Skip to main content

قَدْ خَسِرَ
நஷ்டமடைந்து விட்டனர்
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِلِقَآءِ
சந்திப்பை
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
حَتَّىٰٓ
முடிவில்
إِذَا جَآءَتْهُمُ
வந்தால்/அவர்களுக்கு
ٱلسَّاعَةُ
காலம்
بَغْتَةً
திடீரென
قَالُوا۟
கூறுவர்
يَٰحَسْرَتَنَا
எங்கள் துக்கமே
عَلَىٰ
இல்
مَا فَرَّطْنَا
எவை/குறைசெய்தோம்
فِيهَا
அவற்றில்
وَهُمْ
அவர்களுமோ
يَحْمِلُونَ
சுமப்பார்கள்
أَوْزَارَهُمْ
பாவங்களை தங்கள்
عَلَىٰ ظُهُورِهِمْۚ
மீது/முதுகுகள்/தங்கள்
أَلَا سَآءَ
அறிந்து கொள்ளுங்கள்/கெட்டுவிட்டது
مَا يَزِرُونَ
எது/சுமப்பார்கள்

Qad khasiral lazeena kazzaboo biliqaaa'il laahi hattaaa izaa jaaa'at humus Saa'atu baghtan qaaloo yaa hasratanaa 'alaa maa farratnaa feehaa wa hum yahmiloona awzaarahum 'alaa zuhoorihim; alaa saaa'a ma yaziroon

(ஆகவே) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கவேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக "இதை (இந்த வேதத்தைப் பற்றி) நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!" என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவையல்லவா?

Tafseer

وَمَا ٱلْحَيَوٰةُ
இல்லை/வாழ்வு
ٱلدُّنْيَآ
உலகம்
إِلَّا
தவிர
لَعِبٌ
விளையாட்டு
وَلَهْوٌۖ
இன்னும் கேளிக்கை
وَلَلدَّارُ
வீடுதான்
ٱلْءَاخِرَةُ
மறுமை
خَيْرٌ
மிக மேலானது
لِّلَّذِينَ
எவர்களுக்கு
يَتَّقُونَۗ
அஞ்சுகிறார்கள்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Wa mal hayaatud dunyaaa illaa la'ibunw wa lahwunw wa lad Daarul Aakhiratu kahyrul lillazeena yattaqoon; afalaa ta'qiloon

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் இறை அச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Tafseer

قَدْ نَعْلَمُ
திட்டமாக/அறிவோம்
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
لَيَحْزُنُكَ
கவலையளிக்கிறது/உமக்கு
ٱلَّذِى يَقُولُونَۖ
எது/கூறுவார்கள்
فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَا يُكَذِّبُونَكَ
பொய்ப்பிப்பதில்லை/உம்மை
وَلَٰكِنَّ
எனினும்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
بِـَٔايَٰتِ ٱللَّهِ
அல்லாஹ்வின் வசனங்களை
يَجْحَدُونَ
மறுக்கின்றனர்

Qad na'lamu innahoo layahzunukal lazee yaqooloona fa innahum laa yukazziboonaka wa laakinnaz zaalimeena bi Aayaatil laahi yajhadoon

(நபியே! உங்களைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உங்களுக்குக் கவலையைத் தருகின்றது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
كُذِّبَتْ
பொய்ப்பிக்கப்பட்டனர்
رُسُلٌ
(பல) தூதர்கள்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فَصَبَرُوا۟
பொறுத்தனர்
عَلَىٰ
மீது
مَا
எது
كُذِّبُوا۟
பொய்ப்பிக்கப்பட்டனர்
وَأُوذُوا۟
இன்னும் துன்புறுத்தப்பட்டனர்
حَتَّىٰٓ
வரை
أَتَىٰهُمْ
வந்தது/அவர்களுக்கு
نَصْرُنَاۚ
நம் உதவி
وَلَا مُبَدِّلَ
அறவே இல்லை/மாற்றுபவர்
لِكَلِمَٰتِ
வாக்குகளை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَلَقَدْ
திட்டமாக
جَآءَكَ
வந்துள்ளது/உமக்கு
مِن نَّبَإِى۟
செய்தியில் சில
ٱلْمُرْسَلِينَ
தூதர்களின்

Wa laqad kuzzibat Rusulum min qablika fasabaroo 'alaa maa kuzziboo wa oozoo hattaaa ataahum nasrunaa; wa laa mubaddila li Kalimaatil laah; wa laqad jaaa'aka min naba'il mursaleen

உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உங்களிடம் வந்தே இருக்கின்றன.

Tafseer

وَإِن كَانَ
இருந்தால்
كَبُرَ
பெரிதாக
عَلَيْكَ
உமக்கு
إِعْرَاضُهُمْ
அவர்களின் புறக்கணிப்பு
فَإِنِ ٱسْتَطَعْتَ
நீர் இயன்றால்...
أَن تَبْتَغِىَ
நீர் தேடுவது
نَفَقًا
ஒரு சுரங்கத்தை
فِى ٱلْأَرْضِ
பூமியில்
أَوْ سُلَّمًا
அல்லது/ஒர் ஏணியை
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
فَتَأْتِيَهُم
நீர் வருவதற்கு/அவர்களுக்கு
بِـَٔايَةٍۚ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
وَلَوْ شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَجَمَعَهُمْ
ஒன்றுசேர்த்திருப்பான் /அவர்களை
عَلَى ٱلْهُدَىٰۚ
நேர்வழியில்
فَلَا تَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடாதீர்
مِنَ ٱلْجَٰهِلِينَ
அறியாதவர்களில்

Wa in kaana kabura 'alaika i'raaduhum fa inistata'ta an tabtaghiya nafaqan fil ardi aw sullaman fis samaaa'i fataa tiyahum bi Aayah; wa law shaaa'al laahu lajama'ahum 'alal hudaa; falaa takoonanna minal jaahileen

(நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணிப்பது உங்களுக்குப் பெரும் கஷ்டமாகத் தோன்றினால், உங்களால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஒரு ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை நீங்கள் அவர்களுக்குக் கொண்டு வாருங்கள். (அப்பொழுதும் அவர்கள் உங்களை நிராகரித்துக்கொண்டே இருப்பார்கள்.) எனினும் அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.

Tafseer

إِنَّمَا
எல்லாம்
يَسْتَجِيبُ
ஏற்றுக் கொள்வார்
ٱلَّذِينَ
எவர்கள்
يَسْمَعُونَۘ
செவிசாய்ப்பார்கள்
وَٱلْمَوْتَىٰ
இறந்தவர்கள்
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/அவர்களை
ٱللَّهُ
அல்லாஹ்
ثُمَّ
பிறகு
إِلَيْهِ
அவனிடமே
يُرْجَعُونَ
திருப்பப்படுவார்கள்

Innamaa yastajeebul lazeena yasma'oon; walmawtaa yab'asuhumul laahu summa ilaihi yurja'oon

எவர்கள் (உங்களுக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உங்களை) ஏற்றுக் கொள்வார்கள். (ஆனால், இந்த காஃபிர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
கூறினர்
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா
عَلَيْهِ
அவர் மீது
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّهِۦۚ
அவருடைய இறைவன்
قُلْ
கூறுவீராக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
قَادِرٌ
ஆற்றலுடையவன்
عَلَىٰٓ
மீது
أَن يُنَزِّلَ
அவன் இறக்குவது
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானோர்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa qaaloo law laa nuzzila 'alaihi Aayatum mir Rabbih; qul innal laaha qaadirun 'alaaa ai yunazzila Aayatanw wa laakinna aksarahum laa ya'lamoon

("நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கி வைக்க வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிந்து கொள்வதில்லை.

Tafseer

وَمَا
இல்லை
مِن دَآبَّةٍ
ஓர் ஊர்வன
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا طَٰٓئِرٍ
இன்னும் இல்லை/பறவை
يَطِيرُ
பறக்கும்
بِجَنَاحَيْهِ
தன் இரு இறக்கைகள்
إِلَّآ
தவிர
أُمَمٌ
படைப்புகளே
أَمْثَالُكُمۚ
உங்களைப் போன்ற(வர்கள்)
مَّا فَرَّطْنَا
நாம் விடவில்லை
فِى ٱلْكِتَٰبِ
புத்தகத்தில்
مِن
இருந்து
شَىْءٍۚ
எதையும்
ثُمَّ
பிறகு
إِلَىٰ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
يُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவார்கள்

Wa maa min daaabbatin fil ardi wa laa taaa'iriny yateeru bijanaahaihi illaaa umamun amsaalukum; maa farratnaa fil Kitaabi min shai'in summa ilaa Rabbihim yuhsharoon

பூமியில் ஊர்ந்து திரியக் கூடியவைகளும், தன்னுடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவைகளும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) அன்றி வேறில்லை. (இவைகளில்) ஒன்றையுமே (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர் (ஒரு நாளில்) இவைகளும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
صُمٌّ
செவிடர்கள்
وَبُكْمٌ
இன்னும் ஊமையர்கள்
فِى ٱلظُّلُمَٰتِۗ
இருள்களில்
مَن يَشَإِ
எவரை/நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
يُضْلِلْهُ
வழிகெடுக்கிறான்/அவரை
وَمَن يَشَأْ
இன்னும் எவரை/நாடுகிறான்
يَجْعَلْهُ
ஆக்குகிறான்/அவரை
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
مُّسْتَقِيمٍ
நேரானது

Wallazeena kazzaboo bi Aayaatinaa summunw wa bukmun fiz zulumaat; mai yasha il laahu yudlilh; wa mai yashaa yaj'alhu 'alaa Siraatim Mustaqeem

எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார் களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்லவிட்டு விடுகின்றான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَرَءَيْتَكُمْ
அறிவியுங்கள்
إِنْ أَتَىٰكُمْ
வந்தால்/உங்களுக்கு
عَذَابُ ٱللَّهِ
அல்லாஹ்வின் வேதனை
أَوْ
அல்லது
أَتَتْكُمُ
வந்தால்/உங்களுக்கு
ٱلسَّاعَةُ
காலம்
أَغَيْرَ
அல்லாதவர்களையா?
ٱللَّهِ
அல்லாஹ்
تَدْعُونَ
அழைப்பீர்கள்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qaul ara'aytakum in ataakum 'azaabul laahi aw atatkumus Saa'atu a-ghairal laahi tad'oona in kuntum saadiqeen

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறும்) நீங்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவைகளையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்.)

Tafseer