Skip to main content

قُلْ
கூறுவீராக
سِيرُوا۟
செல்லுங்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
ثُمَّ
பிறகு
ٱنظُرُوا۟
பாருங்கள்
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்

Qul seeroo fil ardi summan zuroo kaifa kaana 'aaqibatul mukazzibeen

(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று கூறுங்கள்.

Tafseer

قُل
கூறுவீராக
لِّمَن
யாருக்குரியன?
مَّا فِى
எவை/வானங்களில்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
قُل
கூறுவீராக
لِّلَّهِۚ
அல்லாஹ்வுக்குரியன
كَتَبَ
கடமையாக்கினான்
عَلَىٰ نَفْسِهِ
தன் மீது
ٱلرَّحْمَةَۚ
கருணை புரிவதை
لَيَجْمَعَنَّكُمْ
நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
إِلَىٰ يَوْمِ
மறுமை நாளில்
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِۚ
அதில்
ٱلَّذِينَ
எவர்கள்
خَسِرُوٓا۟
நஷ்டமாக்கினர்
أَنفُسَهُمْ
தங்களை
فَهُمْ
அவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Qul limam maa fis samaawaati wal ardi qul lillaah; kataba 'alaa nafsihir rahmah; la yajma 'annakum ilaa Yawmil Qiyaamati laa raiba feeh; allazeena khasirooo anfusahum fahum laa yu'minoon

(அன்றி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?" என நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) "அல்லாஹ்வுக்குரியனவே!" என்று கூறுங்கள். அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். (ஆகவேதான் உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கின்றான். எனினும்) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதனை) நம்பவே மாட்டார்கள்.

Tafseer

وَلَهُۥ
அவனுக்குரியனவே
مَا
எவை
سَكَنَ
தங்கியன
فِى ٱلَّيْلِ
இரவில்
وَٱلنَّهَارِۚ
இன்னும் பகலில்
وَهُوَ
அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa lahoo maa sakana fillaili wannahaar; wa Huwas Samee'ul Aleem

(வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَغَيْرَ
அல்லாதவரையா?
ٱللَّهِ
அல்லாஹ்
أَتَّخِذُ
எடுத்துக்கொள்வேன்
وَلِيًّا
பாதுகாவலனாக
فَاطِرِ
படைப்பாளன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَهُوَ
அவன்தான்
يُطْعِمُ
உணவளிக்கிறான்
وَلَا يُطْعَمُۗ
அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை
قُلْ
கூறுவீராக
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أُمِرْتُ
கட்டளையிடப்பட்டுள்ளேன்
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென
أَوَّلَ
முதலாமவனாக
مَنْ
எவர்
أَسْلَمَۖ
பணிந்தார்
وَلَا تَكُونَنَّ
நீர் ஆகிவிடாதீர்
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Qul aghairal laahi attakhizu waliyyan faatiris samaawaati wal ardi wa Huwa yut'imu wa laa yut'am; qul inneee umirtu an akoona awwala man salama wa laa takoonanna minal mushrikeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வை அன்றி (மற்றெவரையும் என்னை) பாதுகாப்பவனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கின்றான்; அவனுக்கு யாரும் அளிப்பதில்லை. (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
إِنْ عَصَيْتُ
நான் மாறுசெய்தால்
رَبِّى
என் இறைவனுக்கு
عَذَابَ
வேதனையை
يَوْمٍ
ஒரு நாளின்
عَظِيمٍ
மகத்தானது

Qul inneee akhaafu in 'asaitu Rabbee 'azaaba Yawmin 'Azeem

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்."

Tafseer

مَّن
எவர்
يُصْرَفْ
தடுக்கப்படும்
عَنْهُ
அவரை விட்டு
يَوْمَئِذٍ
அந்நாளில்
فَقَدْ رَحِمَهُۥۚ
திட்டமாக/அருள்புரிந்தான்/அவருக்கு
وَذَٰلِكَ ٱلْفَوْزُ
இதுதான்/வெற்றி
ٱلْمُبِينُ
தெளிவானது

Mai yusraf 'anhu Yawma'izin faqad rahimah; wa zaalikal fawzul mubeen

அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள்புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.

Tafseer

وَإِن يَمْسَسْكَ
தொட்டால்/உம்மை
ٱللَّهُ
அல்லாஹ்
بِضُرٍّ
ஒரு சிரமத்தைக் கொண்டு
فَلَا
அறவே இல்லை
كَاشِفَ لَهُۥٓ
நீக்குபவர்/அதை
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
وَإِن يَمْسَسْكَ
தொட்டால்/உம்மை
بِخَيْرٍ
ஒரு நன்மையைக்கொண்டு
فَهُوَ
அவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீது
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa iny-yamsaskal laahu bidurrin falaaa kaashifa lahoo illaa Huwa wa iny-yamsaska bikhairin fa Huwa 'alaa kulli shai'in Qadeer

(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குபவர்கள் அவனையன்றி வேறெவருமில்லை. உங்களுக்கு யாதொரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

Tafseer

وَهُوَ
அவன்தான்
ٱلْقَاهِرُ
ஆதிக்கமுடையவன்
فَوْقَ
மேல்
عِبَادِهِۦۚ
தன் அடியார்கள்
وَهُوَ
அவன்தான்
ٱلْحَكِيمُ
ஞானவான்
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிந்தவன்

Wa Huwal gaahiru fawqa 'ibaadih; wa Huwal Hakeemul Khabeer

அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி, அவன்தான் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَىُّ شَىْءٍ
எந்த/ஒரு பொருள்
أَكْبَرُ
மிகப் பெரியது
شَهَٰدَةًۖ
சாட்சியால்
قُلِ
கூறுவீராக
ٱللَّهُۖ
அல்லாஹ்
شَهِيدٌۢ
சாட்சியாளன்
بَيْنِى
எனக்கிடையில்
وَبَيْنَكُمْۚ
இன்னும் உங்களுக்கிடையில்
وَأُوحِىَ
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَىَّ
எனக்கு
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
لِأُنذِرَكُم
நான் எச்சரிப்பதற்காக/உங்களை
بِهِۦ
இதன்மூலம்
وَمَنۢ
இன்னும் எவர்
بَلَغَۚ
அது சென்றடைந்தது
أَئِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَتَشْهَدُونَ
சாட்சி கூறுகிறீர்கள்
أَنَّ مَعَ
நிச்சயமாக
ٱللَّهِ
அல்லாஹ் உடன்
ءَالِهَةً
வணங்கப்படும் கடவுள்கள்
أُخْرَىٰۚ
வேறு
قُل
கூறுவீராக
لَّآ أَشْهَدُۚ
சாட்சி கூறமாட்டேன்
قُلْ
கூறுவீராக
إِنَّمَا هُوَ
அவனெல்லாம்
إِلَٰهٌ
வணங்கப்படும் ஒரு கடவுள்
وَٰحِدٌ
ஒருவன்
وَإِنَّنِى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
விலகியவன்
مِّمَّا تُشْرِكُونَ
எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்

Qul ayyu shai'in akbaru shahaadatan qulil laahu shaheedum bainee wa bainakum; wa oohiya ilaiya haazal Qur'aanu li unzirakum bihee wa mam balagh; a'innakum latashhadoona anna ma'al laahi aalihatan ukhraa; qul laaa ashhad; qul innamaa Huwa Ilaahunw Waahidunw wa innanee baree'um mimmaa tushrikoon

(நபியே!) "சாட்சிகளில் மிகப் பெரியது எது?" என நீங்கள் அவர்களைக்) கேளுங்கள். (அவர்களால் என்ன கூறமுடியும்? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கின்றான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக (உண்மையாகவே) நீங்கள் உறுதியாகக் கூறுவீர்களா?" என்றும் (அவர்களை) நீங்கள் கேளுங்கள். (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! "அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!" என்று நீங்கள் கூறி "நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை மெய்யாகவே நான் வெறுக்கின்றேன்" என்றும் கூறுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
يَعْرِفُونَهُۥ
அறிவார்கள்/அதை
كَمَا
போல்
يَعْرِفُونَ
அறிவார்கள்
أَبْنَآءَهُمُۘ
குழந்தைகளை/தங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தார்கள்
أَنفُسَهُمْ
தங்களுக்கு
فَهُمْ
அவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Allazeena aatainaa humul Kitaaba ya'rifoonahoo kamaa ya'rifoona abnaaa'ahum; allazeena khasirooo anfusahum fahum laa yu'minoon

எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (நமது தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தாம் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.

Tafseer