Skip to main content

وَقَالَ
கூறுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَا تَتَّخِذُوٓا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
إِلَٰهَيْنِ
இரு கடவுள்களை
ٱثْنَيْنِۖ
இரண்டு
إِنَّمَا هُوَ
அவனெல்லாம்
إِلَٰهٌ
கடவுள்
وَٰحِدٌۖ
ஒருவன்தான்
فَإِيَّٰىَ
ஆகவே எனக்கு
فَٱرْهَبُونِ
பயப்படுங்கள்/என்னை

Wa qaalal laahu laa tatta khizooo ilaahainis naini innamaa Huwa Ilaahunw Waahid; fa iyyaaya farhaboon

(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்களுடைய) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்படவேண்டாம்.)

Tafseer

وَلَهُۥ
அவனுக்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
وَلَهُ
இன்னும் அவனுக்கே
ٱلدِّينُ وَاصِبًاۚ
கீழ்ப்படிதல்/ என்றென்றும்
أَفَغَيْرَ
அல்லாததையா?
ٱللَّهِ
அல்லாஹ்
تَتَّقُونَ
அஞ்சுகிறீர்கள்

Wa lahoo maa fis samaawaati wal ardi wa lahud deenu waasibaa; afaghairal laahi tattaqoon

வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றிற்கா நீங்கள் பயப்படுகிறீர்கள்?

Tafseer

وَمَا بِكُم
எது/உங்களிடம்
مِّن نِّعْمَةٍ
அருட்கொடையில்
فَمِنَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
ثُمَّ
பிறகு
إِذَا مَسَّكُمُ
உங்களுக்கு ஏற்பட்டால்
ٱلضُّرُّ
துன்பம், தீங்கு
فَإِلَيْهِ
அவனிடமே
تَجْـَٔرُونَ
கதறுகிறீர்கள்

Wa maa bikum minni'matin faminal laahi summa izaa massakumud durru fa ilaihi taj'aroon

உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள்.

Tafseer

ثُمَّ إِذَا
பிறகு/நீக்கினால்
ٱلضُّرَّ
துன்பத்தை
عَنكُمْ
உங்களை விட்டு
إِذَا
அப்போது
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنكُم
உங்களில்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
يُشْرِكُونَ
இணைவைக்கின்றனர்

Summaa izaa kashafad durra 'ankum izaa fareequm minkum bi Rabbihim yushrikoon

பின்னர், அவன் உங்களுடைய கஷ்டங்களை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணைவைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர்.

Tafseer

لِيَكْفُرُوا۟
அவர்கள் நிராகரிப்பதற்காக
بِمَآ ءَاتَيْنَٰهُمْۚ
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
فَتَمَتَّعُوا۟ۖ
ஆகவே சுகமனுபவியுங்கள்
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்

Liyakfuroo bimaa aatainaahum; fatamatta'oo, faswfa ta'lamoon

நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால் அவர்களை நோக்கி "இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்துகொள்வீர்கள்" (என்று நபியே! கூறுங்கள்.)

Tafseer

وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
لِمَا لَا
அவர்கள் அறியாதவற்றுக்கு
نَصِيبًا
ஒரு பாகத்தை
مِّمَّا
இருந்து
رَزَقْنَٰهُمْۗ
கொடுத்தோம்/அவர்களுக்கு
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
لَتُسْـَٔلُنَّ
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
عَمَّا كُنتُمْ
பற்றி/இருந்தீர்கள்
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்

Wa yaj'aloona limaa laa ya'lamoona naseebam mimmaa razaqnnaahum; tallaahi latus'alunaa 'ammaa kuntum taftaroon

நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்களுடைய தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதனை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

Tafseer

وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
ٱلْبَنَٰتِ
பெண் பிள்ளைகளை
سُبْحَٰنَهُۥۙ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَلَهُم
தங்களுக்கு
مَّا يَشْتَهُونَ
எதை/விரும்புகின்றனர்

Wa yaj'aloona lillaahil banaati Subhaanahoo wa lahum maa yashtahoon

(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் உண்டெனக் கூறுகின்றனர். அவனோ (இதனை விட்டு) மிக்க பரிசுத்தமானவன். எனினும், அவர்களோ (தங்களுக்கு ஆண் மக்களையே) விரும்புகின்றனர்.

Tafseer

وَإِذَا بُشِّرَ
நற்செய்தி கூறப்பட்டால்
أَحَدُهُم
அவர்களில் ஒருவனுக்கு
بِٱلْأُنثَىٰ
பெண் குழந்தையைக் கொண்டு
ظَلَّ
ஆகிவிட்டது
وَجْهُهُۥ
அவனுடைய முகம்
مُسْوَدًّا وَهُوَ
கருத்ததாக/இன்னும் அவன்
كَظِيمٌ
துக்கப்படுகிறான்

Wa izaa bushshira ahaduhum bil unsaa zalla wajhuhoo muswaddanw wa huwa kazeem

அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறினால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்.

Tafseer

يَتَوَٰرَىٰ
மறைந்து கொள்கிறான்
مِنَ ٱلْقَوْمِ
மக்களை விட்டு
مِن سُوٓءِ
தீமையினால்
مَا بُشِّرَ
நற்செய்தி கூறப்பட்டது/தனக்கு
أَيُمْسِكُهُۥ
வைத்திருப்பதா?/அதை
عَلَىٰ هُونٍ
கேவலத்துடன்
أَمْ
அல்லது
يَدُسُّهُۥ
புதைப்பான்/அதை
فِى ٱلتُّرَابِۗ
மண்ணில்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
سَآءَ
கெட்டு விட்டது
مَا يَحْكُمُونَ
அவர்கள் தீர்ப்பளிப்பது

yatawaaraa minal qawmimin sooo'i maa bushshira bih; a-yumsikuhoo 'alaa hoonin am yadussuhoo fit turaab; alaa saaa'a maa yahkumoon

(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் "அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?" என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராதும் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா?

Tafseer

لِلَّذِينَ
எவர்களுக்கு
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
مَثَلُ
தன்மை
ٱلسَّوْءِۖ
கெட்டது
وَلِلَّهِ
இன்னும் அல்லாஹ்விற்கே
ٱلْمَثَلُ
தன்மை
ٱلْأَعْلَىٰۚ
மிக உயர்ந்தது
وَهُوَ
அவன்
ٱلْعَزِيزُ
மகா மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Lillazeena laa yu'minoona bil Aakhirati masalus saw'i wa lillaahil masalul a'laa; wa Huwal 'Azeezul Hakeem

(இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத் தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer