Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
ذِكْرًا كَثِيرًا
மிக அதிகம்

Yaaa aiyuhal lazeena aamanuz kurul laaha zikran kaseera

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.

Tafseer

وَسَبِّحُوهُ
இன்னும் அவனை துதியுங்கள்
بُكْرَةً
காலையிலும்
وَأَصِيلًا
மாலையிலும்

Wa sabbihoohu bukratanw wa aseela

காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்தான்
يُصَلِّى
அருள் புரிவான் -பிரார்த்திப்பார்(கள்)
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَمَلَٰٓئِكَتُهُۥ
இன்னும் அவனது வானவர்கள்
لِيُخْرِجَكُم
உங்களை அவன் வெளியேற்றுவதற்காக
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى ٱلنُّورِۚ
வெளிச்சத்தின் பக்கம்
وَكَانَ
அவன் இருக்கிறான்
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை யாளர்கள் மீது
رَحِيمًا
மகா கருணையுள்ளவனாக

Huwal lazee yusallee 'alaikum wa malaaa'ikatuhoo liyukhrijakum minazzulumaati ilan-noor wa kaana bilmu'mineena Raheemaa

அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டு வந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய மலக்குகளும் உங்களுக் காகப் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)களின் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

تَحِيَّتُهُمْ
அவர்களது முகமன்
يَوْمَ يَلْقَوْنَهُۥ
அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில்
سَلَٰمٌۚ
ஸலாம்
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرًا
கூலியை
كَرِيمًا
கண்ணியமான

Tahiyyatuhum Yawma yalqawnahoo salaamunw wa a'adda lahum ajran kareemaa

(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) "ஈடேற்றம் உண்டாவதாக" என்று ஆசீர்வதிப்பான். அன்றி, அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَٰكَ
நாம் உம்மை அனுப்பினோம்
شَٰهِدًا
சாட்சியாளராக(வும்)
وَمُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராகவும்
وَنَذِيرًا
அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்

Yaaa aiyuhan Nabiyyu innaaa arsalnaaka shaahidanw wa mubashshiranw wa nazeeraa

நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

Tafseer

وَدَاعِيًا
அழைப்பவராகவும்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
بِإِذْنِهِۦ
அவனது அனுமதிகொண்டு
وَسِرَاجًا
விளக்காகவும்
مُّنِيرًا
பிரகாசிக்கின்ற

Wa daa'iyan ilal laahi bi iznihee wa siraajam muneeraa

அன்றி, அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்).

Tafseer

وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
بِأَنَّ
நிச்சயமாக
لَهُم
அவர்களுக்கு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
فَضْلًا
அருள்
كَبِيرًا
மிகப் பெரிய

Wa bashshiril mu'mineena bi annna lahum minal laahi fadlan kabeera

ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

وَلَا تُطِعِ
கீழ்ப்படியாதீர்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
وَٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களுக்கும்
وَدَعْ
இன்னும் விட்டுவிடுவீராக!
أَذَىٰهُمْ
அவர்களின் தொந்தரவை
وَتَوَكَّلْ
இன்னும் சார்ந்து இருப்பீராக!
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வை
وَكَفَىٰ
போதுமான(வன்)
بِٱللَّهِ
அல்லாஹ்வே
وَكِيلًا
பொறுப்பாளன்

Wa laa tuti'il kaafireena walmunaafiqeena wa da'azaahum wa tawakkal 'alallaah; wa kafaa billaahi Wakeelaa

நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகருக்கும் நீங்கள் வழிப்படாதீர்கள். அவர்களால் (உங்களுக்கு) ஏற்படும் துன்பங்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (உங்களுடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
إِذَا نَكَحْتُمُ
நீங்கள் திருமணம் முடித்தால்
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்களை
ثُمَّ
பிறகு
طَلَّقْتُمُوهُنَّ
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்
مِن قَبْلِ
முன்னர்
أَن
நீங்கள் உறவு வைப்பதற்கு
تَمَسُّوهُنَّ
நீங்கள் உறவு வைப்பதற்கு அவர்களுடன்
فَمَا لَكُمْ
உங்களுக்கு இல்லை
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
مِنْ عِدَّةٍ
எவ்வித இத்தாவும்
تَعْتَدُّونَهَاۖ
நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய
فَمَتِّعُوهُنَّ
செல்வத்தை கொடுங்கள்! அவர்களுக்கு
وَسَرِّحُوهُنَّ
இன்னும் விடுவித்து விடுங்கள் அவர்களை
سَرَاحًا
விடுவித்தல்
جَمِيلًا
அழகிய முறையில்

