Skip to main content

قَالُوا۟
கூறினர்
وَأَقْبَلُوا۟
இன்னும் முன்னோக்கி வந்தனர்
عَلَيْهِم
அவர்கள் பக்கம்
مَّاذَا تَفْقِدُونَ
எதை?/இழக்கிறீர்கள்

Qaaloo wa aqbaloo 'alaihim maazaa tafqidoon

அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து "நீங்கள் எதை இழந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார்கள்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
نَفْقِدُ
இழக்கிறோம்
صُوَاعَ
குவளையை
ٱلْمَلِكِ
அரசருடைய
وَلِمَن
எவருக்கு?
جَآءَ
வந்தார்
بِهِۦ
அதைக் கொண்டு
حِمْلُ
சுமை
بَعِيرٍ
ஓர் ஒட்டகை
وَأَنَا۠
நான்
بِهِۦ
அதற்கு
زَعِيمٌ
பொறுப்பாளன்

Qaaloo nafqidu suwaa'al maliki wa liman jaaa'a bihee himlu ba'eerinw wa ana bihee za'eem

அதற்கவர்கள், "அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதனை எவர் (தேடிக்) கொடுத்தபோதிலும் அவருக்கு ஒரு ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி" என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
لَقَدْ عَلِمْتُم
நீங்கள்அறிந்திருக்கிறீர்கள்
مَّا جِئْنَا
நாங்கள் வரவில்லை
لِنُفْسِدَ
நாங்கள் விஷமம் செய்வதற்கு
فِى ٱلْأَرْضِ
இவ்வூரில்
وَمَا كُنَّا
இன்னும் நாங்கள் இருக்கவில்லை
سَٰرِقِينَ
திருடர்களாக

Qaaloo tallaahi laqad 'alimtum maa ji'na linufsida fil ardi wa maa kunnaa saariqeen

அதற்கு இவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். அன்றி, நாங்கள் திருடுபவர்களும் அல்ல" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟ فَمَا
கூறினர்/என்ன?/தண்டனை/அதன்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
كَٰذِبِينَ
பொய்யர்களாக

Qaaloo famaa jazaaa'u hooo in kuntum kaazibeen

அதற்கு அவர்கள் "நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டனர்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
جَزَٰٓؤُهُۥ
அதன் தண்டனை
مَن
எவர்
وُجِدَ
காணப்பட்டது
فِى رَحْلِهِۦ
சுமையில்/அவருடைய
فَهُوَ
அவரே
جَزَٰٓؤُهُۥۚ
அதற்குரிய தண்டனையாவார்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
நாம் தண்டிப்போம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Qaaloo jazaaa'uhoo manw wujida fee rahlihee fahuwa jazaaa'uh; kazaalika najziz zaalimeen

அதற்கவர்கள் "எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்" என்று கூறினார்கள்.

Tafseer

فَبَدَأَ
ஆரம்பித்தார்
بِأَوْعِيَتِهِمْ
மூட்டைகளில்/அவர்களின்
قَبْلَ
முன்பாக
وِعَآءِ
மூட்டைக்கு
أَخِيهِ
தன் சகோதரனின்
ثُمَّ ٱسْتَخْرَجَهَا
பிறகு/வெளிப்படுத்தினார்/அதை
مِن وِعَآءِ
மூட்டையிலிருந்து
أَخِيهِۚ
தன் சகோதரனின்
كَذَٰلِكَ
இப்படித்தான்
كِدْنَا
காரணம் செய்தோம்
لِيُوسُفَۖ
யூஸுஃபுக்கு
مَا كَانَ
அவர் இல்லை
لِيَأْخُذَ
எடுப்பவராக
أَخَاهُ
தன் சகோதரனை
فِى دِينِ
சட்டப்படி
ٱلْمَلِكِ
அரசரின்
إِلَّآ أَن
தவிர/நாடினால்
ٱللَّهُۚ
அல்லாஹ்
نَرْفَعُ
உயர்த்துகின்றோம்
دَرَجَٰتٍ
பதவிகளால்
مَّن
எவரை
نَّشَآءُۗ
விரும்புகின்றோம்
وَفَوْقَ
இன்னும் மேல்
كُلِّ
ஒவ்வொரு
ذِى عِلْمٍ
கல்வியுடையவர்
عَلِيمٌ
ஒரு கல்விமான்

Fabada-a bi-aw'iyatihim qabla wi'aaa'i akheehi summas takhrajahaa minw wi 'aaa'i akheeh; kazaalika kidnaa li Yoosuf; maa kaana liyaakhuza akhaahu fee deenil maliki illaaa any yashaaa'al laah; narfa'u darajaatim man nashaaa'; wa fawqa kulli zee 'ilmin 'Aleem

பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதனை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலன்றி அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் (இருந்தே) இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும் விட மேலான கல்விமான்.)

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
إِن يَسْرِقْ
அவர் திருடினால்
فَقَدْ سَرَقَ
திருடி விட்டான்
أَخٌ
ஒரு சகோதரன்
لَّهُۥ
அவருடைய
مِن قَبْلُۚ
முன்னர்
فَأَسَرَّهَا
மறைத்தார்/அதை
يُوسُفُ
யூஸுஃப்
فِى نَفْسِهِۦ
தன் உள்ளத்தில்
وَلَمْ يُبْدِهَا
வெளியாக்கவில்லை/அதை
لَهُمْۚ
அவர்களுக்கு
قَالَ
கூறினார்
أَنتُمْ
நீங்கள்
شَرٌّ
மிகவும் கெட்டவர்கள்
مَّكَانًاۖ
தரம்
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا تَصِفُونَ
நீங்கள் வருணிப்பதை

Qaaloo iny yasriq faqad saraqa akhul lahoo min qabl; fa asarrahaa Yoosufu fee nafsihee wa lam yubdihaa lahum; qaala antum sharrum makaananw wallaahu a'lamu bimaa tasifoon

(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
ஓ அதிபரே!
إِنَّ
நிச்சயமாக
لَهُۥٓ
அவருக்கு
أَبًا
ஒரு தந்தை
شَيْخًا كَبِيرًا
முதியவர்/பெரியவர்
فَخُذْ
எடுப்பீராக
أَحَدَنَا
எங்களில் ஒருவரை
مَكَانَهُۥٓۖ
இவருடைய இடத்தில்
إِنَّا
நிச்சயமாக நாம்
نَرَىٰكَ
காண்கிறோம்/உம்மை
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களில்

Qaaloo yaaa ayyuhal 'Azeezu inna lahooo aban shaikhan kabeeran fakhuz ahadanaa makaanahoo innaa naraaka minal muhsineen

அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) "அஜீஸை! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
مَعَاذَ
பாதுகாப்பானாக
ٱللَّهِ
அல்லாஹ்
أَن نَّأْخُذَ
நாம் பிடிப்பதை
إِلَّا مَن
தவிர/எவரை
وَجَدْنَا
கண்டோம்
مَتَٰعَنَا
நம் பொருளை
عِندَهُۥٓ
அவரிடம்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِذًا
அப்படி செய்தால்
لَّظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்தான்

Qaala ma'aazal laahi an naakhuza illaa manw wajadnaa mataa'anaa 'indahoo innaaa izal lazaalimoon

அதற்கவர், எவரிடம் நம்முடைய பொருள் காணப்பட்டதோ அவரை அன்றி (மற்றெவரையும்) பிடித்துக்கொள்ளாது அல்லாஹ் என்னை காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நான் பெரும் அநியாயக்காரனாகி விடுவேன்" என்று கூறிவிட்டார்.

Tafseer

فَلَمَّا
போது
ٱسْتَيْـَٔسُوا۟
அவர்கள் நம்பிக்கையிழந்தனர்
مِنْهُ
அவரிடம்
خَلَصُوا۟
அவர்கள் விலகினர்
نَجِيًّاۖ
ஆலோசித்தவர்களாக
قَالَ
கூறினார்
كَبِيرُهُمْ
பெரியவர் அவர்களில்
أَلَمْ تَعْلَمُوٓا۟
நீங்கள் அறியவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
أَبَاكُمْ
தந்தை/உங்கள்
قَدْ
திட்டமாக
أَخَذَ
வாங்கினார்
عَلَيْكُم
உங்களிடம்
مَّوْثِقًا
ஓர் உறுதிமானத்தை
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَمِن قَبْلُ
இன்னும் முன்னர்
مَا فَرَّطتُمْ
நீங்கள் தவறிழைத்ததை
فِى يُوسُفَۖ
யூஸுஃப் விஷயத்தில்
فَلَنْ أَبْرَحَ
ஆகவே நகர மாட்டேன்
ٱلْأَرْضَ
பூமியைவிட்டு
حَتَّىٰ
வரை
يَأْذَنَ
அனுமதியளிக்கின்றார்
لِىٓ أَبِىٓ
எனக்கு/என் தந்தை
أَوْ
அல்லது
يَحْكُمَ
தீர்ப்பளிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِىۖ
எனக்கு
وَهُوَ
அவன்
خَيْرُ
மிக மேலானவன்
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்

Falammas tay'asoo minhu khalasoo najiyyan qaala kabeeruhum alam ta'lamoon anna abaakum qad akhaza 'alaikum mawsiqam minal laahi wa min qablu maa farrattum fee Yoosufa falan abrahal arda hattaa yaazana leee abeee aw yahkumal laahu lee wa huwa khairul lhaakimeen

அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) "உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில் அல்லது அல்லாஹ் எனக்கு யாதொரு தீர்ப்பளிக்கும் வரையில் இங்கிருந்து நான் அகல மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்" என்று கூறினார்.

Tafseer