Skip to main content

وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
لَعِلْمٌ
அடையாளமாவார்
لِّلسَّاعَةِ
மறுமையின்
فَلَا تَمْتَرُنَّ
ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்
وَٱتَّبِعُونِۚ
இன்னும் என்னை பின்பற்றுங்கள்!
هَٰذَا
இதுதான்
صِرَٰطٌ
நேரான(து)
مُّسْتَقِيمٌ
பாதையாகும்

Wa innahoo la'ilmul lis Saa'ati fala tamtarunna bihaa wattabi'oon; haazaa Siraatum Mustaqeem

நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவருமோர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி.

Tafseer

وَلَا يَصُدَّنَّكُمُ
உங்களை தடுத்துவிட வேண்டாம்
ٱلشَّيْطَٰنُۖ
ஷைத்தான்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ
எதிரி
مُّبِينٌ
தெளிவான

Wa laa yasuddan nakumush Shaitaanu innahoo lakum 'aduwwum mubeen

உங்களை ஷைத்தான் தடுத்துக் கெடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்."

Tafseer

وَلَمَّا جَآءَ
வந்த போது
عِيسَىٰ
ஈஸா
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
قَالَ
அவர் கூறினார்
قَدْ جِئْتُكُم
திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்
بِٱلْحِكْمَةِ
ஞானத்துடன்
وَلِأُبَيِّنَ
விவரிப்பதற்காகவும்
لَكُم بَعْضَ
உங்களுக்கு/சிலவற்றை
ٱلَّذِى تَخْتَلِفُونَ
எதில்/கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ
فِيهِۖ
அதில்
فَٱتَّقُوا۟ ٱللَّهَ
ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!

Wa lammaa jaaa'a 'Eesaa bilbaiyinaati qaala qad ji'tukum bil Hikmati wa li-ubaiyina lakum ba'dal lazee takhtalifoona feehi fattaqul laaha wa atee'oon

ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) "மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு வழிபடுங்கள்" என்றும்,

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
رَبِّى
எனது இறைவனும்
وَرَبُّكُمْ
உங்கள் இறைவனும்
فَٱعْبُدُوهُۚ
ஆகவே, அவனையே வணங்குங்கள்!
هَٰذَا
இதுதான்
صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
நேரான பாதையாகும்

Innal laaha Huwa Rabbee wa Rabbukum fa'budooh; haaza Siraatum Mustaqeem

"நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (என்னை வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி" என்றும் கூறினார்.

Tafseer

فَٱخْتَلَفَ
தர்க்கித்தனர்
ٱلْأَحْزَابُ
கூட்டங்கள்
مِنۢ بَيْنِهِمْۖ
தங்களுக்கு மத்தியில்
فَوَيْلٌ
நாசம் உண்டாகட்டும்
لِّلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
مِنْ عَذَابِ
வேதனையின்
يَوْمٍ
நாளில்
أَلِيمٍ
வலி தரக்கூடியது

Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena zalamoo min 'azaabi Yawmin aleem

எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையின் கேடுதான்!

Tafseer

هَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
إِلَّا ٱلسَّاعَةَ
தவிர/மறுமை
أَن تَأْتِيَهُم
அவர்களிடம் வருவதை
بَغْتَةً
திடீரென்று
وَهُمْ لَا
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்

Hal yanzuroona illas Saa'ata an taatiyahum baghtatanw wa hum laa yash'uroon

இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதேயன்றி (வேறு எதனையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?

Tafseer

ٱلْأَخِلَّآءُ
நண்பர்கள் எல்லாம்
يَوْمَئِذٍۭ
அந்நாளில்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு
عَدُوٌّ
எதிரிகள்
إِلَّا
தவிர
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களை

Al akhillaaa'u Yawma'izim ba'duhum liba'din 'aduwwun illal muttaqeen

அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகிவிடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர.

Tafseer

يَٰعِبَادِ
என் அடியார்களே!
لَا خَوْفٌ
பயமில்லை
عَلَيْكُمُ
உங்களுக்கு
ٱلْيَوْمَ
இன்று
وَلَآ أَنتُمْ
இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்

Yaa 'ibaadi laa khawfun 'alaikumul Yawma wa laaa antum tahzanoon

(அந்நாளில் இறை அச்சமுடையவர்களை நோக்கி) "என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு யாதொரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று கூறப்படும்).

Tafseer

ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக

Allazeena aamanoo bi Aayaatinaa wa kaanoo muslimeen

இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள்.

Tafseer

ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
أَنتُمْ
நீங்களும்
وَأَزْوَٰجُكُمْ
உங்கள் மனைவிகளும்
تُحْبَرُونَ
நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!

Udkhulul Jannata antum wa azwaajukum tuhbaroon

ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்).

Tafseer