Yaaa aiyuhal lazeena aamanooo izaa nakahtumul mu'minaati summa tallaqtu moohunna min qabli an tamas soohunna famaa lakum 'alaihinna min 'iddatin ta'taddoonahaa famatti'oohunna wa sarri hoohunna saraahan jameelaa

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே "தலாக்"குக் கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்க வேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
إِنَّآ
நிச்சயமாக நாம்
أَحْلَلْنَا
ஆகுமாக்கினோம்
لَكَ
உமக்கு
أَزْوَٰجَكَ
உமது மனைவிகளை(யும்)
ٱلَّٰتِىٓ
எவர்கள்
ءَاتَيْتَ
நீர் கொடுத்தீர்
أُجُورَهُنَّ
திருமணக் கொடைகளை அவர்களின்
وَمَا
இன்னும் எவர்கள்
مَلَكَتْ
சொந்தமாகிய(து)
يَمِينُكَ
உமது வலக்கரம்
مِمَّآ أَفَآءَ
அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து
عَلَيْكَ
உமக்கு
وَبَنَاتِ
மகள்களையும்
عَمِّكَ
உமது சாச்சாவின்
وَبَنَاتِ
மகள்களையும்
عَمَّٰتِكَ
உமது மாமியின்
وَبَنَاتِ
மகள்களையும்
خَالِكَ
உமது தாய் மாமாவின்
وَبَنَاتِ
மகள்களையும்
خَٰلَٰتِكَ
உமது காலாவின்
ٱلَّٰتِى
எவர்கள்
هَاجَرْنَ
ஹிஜ்ரா செய்தனர்
مَعَكَ
உம்முடன்
وَٱمْرَأَةً
இன்னும் ஒரு பெண்
مُّؤْمِنَةً
முஃமினான
إِن وَهَبَتْ
அன்பளிப்பு செய்தால்
نَفْسَهَا
தன்னை
لِلنَّبِىِّ
நபிக்கு
إِنْ أَرَادَ
நாடினால்
ٱلنَّبِىُّ
நபி(யும்)
أَن يَسْتَنكِحَهَا
அவளை மணமுடிக்க
خَالِصَةً
பிரத்தியோகமாகும்
لَّكَ
உமக்கு மட்டும்
مِن دُونِ
அன்றி
ٱلْمُؤْمِنِينَۗ
முஃமின்கள்
قَدْ
திட்டமாக
عَلِمْنَا
நாம் அறிவோம்
مَا فَرَضْنَا
நாம் கடமையாக்கியதை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
فِىٓ أَزْوَٰجِهِمْ
அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில்
وَمَا مَلَكَتْ
இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள்
لِكَيْلَا يَكُونَ
இருக்கக் கூடாது என்பதற்காக
عَلَيْكَ
உமக்கு
حَرَجٌۗ
சிரமம்
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
غَفُورًا
மன்னிப்பாளனாக,
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Yaaa aiyuhan Nabiyyu innaaa ahlalnaa laka azwaa jakal laatee aayaita ujoora hunna wa maa malakat yameenuka mimmaaa afaaa'al laahu 'alaika wa banaati 'ammika wa banaati 'ammaatika wa banaati khaalika wa banaati khaalaa tikal laatee haajarna ma'aka wamra atam mu'minatan inw wahabat nafsahaa lin Nabiyyi in araadan Nabiyyu ai yastan kihahaa khaalisatal laka min doonil mu'mineen; qad 'alim naa maa faradnaa 'alaihim feee azwaajihim wa maa malakat aimaanuhum likailaa yakoona 'alaika haraj; wa kaanal laahu Ghafoorar Raheema

நபியே! நிச்சயமாக நீங்கள் எவர்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்டீர்களோ அவர்களையும், அல்லாஹ் உங்களுக்கு (யுத்தத்தில்) அளித்து உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். உங்களது தந்தையின் சகோதரர்களின் பெண் மக்கள், உங்களது அத்தையின் பெண் மக்கள், உங்களது தாய்மாமனின் பெண் மக்கள், உங்களது தாயின் சகோதரியுடைய பெண் மக்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உங்களுடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். அன்றி) நம்பிக்கை கொண்ட யாதொரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். (நபியே!) இது சொந்தமாக உங்களுக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்று. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதனை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உங்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உங்களுக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer