Skip to main content

وَٱلَّذِينَ
எவர்கள்
هَاجَرُوا۟
நாடு துறந்தார்கள்
فِى ٱللَّهِ
அல்லாஹ்விற்காக
مِنۢ بَعْدِ
பின்பு
مَا ظُلِمُوا۟
அவர்கள் அநீதியிழைக்கப்படுதல்
لَنُبَوِّئَنَّهُمْ
நிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்கு
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
حَسَنَةًۖ
அழகியதை
وَلَأَجْرُ
கூலிதான்
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَكْبَرُۚ
மிகப் பெரியது
لَوْ كَانُوا۟
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Wallazeena haajaroo fil laahi mim ba'di maa zulimoo lanubawwi' annahum fiddunyaa hasanatanw wa la ajrul Aakhirati akbar; law kaanoo ya'lamoon

(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

Tafseer

ٱلَّذِينَ صَبَرُوا۟
பொறுத்தவர்கள்
وَعَلَىٰ
மீதே
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்

Allazeena sabaroo wa 'alaa Rabbihim yatawak kaloon

இவர்கள்தாம் (கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
إِلَّا
தவிர
رِجَالًا
ஆடவர்களை
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
إِلَيْهِمْۚ
அவர்களுக்கு
فَسْـَٔلُوٓا۟
ஆகவே கேளுங்கள்
أَهْلَ ٱلذِّكْرِ
ஞானமுடையவர்களை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக

Wa maaa arsalnaa min qablika illaa rijaalan nooheee ilaihim; fas'alooo ahlaz zikri in kuntum laa ta'lamoon

(நபியே!) உங்களுக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தாம். ஆகவே, (இவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுங்கள்.)

Tafseer

بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
وَٱلزُّبُرِۗ
இன்னும் வேதங்கள்
وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
ٱلذِّكْرَ
ஞானத்தை
لِتُبَيِّنَ
(ஏ) தெளிவுபடுத்துவீர்
لِلنَّاسِ
அம்மக்களுக்காக
مَا نُزِّلَ
எது/இறக்கப்பட்டது
إِلَيْهِمْ
அவர்களுக்கு
وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
இன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்

Bilbaiyinaati waz Zubur; wa anzalnaaa ilaikaz Zikra litubaiyina linnaasi maa nuzzila ilaihim wa la'allahum yatafakkaroon

அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.

Tafseer

أَفَأَمِنَ
அச்சமற்றுவிட்ட(ன)ரா?
ٱلَّذِينَ
எவர்கள்
مَكَرُوا۟
சூழ்ச்சி செய்தனர்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
أَن يَخْسِفَ
சொருகிக் கொள்வான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِهِمُ ٱلْأَرْضَ
தங்களை/பூமியில்
أَوْ
அல்லது
يَأْتِيَهُمُ
வரும்/தங்களுக்கு
ٱلْعَذَابُ
வேதனை
مِنْ حَيْثُ
விதத்தில்
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்

Afa aminal lazeena makarus saiyi aati ai yakhsifal laahu bihimul arda aw yaaa tiyahumul 'azaabu min haisu laa yash'uroon

தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்யும் இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?

Tafseer

أَوْ يَأْخُذَهُمْ
அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை
فِى تَقَلُّبِهِمْ
பயணத்தில்/அவர்களுடைய
فَمَا هُم
அவர்கள் இல்லை
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக

Aw yaakhuzahum fee taqallubihim famaa hum bi mu'jizeen

அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் (அச்சமற்றி ருக்கின்றனரா? அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து இவர்கள் தப்பி ஓடி) அவனைத் தோற்கடித்து விட மாட்டார்கள்.

Tafseer

أَوْ
அல்லது
يَأْخُذَهُمْ
அவன் பிடித்துவிடுவதை/அவர்களை
عَلَىٰ تَخَوُّفٍ
கொஞ்சம் குறைத்து
فَإِنَّ
நிச்சயமாக
رَبَّكُمْ
உங்கள் இறைவன்
لَرَءُوفٌ
மகா இரக்கமானவன்
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்

Aw yaakhuzahum 'alaa takhawwuf; fa inna Rabbakum la Ra'oofur Raheem

அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய யாதொரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொள்ளமாட்டான் (என்றும் அச்சமற்று இருக்கின்றனரா? அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஆதலால், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.)

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
إِلَىٰ مَا
எதன் பக்கம்
خَلَقَ
படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِن شَىْءٍ
ஒருபொருளையேனும்
يَتَفَيَّؤُا۟
சாய்கின்றன
ظِلَٰلُهُۥ
அவற்றின் நிழல்கள்
عَنِ ٱلْيَمِينِ
வலப்புறமாக
وَٱلشَّمَآئِلِ
இன்னும் இடப்புறமாக
سُجَّدًا
சிரம் பணிந்தவையாக
لِّلَّهِ
அல்லாஹ்விற்கு
وَهُمْ دَٰخِرُونَ
அவை/ மிகப்பணிந்தவை

Awa lam yaraw ilaa maa khalaqal laahu min shai'iny-yatafaiya'u zilaaluhoo 'anil yameeni washshamaaa' ili sujjadal lillaahi wa hum daakhiroon

அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
يَسْجُدُ
சிரம் பணிகிறார்(கள்)
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியில்உள்ளவை
مِن دَآبَّةٍ
எல்லா உயிரினங்கள்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிப்பதில்லை

Wa lillaahi yasjudu maa fis samaawaati wa maa fil ardi min daaabbatinw walma laaa'ikatu wa hum laa yastakbiroon

வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.

Tafseer

يَخَافُونَ
பயப்படுகின்றனர்
رَبَّهُم
தங்கள் இறைவனை
مِّن فَوْقِهِمْ
தங்களுக்கு மேலுள்ள
وَيَفْعَلُونَ
இன்னும் செய்கின்றனர்
مَا
எதை
يُؤْمَرُونَ۩
ஏவபடுகின்றனர்

yakhaafoona Rabbahum min fawqihim wa yaf'aloona maa yu'maroon

அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர்.

Tafseer