Skip to main content

جَنَّٰتُ عَدْنٍ
சொர்க்கங்கள்/அத்ன்
يَدْخُلُونَهَا
அவர்கள் நுழைவார்கள்/அவற்றில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
لَهُمْ فِيهَا
அவர்களுக்கு/அதில்
مَا يَشَآءُونَۚ
எதை/நாடுவார்கள்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يَجْزِى
கூலி கொடுக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுக்கு

Jannaatu 'Adniny yadkhuloonahaa tajree min tahtihal anhaaru lahum feehaa maa yashaaa'oon; kazaalika yajzil laahul muttaqeen

(அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறை அச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ
எவர்கள்/உயிர்கைப்பற்றுகின்றனர்/அவர்களை
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
طَيِّبِينَۙ
நல்லவர்களாக
يَقُولُونَ
கூறுவார்கள்
سَلَٰمٌ
ஸலாம் (ஈடேற்றம்)
عَلَيْكُمُ
உங்களுக்கு
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்ததின் காரணமாக
تَعْمَلُونَ
செய்வீர்கள்

Allazeena tatawaf faahumul malaaa'ikatu taiyibeena yaqooloona salaamun 'alai kumud khulul Jannata bimaa kuntum ta'maloon

இத்தகையவர்களின் உயிரை மலக்குகள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) "ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சுவனபதிக்குச் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.

Tafseer

هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கிறார்களா?
إِلَّآ
தவிர
أَن تَأْتِيَهُمُ
வருவதை/தங்களிடம்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
أَوْ يَأْتِىَ
அவர்கள் வருவது
أَمْرُ
கட்டளை
رَبِّكَۚ
உம் இறைவனின்
كَذَٰلِكَ فَعَلَ
இவ்வாறே செய்தனர்
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
وَمَا ظَلَمَهُمُ
தீங்கிழைக்கவில்லை/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَٰكِن كَانُوٓا۟
எனினும்/இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக

Hal yanzuroona illaaa an taatiyahumul malaaa'ikatu aw yaatiya amru Rabbik; kazaalika fa'alal lazeena min qablihim; wa maa zalamahumul laahu wa laakin kaanoo anfusahum yazlimoon

(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் மலக்குகள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

فَأَصَابَهُمْ
ஆகவே அடைந்தன/அவர்களை
سَيِّـَٔاتُ
தீமைகள், தண்டனைகள்
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றின்
وَحَاقَ بِهِم
இன்னும் சூழ்ந்தது/அவர்களை
مَّا كَانُوا۟
எது/இருந்தனர்
بِهِۦ
அதைக் கொண்டு
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கின்றனர்

Fa asaabahum saiyi aatu maa 'amiloo wa haaqa bihim maa kaano bihee yastahzi'oon

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. அன்றி, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

Tafseer

وَقَالَ
கூறினர்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
أَشْرَكُوا۟
இணைவைத்தனர்
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَا عَبَدْنَا
வணங்கியிருக்க மாட்டோம்
مِن دُونِهِۦ
அவனையன்றி
مِن شَىْءٍ
எதையும்
نَّحْنُ
நாங்களும்
وَلَآ ءَابَآؤُنَا
இன்னும் மூதாதைகளும்/எங்கள்
وَلَا حَرَّمْنَا
இன்னும் தடுத்திருக்க மாட்டோம்
مِن دُونِهِۦ
அவனையன்றி
مِن شَىْءٍۚ
எதையும்
كَذَٰلِكَ
இவ்வாறே
فَعَلَ
செய்தார்(கள்)
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
فَهَلْ عَلَى
?/மீது
ٱلرُّسُلِ إِلَّا
தூதர்கள்/தவிர
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பது
ٱلْمُبِينُ
தெளிவாக

Wa qaalal lazeena ashrakoo law shaaa'al laahu ma 'abadnaa min doonihee min shai'in nahnu wa laaa aabaaa'unaa wa laa harramnaa min doonihee min shai'; kazaalika fa'alal lazeena min qablihim fahal 'alar Rusuli illal balaaghul mubeen

இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதனையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்." இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்களுக்கு (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.)

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
بَعَثْنَا
அனுப்பினோம்
فِى كُلِّ
எல்லாசமுதாயங்களில்
رَّسُولًا
ஒரு தூதரை
أَنِ ٱعْبُدُوا۟
என்று/வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَٱجْتَنِبُوا۟
இன்னும் விலகுங்கள், து£ரமாகுங்கள்
ٱلطَّٰغُوتَۖ
ஷைத்தானை விட்டு
فَمِنْهُم
அவர்களில்
مَّنْ
எவர்
هَدَى
நேர்வழி காட்டினான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّنْ
எவர்
حَقَّتْ
உறுதியாகி விட்டது
عَلَيْهِ
அவர் மீது
ٱلضَّلَٰلَةُۚ
வழிகேடு
فَسِيرُوا۟
ஆகவே சுற்றுங்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَٱنظُرُوا۟
இன்னும் பாருங்கள்
كَيْفَ
எவ்வாறு
كَانَ عَٰقِبَةُ
இருந்தது/முடிவு
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்

Wa laqad ba'asnaa fee kulli ummatir Rasoolan ani'budul laaha wajtanibut Taaghoota faminhum man hadal laahu wa minhum man haqqat 'alaihid dalaalah; faseeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul mukazzibeen

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலைபெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கிய வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.

Tafseer

إِن تَحْرِصْ
நீர் பேராசைப்பட்டால்
عَلَىٰ
மீது
هُدَىٰهُمْ
அவர்கள் நேர்வழி காட்டப்படுவது
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
مَن
எவரை
يُضِلُّۖ
வழிகெடுப்பார்
وَمَا
இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் எவரும்

In tahris 'alaa hudaahum fa innal laaha laa yahdee mai yudillu wa maa lahum min naasireen

(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பியபோதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை.

Tafseer

وَأَقْسَمُوا۟
சத்தியம் செய்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ் மீது
جَهْدَ أَيْمَٰنِهِمْۙ
அவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல்
لَا يَبْعَثُ
எழுப்ப மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن
எவர்
يَمُوتُۚ
இறக்கின்றார்
بَلَىٰ
அவ்வாறன்று
وَعْدًا
வாக்கு
عَلَيْهِ
அவன் மீது
حَقًّا
கடமையானது
وَلَٰكِنَّ
எனினும்
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa aqsamoo billaahi jahda aimaanihim laa yab'asul laahu mai yamoot; balaa wa'dan 'alaihi haqqanw wa laakinna aksaran naasi laa ya'lamoon

(நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறன்று; ("உங்களை உயிர்கொடுத்து எழுப்புவேன்" என்று) அவன் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.

Tafseer

لِيُبَيِّنَ
தெளிவுபடுத்துவதற்காக
لَهُمُ ٱلَّذِى
அவர்களுக்கு/எதை
يَخْتَلِفُونَ
முரண்படுகின்றனர்
فِيهِ
அதில்
وَلِيَعْلَمَ
இன்னும் அறிவதற்காக
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
أَنَّهُمْ كَانُوا۟
நிச்சயமாக அவர்கள்/இருந்தனர்
كَٰذِبِينَ
பொய்யர்களாக

Liyubaiyina lahumul lazee yakhtalifoona feehi wa liya'lamal lazeena kafarooo annahum kaanoo kaazibeen

(இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக்கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அவ்வாறு அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டன்று.)

Tafseer

إِنَّمَا قَوْلُنَا
நம் கூற்றெல்லாம்
لِشَىْءٍ
ஒரு பொருளுக்கு
إِذَآ أَرَدْنَٰهُ
நாம் நாடினால்/அதை
أَن نَّقُولَ
நாம் கூறுவது
لَهُۥ
அதற்கு
كُن
ஆகு
فَيَكُونُ
ஆகிவிடும்

Innamaa qawlunaa lisha y'in izaa aradnaahu an naqoola lahoo kun fa yakoon

(ஏனென்றால்) நாம் யாதொரு வஸ்துவை (உண்டு பண்ண)க் கருதினால், அதற்காக நாம் கூறுவதெல்லாம் "ஆகுக!" என்பதுதான். உடனே (அது) ஆகிவிடுகிறது.

Tafseer