Skip to main content

أَمْوَٰتٌ
இறந்தவர்கள்
غَيْرُ
அல்லர்
أَحْيَآءٍۖ
உயிருள்ளவர்கள்
وَمَا يَشْعُرُونَ
இன்னும் அறியமாட்டார்கள்
أَيَّانَ
எப்போது
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்

Amwaatun ghairu ahyaaa'inw wa maa yash'uroona aiyaana yub'asoon

(அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியாது. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?)

Tafseer

إِلَٰهُكُمْ
(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்
إِلَٰهٌ
இறைவன்
وَٰحِدٌۚ
ஒரே ஒருவன்
فَٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
قُلُوبُهُم
உள்ளங்கள்/அவர்களுடைய
مُّنكِرَةٌ
நிராகரிக்கின்றன
وَهُم
இன்னும் அவர்கள்
مُّسْتَكْبِرُونَ
பெருமையடிக்கிறார்கள்

Illahukum Ilaahunw Waahid; fallazeena laa yu'minoona bil Aakhirati quloobuhum munkiratunw wa hum mustakbiroon

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. அன்றி, அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமை யடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

Tafseer

لَا جَرَمَ
சந்தேகமே இல்லை
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
مَا يُسِرُّونَ
எதை/மறைக்கிறார்கள்
وَمَا يُعْلِنُونَۚ
இன்னும் எதை/வெளிப் படுத்துகிறார்கள்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُسْتَكْبِرِينَ
பெருமையடிப்ப வர்களை

Laa jarama annal laaha ya'lamu maa yusirrona wa ma yu'linoon; innahoo laa yuhibbul mustakbireen

நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُم
அவர்களிடம்
مَّاذَآ
என்ன
أَنزَلَ
இறக்கினான்
رَبُّكُمْۙ
உங்கள் இறைவன்
قَالُوٓا۟
கூறினர்
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Wa izaa qeela lahum maazaaa anzala Rabbukum qaaloo asaateerul awwaleen

(நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) "உங்களுடைய இறைவன் என்ன இறக்கினான்" என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் "(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைதான்" என்று கூறுகின்றனர்.

Tafseer

لِيَحْمِلُوٓا۟
இவர்கள்சுமப்பதற்காக
أَوْزَارَهُمْ
தங்கள் (பாவச்)சுமைகளை
كَامِلَةً
முழுமையாக
يَوْمَ ٱلْقِيَٰمَةِۙ
மறுமை நாளில்
وَمِنْ
இன்னும் இருந்து
أَوْزَارِ
சுமைகள்
ٱلَّذِينَ
எவர்கள்
يُضِلُّونَهُم
வழிகெடுக்கின்றனர்/அவர்களை
بِغَيْرِ
இன்றி
عِلْمٍۗ
கல்வி
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
سَآءَ
மிகக் கெட்டது
مَا يَزِرُونَ
எது/சுமப்பார்கள்

Liyahmilooo awzaarahum kaamilatany Yawmal Qiyaamati wa min awzaaril lazeena yudilloonahum bighairi 'ilm; alaa saaa'a maa yaziroon

மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?

Tafseer

قَدْ
திட்டமாக
مَكَرَ
சூழ்ச்சி செய்தனர்
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னர்
فَأَتَى
ஆகவே வந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
بُنْيَٰنَهُم
கட்டடத்திற்கு/அவர்களின்
مِّنَ
இருந்து
ٱلْقَوَاعِدِ
அடித்தளங்கள்
فَخَرَّ
விழுந்தது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلسَّقْفُ
முகடு
مِن
இருந்து
فَوْقِهِمْ
அவர்களுக்கு மேல்
وَأَتَىٰهُمُ
இன்னும் வந்தது/அவர்களுக்கு
ٱلْعَذَابُ
வேதனை
مِنْ حَيْثُ
விதத்தில்
لَا يَشْعُرُونَ
அறிய (உணர) மாட்டார்கள்

Qad makaral lazeena min qablihim fa atal laahu bunyaa nahum minal qawaa'idi fakharra 'alaihimus saqfu min fawqihim wa ataahumul 'azaabu min haisu laa yash'uroon

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது.

Tafseer

ثُمَّ
பிறகு
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
يُخْزِيهِمْ
இழிவு படுத்துவான்/அவர்களை
وَيَقُولُ
கூறுவான்
أَيْنَ
எங்கே?
شُرَكَآءِىَ
என் இணைகள்
ٱلَّذِينَ
எவர்கள்
كُنتُمْ
இருந்தீர்கள்
تُشَٰٓقُّونَ
தர்க்கிப்பீர்கள்
فِيهِمْۚ
அவர்கள் விஷயத்தில்
قَالَ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
ٱلْعِلْمَ
கல்வி
إِنَّ
நிச்சயமாக
ٱلْخِزْىَ
இழிவு
ٱلْيَوْمَ
இன்று
وَٱلسُّوٓءَ
இன்னும் தண்டனை
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது

Summa Yawmal Qiyaamati yukhzeehim wa yaqoolu aina shurakaaa'iyal lazeena kuntum tushaaaqqoona feehim; qaalal lazeena ootul 'ilma innal khizyal Yawma wassooo'a 'alal kaafireen

பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி "நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்பான். அச்சமயம் (இதனை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் "இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் மீதுதான்" என்று கூறுவார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
تَتَوَفَّىٰهُمُ
உயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
ظَالِمِىٓ
தீங்கிழைத்தவர்களாக
أَنفُسِهِمْۖ
தங்களுக்குத் தாமே
فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ
பணிந்து விட்டார்கள்
مَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
نَعْمَلُ
செய்வோம்
مِن سُوٓءٍۭۚ
ஒரு தீமையையும்
بَلَىٰٓ
அவ்வாறல்ல
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِمَا كُنتُمْ
எவற்றை/இருந்தீர்கள்/செய்வீர்கள்

Allazeena tatawaf faahu mul malaaa'ikatu zaalimeee anfusihim fa alqawus salama maa kunnaa na'malu min sooo'; balaaa innal laaha 'aleemum bimaa kuntum ta'maloon

தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை மலக்குகள் கைப்பற்றும்பொழுது (அவர்கள்) "நாங்கள் யாதொரு குற்றமும் செய்யவில்லை" என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென மலக்குகளிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு மலக்குகள்) "அன்று! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தே இருக்கிறான்" (என்று பதிலளிப்பார்கள்.)

Tafseer

فَٱدْخُلُوٓا۟
ஆகவே நுழையுங்கள்
أَبْوَٰبَ
வாசல்களில்
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
فِيهَاۖ
அதில்
فَلَبِئْسَ
கெட்டுவிட்டது
مَثْوَى
தங்குமிடம்
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்

Fadkhulooo abwaaba jahannama khaalideena feeha falabi'sa maswal mutakab bireen

(பின்னும் இவர்களை நோக்கி) "நரகத்தின் வாயில்களில் நீங்கள் புகுந்து என்றென்றுமே அதில் நிலைத்து விடுங்கள்" (என்று கூறுவார்கள்.) பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.

Tafseer

وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
لِلَّذِينَ
எவர்களுக்கு
ٱتَّقَوْا۟
அஞ்சினார்கள்
مَاذَآ
என்ன?
أَنزَلَ
இறக்கினான்
رَبُّكُمْۚ
உங்கள் இறைவன்
قَالُوا۟
கூறினார்கள்
خَيْرًاۗ
நன்மையை
لِّلَّذِينَ
எவர்களுக்கு
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தனர்
فِى هَٰذِهِ
இந்த
ٱلدُّنْيَا
உலகில்
حَسَنَةٌۚ
நன்மை
وَلَدَارُ
வீடுதான்
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
خَيْرٌۚ
மிக மேலானது
وَلَنِعْمَ
மிகச் சிறந்தது
دَارُ
வீடு
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களின்

Wa qeela lillazeenat taqaw maazaaa anzala Rabbukum; qaaloo khairaa; lillazeena absanoo fee haazihid dunyaa hasanah; wa la Daarul Aakhirati khair; wa lani'ma daarul muttaqeen

இறை அச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) "உங்கள் இறைவன் என்ன இறக்கிவைத்தான்" என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், "நன்மையையே (இறக்கி வைத்தான்)" என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறை அச்சமுடைய வர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது!

Tafseer