Skip to main content

وَمَا كَانَ
இருக்கவில்லை
لَهُۥ
அவனுக்கு
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّن سُلْطَٰنٍ
அறவே அதிகாரம்
إِلَّا
இருந்தாலும்
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
مَن
எவர்
يُؤْمِنُ
நம்புகின்றார்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
مِمَّنْ
இருந்து/எவர்கள்
هُوَ
அவர்(கள்)
مِنْهَا
அதில்
فِى شَكٍّۗ
சந்தேகத்தில்
وَرَبُّكَ
உமது இறைவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
حَفِيظٌ
கண்காணிக்கின்றவன்

Wa maa kaana lahoo 'alaihim min sultaanin illaa lina'lama mai yu minu bil Aakhirati mimman huwa minhaa fee shakk; wa Rabbuka 'alaa kulli shai'in Hafeez

எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறிவித்து விடுவதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உங்களது இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்.

Tafseer

قُلِ
கூறுவீராக!
ٱدْعُوا۟
அழையுங்கள்!
ٱلَّذِينَ زَعَمْتُم
நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
لَا يَمْلِكُونَ
அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
مِثْقَالَ ذَرَّةٍ
அணு அளவுக்கு(ம்)
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَلَا فِى
பூமியிலும்
وَمَا لَهُمْ
அவர்களுக்கு இல்லை
فِيهِمَا
அவ்விரண்டிலும்
مِن شِرْكٍ
எவ்வித பங்கும்
وَمَا لَهُۥ
அவனுக்கு இல்லை
مِنْهُم
அவர்களில்
مِّن ظَهِيرٍ
உதவியாளர் எவரும்

Qulid 'ul lazeena za'amtum min doonil laahi laa yamlikoona misqaala zarratin fissamaawaati wa laa fil ardi wa maa lahum feehimaa min shirkinw wa maa lahoo minhum min zaheer

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவைகளை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானத்திலோ பூமியிலோ அவைகளுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி, அவைகளை படைப்பதில் இவைகளுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவைகளை படைப்பதில்) இவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.

Tafseer

وَلَا تَنفَعُ
பலன்தராது
ٱلشَّفَٰعَةُ
சிபாரிசு
عِندَهُۥٓ
அவனிடம்
إِلَّا لِمَنْ
தவிர/எவருக்கு
أَذِنَ
அவன் அனுமதி அளித்தானோ
لَهُۥۚ
அவருக்கே
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا فُزِّعَ
திடுக்கம் சென்றுவிட்டால்
عَن قُلُوبِهِمْ
அவர்களது உள்ளங்களை விட்டு
قَالُوا۟
கேட்பார்கள்
مَاذَا
என்ன?
قَالَ
கூறினான்
رَبُّكُمْۖ
உங்கள் இறைவன்
قَالُوا۟
கூறுவார்கள்
ٱلْحَقَّۖ
உண்மையைத்தான்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
ٱلْكَبِيرُ
மகா பெரியவன்

Wa laa tanfa'ush shafaa'atu 'indahooo illaa liman azina lah; hattaaa izaa fuzzi'a 'an quloobihim qaaloo maazaa qaala Rabbukum; qaalul haqq, wa Huwal 'Aliyul Kabeer

அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய யாதொரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) "உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?" என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் "(இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவனும் மிகப் பெரியவனும் ஆவான்" என்று கூறுவார்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
مَن
யார்?
يَرْزُقُكُم
உங்களுக்கு உணவளிப்பான்
مِّنَ
இருந்து
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
قُلِ
நீர் கூறுவீராக!
ٱللَّهُۖ
அல்லாஹ்தான்
وَإِنَّآ
நிச்சயமாக நாங்கள்
أَوْ
அல்லது
إِيَّاكُمْ
நீங்களா?
لَعَلَىٰ هُدًى
நேர்வழியில்
أَوْ
அல்லது
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Qul mai yarzuqukum minas samaawaati wal ardi qulil laahu wa innaaa aw iyyaakum la'alaa hudan aw fee dalaalim mubeen

(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) "வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?" என்று கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) "அல்லாஹ்தான்" என்று (நீங்களே) கூறி "மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் யார்? பகிரங்கமான தவறான வழியில் இருப்பவன் யார்? (நீங்களா அல்லது நானா?)" என்றும் கேளுங்கள்.

Tafseer

قُل
கூறுவீராக!
لَّا تُسْـَٔلُونَ
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
عَمَّآ أَجْرَمْنَا
நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி
وَلَا نُسْـَٔلُ
நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி

Qul laa tus'aloona 'ammaaa ajramnaa wa laa nus'alu 'ammaa ta'maloon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவைகளைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்"

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
بَيْنَنَا
நமக்கு மத்தியில்
رَبُّنَا
நமது இறைவன்
ثُمَّ
பிறகு
يَفْتَحُ
அவன் தீர்ப்பளிப்பான்
بَيْنَنَا
நமக்கு மத்தியில்
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
وَهُوَ
அவன்தான்
ٱلْفَتَّاحُ
உண்மையான தீர்ப்பளிப்பவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Qul yajma'u bainanaa Rabbunaa summa yaftahu bainanaa bilhaqq; wa Huwal Fattaahul 'Aleem

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "முடிவில் (மறுமை நாளில்) நமதிறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) மிக்க நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்."

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَرُونِىَ
எனக்கு அறிவியுங்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
أَلْحَقْتُم
நீங்கள் சேர்ப்பித்தீர்கள்
بِهِۦ
அவனுடன்
شُرَكَآءَۖ
இணைகளாக
كَلَّاۚ
ஒருக்காலும் முடியாது
بَلْ
மாறாக
هُوَ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Qul arooniyal lazeena alhaqtum bihee shurakaaa'a kallaa; bal Huwal Laahul 'Azeezul Hakeem

(அன்றி) "அல்லாஹ்வுக்கு இணையானவையென(க் கூறி) நீங்கள் அவனுக்குச் சமமாகச் சேர்த்து வைக்கின்றீர்களே அவைகளை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்" (என்று கேட்டு "அவனுக்கு ஒருவருமே இணை) இல்லை. அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வாகும்" என்று கூறுங்கள்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை நாம் அனுப்பவில்லை
إِلَّا
தவிர
كَآفَّةً
அனைவருக்கும்
لِّلنَّاسِ
மக்கள்
بَشِيرًا
நற்செய்தி சொல்பவராக(வும்)
وَنَذِيرًا
எச்சரிப்பவராகவும்
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa maaa arsalnaaka illaa kaaffatal linnaasi basheeranw wa nazeeranw wa laakinna aksaran naasi laa ya'lamoon

(நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை.

Tafseer

وَيَقُولُونَ
கூறுகின்றார்கள்
مَتَىٰ
எப்போது
هَٰذَا
இந்த
ٱلْوَعْدُ
வாக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen

(நபியே!) "நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.

Tafseer

قُل
கூறுவீராக!
لَّكُم
உங்களுக்கு
مِّيعَادُ
வாக்களிக்கப்பட்ட
يَوْمٍ
ஒரு நாள்
لَّا تَسْتَـْٔخِرُونَ
நீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள்
عَنْهُ
அதை விட்டும்
سَاعَةً
சிறிது நேரம்
وَلَا تَسْتَقْدِمُونَ
முந்தவும் மாட்டீர்கள்

Qul lakum mee'aadu Yawmil laa tastaakhiroona 'anhu saa'atanw wa la tastaqdimoon

அதற்கு நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்."

Tafseer