Skip to main content

فَإِمَّا
ஆகவே, ஒன்று
نَذْهَبَنَّ
நிச்சயமாக நாம் மரணிக்கச் செய்வோம்
بِكَ
உம்மை
فَإِنَّا
நிச்சயமாக நாம்
مِنْهُم
அவர்களிடம்
مُّنتَقِمُونَ
பழிவாங்குவோம்

Fa immaa nazhabanna bika fa innaa minhum muntaqimoon

(நபியே! அவர்கள் மத்தியிலிருந்து) உங்களை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம்.

Tafseer

أَوْ نُرِيَنَّكَ
அல்லது/நாம் உமக்கு காண்பிப்போம்
ٱلَّذِى وَعَدْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் வாக்களித்ததை
فَإِنَّا
நிச்சயமாக நாம்
عَلَيْهِم
அவர்கள் மீது
مُّقْتَدِرُونَ
முழு ஆற்றல் உள்ளவர்கள்

Aw nuriyannakal lazee wa'adnaahum fa innaa 'alaihim muqtadiroon

அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீங்கள் (உயிருடனிருந்து) உங்களது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடைய வனாகவே இருக்கின்றோம்.

Tafseer

فَٱسْتَمْسِكْ
ஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக!
بِٱلَّذِىٓ أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டதை
إِلَيْكَۖ
உமக்கு
إِنَّكَ
நிச்சயமாக நீர்
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
مُّسْتَقِيمٍ
நேரான(து)

Fastamsik billazeee oohi ya ilaika innaka 'alaa Siraatim Mustaqeem

(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்கள்.

Tafseer

وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
لَذِكْرٌ
ஒரு சிறப்பாகும்
لَّكَ
உமக்கு(ம்)
وَلِقَوْمِكَۖ
உமது மக்களுக்கும்
وَسَوْفَ تُسْـَٔلُونَ
உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்

Wa innahoo lazikrul laka wa liqawmika wa sawfa tus'aloon

நிச்சயமாக இது உங்களுக்கும், உங்களுடைய மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.

Tafseer

وَسْـَٔلْ
இன்னும் நீர் விசாரிப்பீராக!
مَنْ أَرْسَلْنَا
நாம் அனுப்பியவர்களை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
مِن رُّسُلِنَآ
நமது தூதர்களில்
أَجَعَلْنَا
ஏற்படுத்தி இருக்கின்றோமா?
مِن دُونِ
ரஹ்மானை அன்றி
ءَالِهَةً
கடவுள்களை
يُعْبَدُونَ
வணங்கப்படுகின்ற(னர்)

Was'al man arsalnaa min qablika mir Rusulinaaa aja'alnaa min doonir Rahmaani aalihatany yu badoon

(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீங்கள் கேளுங்கள். வணங்குவதற்கு ரஹ்மானையன்றி வேறு கடவுள்களை நாம் ஆக்கினோமா?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
مُوسَىٰ
மூசாவை
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளுடன்
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனது பிரமுகர்களிடம்
فَقَالَ
அவர் கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
رَسُولُ
தூதர் ஆவேன்
رَبِّ
இறைவனுடைய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa laqad arsalnaa Moosaa bi aayaatinaaa ilaa Fir'awna wa mala'ihee faqaala innee Rasoolu Rabbil 'aalameen

நிச்சயமாக மூஸாவை, நாம் நம்முடைய (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
அவர் வந்த போது
جَآءَهُم
அவர்களிடம்
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளுடன்
إِذَا
அப்போது
هُم
அவர்கள்
مِّنْهَا
அவற்றைப் பார்த்து
يَضْحَكُونَ
சிரித்தார்கள்

Falammma jaaa'ahum bi aayaatinaaa izaa hum minhaa yadhakoon

அவர், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவைகளை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள்.

Tafseer

وَمَا نُرِيهِم
அவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம்
مِّنْ ءَايَةٍ
ஓர் அத்தாட்சியை
إِلَّا
தவிர
هِىَ
அது
أَكْبَرُ
பெரியதாக இருந்தே
مِنْ أُخْتِهَاۖ
அதன் சகோதரியை விட
وَأَخَذْنَٰهُم
இன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம்
بِٱلْعَذَابِ
வேதனையால்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அல்லது திரும்புவதற்காக

Wa maa nureehim min aayatin illaa hiya akbaru min ukhtihaa wa akhaznaahum bil'azaabi la'allahum yarji'oon

நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வொரு அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. பின்னும், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (ஆரம்பத்தில் அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ
ஓ சூனியக்காரரே!
ٱدْعُ
நீர் பிரார்த்திப்பீராக!
لَنَا
எங்களுக்காக
رَبَّكَ
உமது இறைவனிடம்
بِمَا عَهِدَ
அவன் வாக்களித்ததை
عِندَكَ إِنَّنَا
உம்மிடம்/நிச்சயமாக நாங்கள்
لَمُهْتَدُونَ
நேர்வழி பெறுவோம்

Wa qaaloo yaaa ayyuhas saahirud'u lanaa Rabbaka bimaa 'ahida 'indaka innanaa lamuhtadoon

அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "சூனியக்காரரே! (உங்களது இறைவன் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உங்களுக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ் வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உங்களது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உங்களுடைய) நேரான வழிக்கு வந்து விடுவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

فَلَمَّا كَشَفْنَا
நாம் அகற்றும்போது
عَنْهُمُ
அவர்களை விட்டும்
ٱلْعَذَابَ
வேதனையை
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يَنكُثُونَ
முறித்து விடுகின்றனர்

Falammaa kashafnaa 'anhumul 'azaaba izaa hum yankusoon

(அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்து) நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், பின்னும் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள்.

Tafseer