Skip to main content

وَإِذَآ أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
رَحْمَةً
ஒரு கருணையை
مِّنۢ بَعْدِ
பின்னர்
ضَرَّآءَ
ஒரு துன்பம்
مَسَّتْهُمْ
தீண்டியது/தங்களை
إِذَا
அப்போது
لَهُم
அவர்களுக்கு
مَّكْرٌ
ஒரு சூழ்ச்சி
فِىٓ ءَايَاتِنَاۚ
வசனங்களில்/நம்
قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்
أَسْرَعُ
மிகத் தீவிரமானவன்
مَكْرًاۚ
சூழ்ச்சி செய்வதில்
إِنَّ
நிச்சயமாக
رُسُلَنَا
நம் தூதர்கள்
يَكْتُبُونَ
பதிவு செய்கிறார்கள்
مَا
எதை
تَمْكُرُونَ
நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்

Wa izaaa azaqnan naasa rahmatam mim ba'di darraaa'a massat hum izaa lahum makrun feee aayaatinaa; qulil laahu asra'u makraa; inna rusulanaa yaktuboona maa tamkuroon

(இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி "உங்கள் சூழ்ச்சியைவிட) அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும்!" என்று கூறுங்கள். நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

Tafseer

هُوَ ٱلَّذِى
அவன்/எத்தகையவன்
يُسَيِّرُكُمْ
பயணிக்கவைக்கிறான் உங்களை
فِى ٱلْبَرِّ
நிலத்திலும்
وَٱلْبَحْرِۖ
இன்னும் நீரிலும்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا
போது
كُنتُمْ
இருக்கின்றீர்கள்
فِى ٱلْفُلْكِ
கப்பல்களில்
وَجَرَيْنَ
இன்னும் பயணித்தன
بِهِم
அவர்களை சுமந்து
بِرِيحٍ
ஒரு காற்றால்
طَيِّبَةٍ
நல்ல
وَفَرِحُوا۟
இன்னும் அவர்கள் மகிழ்ந்தனர்
بِهَا
அதன்மூலம்
جَآءَتْهَا
வந்தது/அவற்றுக்கு
رِيحٌ
காற்று
عَاصِفٌ
புயல்
وَجَآءَهُمُ
இன்னும் வந்தன அவர்களுக்கு
ٱلْمَوْجُ
அலைகள்
مِن
இருந்து
كُلِّ
எல்லா
مَكَانٍ
இடம்
وَظَنُّوٓا۟
இன்னும் அவர்கள் எண்ணினர்
أَنَّهُمْ
நிச்சயமாக தாம்
أُحِيطَ
அழிக்கப்பட்டோம்
بِهِمْۙ
தாம்
دَعَوُا۟
அவர்கள் அழைக்கின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
لَهُ
அவனுக்கு
ٱلدِّينَ
வழிபாட்டை
لَئِنْ أَنجَيْتَنَا
நீ பாதுகாத்தால்/எங்களை
مِنْ هَٰذِهِۦ
இதிலிருந்து
لَنَكُونَنَّ
நிச்சயமாக இருப்போம்
مِنَ ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்களில்

Huwal lazee yusaiyirukum fil barri walbahri hattaaa izaa kuntum fil fulki wa jaraina bihim bireeh in taiyibatinw wa farihoo bihaa jaaa'at haa reehun 'aasifunw wa jaaa'ahumul mawju min kulli makaaninw wa zannooo annahum uheeta bihim da'awul laaha mukhliseena lahud deena la'in anjaitanaa min haazihee lanakoonannna minash shaakireen

நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.

Tafseer

فَلَمَّآ
போது
أَنجَىٰهُمْ
அவன் பாதுகாத்தான்/அவர்களை
إِذَا
அப்போதே
هُمْ
அவர்கள்
يَبْغُونَ
வரம்பு மீறுகின்றனர்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّۗ
நியாயமின்றி
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
إِنَّمَا
எல்லாம்
بَغْيُكُمْ
வரம்புமீறுதல்/உங்கள்
عَلَىٰٓ أَنفُسِكُمۖ
உங்களுக்கே கேடானது
مَّتَٰعَ
சொற்ப இன்பமாகும்
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
ثُمَّ
பிறகு
إِلَيْنَا
நம் பக்கமே
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
فَنُنَبِّئُكُم
அறிவிப்போம்/உங்களுக்கு
بِمَا
எவற்றை
كُنتُمْ
இருந்தீர்கள்
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்

Falammaaa anjaahum izaa hum yabghoona fil ardi bighairil haqq; yaaa aiyuhannaasu innamaa bagh yukum 'alaaa anfusikum mataa'al hayaatid dunyaa summa ilainaa marji'ukum fanunabbi 'ukum bimaa kuntum ta'maloon

அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அடாது செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்களுடைய அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.

Tafseer

إِنَّمَا
எல்லாம்
مَثَلُ
உதாரணம்
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَا
உலகம்
كَمَآءٍ
நீரைப் போன்று
أَنزَلْنَٰهُ
நாம் இறக்கிய
مِنَ
இருந்து
ٱلسَّمَآءِ
மேகம்
فَٱخْتَلَطَ
கலந்து விட்டது
بِهِۦ
அதன் மூலம்
نَبَاتُ
தாவரம்
ٱلْأَرْضِ
பூமியின்
مِمَّا
எதிலிருந்து
يَأْكُلُ
புசிப்பார்(கள்)
ٱلنَّاسُ
மனிதர்கள்
وَٱلْأَنْعَٰمُ
இன்னும் கால்நடைகளும்
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ
போது
أَخَذَتِ
எடுத்தது
ٱلْأَرْضُ
பூமி
زُخْرُفَهَا
தன் அலங்காரத்தை
وَٱزَّيَّنَتْ
இன்னும் அலங்காரமானது
وَظَنَّ
இன்னும் எண்ணினார்(கள்)
أَهْلُهَآ
அதன் உரிமையாளர்கள்
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
قَٰدِرُونَ
ஆற்றல் பெற்றவர்கள்
عَلَيْهَآ
அவற்றின் மேல்
أَتَىٰهَآ
வந்தது அவற்றுக்கு
أَمْرُنَا
நம் கட்டளை
لَيْلًا
இரவில்
أَوْ
அல்லது
نَهَارًا
பகலில்
فَجَعَلْنَٰهَا
ஆக்கினோம்/அவற்றை
حَصِيدًا
வேரறுக்கப்பட்டதாக
كَأَن
போன்று
لَّمْ تَغْنَ
அவைஇருக்கவில்லை
بِٱلْأَمْسِۚ
நேற்று
كَذَٰلِكَ
இவ்வாறு
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Innamaa masalul hayaatid dunyaa kammaaa'in anzalnaahu minas sammaaa'i fakhtalata bihee nabaatul ardi mimmaa yaakulun naasu wal an'aam; hattaaa izaaa akhazatil ardu zukhrufahaa wazziyanat wa zanna ahluhaaa annahum qaadiroona 'alaihaaa ataahaaa amrunaa lailan aw nahaaran faja'alnaahaa haseedan ka allam taghna bil-ams; kazaalika nufassilul aayaati liqawminy yatafakkaroon

இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவைகளுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கதிர் வாங்கி) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளை(யினால் ஒரு ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவே யில்லையென்று எண்ணக் கூடியவாறு அவைகளை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் நம்முடைய வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
يَدْعُوٓا۟
அழைக்கிறான்
إِلَىٰ دَارِ
இல்லத்திற்கு
ٱلسَّلَٰمِ
ஈடேற்றத்தின்
وَيَهْدِى
இன்னும் வழிகாட்டுகிறான்
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
إِلَىٰ صِرَٰطٍ
பக்கம்/பாதை
مُّسْتَقِيمٍ
நேரானது

Wallaahu yad'ooo ilaa daaris salaami wa yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem

(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.

Tafseer

لِّلَّذِينَ
எவர்களுக்கு
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தனர்
ٱلْحُسْنَىٰ
மிக அழகிய கூலி
وَزِيَادَةٌۖ
இன்னும் அதிகம்
وَلَا يَرْهَقُ
இன்னும் சூழாது
وُجُوهَهُمْ
அவர்களுடைய முகங்கள்
قَتَرٌ
கவலை
وَلَا ذِلَّةٌۚ
அவர்கள் இழிவு
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Lillazeena ahsanul husnaa wa ziyaadahtunw wa laa yarhaqu wujoohahum qatarunw wa laa zillah; ulaaa'ika ashaabul jannnati hum feehaa khaalidoon

நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَسَبُوا۟
செய்தனர்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
جَزَآءُ سَيِّئَةٍۭ
கூலி/தீமையின்
بِمِثْلِهَا
அது போன்றதைக் கொண்டு
وَتَرْهَقُهُمْ
இன்னும் சூழும்/அவர்களை
ذِلَّةٌۖ
இழிவு
مَّا
இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
مِنْ عَاصِمٍۖ
பாதுகாப்பவர் ஒருவரும்
كَأَنَّمَآ
போன்று
أُغْشِيَتْ
சூழப்பட்டன
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
قِطَعًا
ஒரு பாகத்தால்
مِّنَ ٱلَّيْلِ
இரவின்
مُظْلِمًاۚ
இருண்டது
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wallazeena kasabus saiyi aati jazaaa'u saiyi'atim bimislihaa wa tarhaquhum zillah; maa lahum minal laahi min 'aasimin ka annamaaa ughshiyat wujoohuhum qita 'am minal laili muzlimaa; ulaaa'ika Ashaabun Naari hum feeha khaalidoon

தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! அவர்களை நிந்தனையும் வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தாம். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
نَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்போம் அவர்கள்
جَمِيعًا
அனைவரையும்
ثُمَّ
பிறகு
نَقُولُ
கூறுவோம்
لِلَّذِينَ
எவர்களுக்கு
أَشْرَكُوا۟
இணைவைத்தனர்
مَكَانَكُمْ
உங்கள் இடத்தில்
أَنتُمْ
நீங்களும்
وَشُرَكَآؤُكُمْۚ
இன்னும் இணைகள் உங்கள்
فَزَيَّلْنَا
நீக்கி விடுவோம்
بَيْنَهُمْۖ
அவர்களுக்கிடையில்
وَقَالَ
இன்னும் கூறுவார்
شُرَكَآؤُهُم
இணை(தெய்வங்)கள் அவர்களுடைய
مَّا كُنتُمْ
நீங்கள் இருக்கவில்லை
إِيَّانَا
எங்களை
تَعْبُدُونَ
வணங்குகிறீர்கள்

Wa yawma nahshuruhum jamee'an summa naqoolu lillazeena ashrakoo makaanakum antum wa shurakaaa'ukum; fazaiyalnaa bainahum wa qaala shurakaaa'uhum maa kuntum iyyaanaa ta'budoon

(விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணை வைத்து வணங்கியவர்களை நோக்கி "நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்" என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக வணங்கி வந்த அவைகள்) அவர்களை நோக்கி "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை" என்றும்,

Tafseer

فَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
شَهِيدًۢا
சாட்சியால்
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
وَبَيْنَكُمْ
இன்னும் உங்களுக்கிடையில்
إِن كُنَّا
நிச்சயம் நாங்கள்
عَنْ عِبَادَتِكُمْ
விட்டு/வழிபாடு/உங்கள்
لَغَٰفِلِينَ
கவனமற்றவர்களாகவே

Fakafaa billaahi shaheedam bainanaa wa bainakum in kunnaa 'an 'ibaadatikum laghaafileen

(இதற்கு) "நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கின்றான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை நாங்கள் அறியவும் மாட்டோம்" என்றும் கூறும்.

Tafseer

هُنَالِكَ
அங்கு
تَبْلُوا۟
சோதிக்கும்
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆத்மா
مَّآ
எவற்றை
أَسْلَفَتْۚ
அது முன்செய்தது
وَرُدُّوٓا۟
இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
مَوْلَىٰهُمُ
தங்கள் எஜமானன்
ٱلْحَقِّۖ
உண்மையானவன்
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا
எது
كَانُوا۟
இருந்தனர்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகின்றனர்

Hunaalika tabloo kullu nafsim maaa aslafat; wa ruddoo ilal laahi mawlaahu mul haqqi wa dalla 'anhum maa kaanoo yaftaroon

அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.

Tafseer