம்
حَنِيفًاۚ
உறுதியுடையவராக
فِطْرَتَ
இயற்கை மார்க்கம்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ٱلَّتِى فَطَرَ
எது/இயற்கையாக அமைத்தான்
ٱلنَّاسَ
மக்களை
عَلَيْهَاۚ
அதன் மீதுதான்
لَا تَبْدِيلَ
மாற்றக்கூடாது
لِخَلْقِ
படைப்பை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ذَٰلِكَ
இதுதான்
ٱلدِّينُ
மார்க்கம்
ٱلْقَيِّمُ
நிலையான
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Fa aqim wajhaka liddeeni Haneefaa; fitratal laahil latee fataran naasa 'alaihaa; laa taabdeela likhalqil laah; zaalikad deenul qaiyimu wa laakinna aksaran naasi laa ya'lamoon

(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்.

Tafseer