Skip to main content

قَالُوا۟ تَٱللَّهِ
கூறினர்/அல்லாஹ்வின் மீது சத்தியமாக
لَقَدْ ءَاثَرَكَ
மேன்மைப் படுத்திவிட்டான்/உம்மை
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْنَا
எங்களை விட
وَإِن كُنَّا
நிச்சயமாகஇருந்தோம்
لَخَٰطِـِٔينَ
தவறிழைப்பவர் களாகத்தான்

Qaaloo tallaahi laqad aasarakal laahu 'alainaa wa in kunnaa lakhaati'een

அதற்கவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
لَا
அறவே இல்லை
تَثْرِيبَ
பழிப்பு
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْيَوْمَۖ
இன்றைய தினம்
يَغْفِرُ
மன்னிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْۖ
உங்களை
وَهُوَ
அவன்
أَرْحَمُ
மகா கருணையாளன்
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்

Qaala laa tasreeba 'alaikumul yawma yaghfirul laahu lakum wa Huwa arhamur raahimeen

அதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார்.

Tafseer

ٱذْهَبُوا۟
செல்லுங்கள்
بِقَمِيصِى هَٰذَا
எனது சட்டையைக் கொண்டு/இந்த
فَأَلْقُوهُ
போடுங்கள்/அதை
عَلَىٰ وَجْهِ
முகத்தில்
أَبِى
என் தந்தையின்
يَأْتِ
அவர் வருவார்
بَصِيرًا
பார்வையுடையவராக
وَأْتُونِى
வாருங்கள்/என்னிடம்
بِأَهْلِكُمْ
உங்கள் குடும்பத்தினரைக் கொண்டு
أَجْمَعِينَ
அனைவரையும்

Izhaboo biqameesee haazaa fa alqoohu 'alaa wajhi abee yaati baseeranw waatoonee bi ahlikum ajma'een

"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார்.

Tafseer

وَلَمَّا فَصَلَتِ
பிரிந்த போது
ٱلْعِيرُ
பயணக் கூட்டம்
قَالَ
கூறினார்
أَبُوهُمْ
அவர்களின் தந்தை
إِنِّى
நிச்சயமாக நான்
لَأَجِدُ
உறுதியாக பெறுகிறேன்
رِيحَ
வாடையை
يُوسُفَۖ
யூஸுஃபுடைய
لَوْلَآ أَن
நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை

Wa lammaa fasalatil 'eeru qaala aboohum innee la ajidu reeha Yoosufa law laaa an tufannidoon

அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَفِى ضَلَٰلِكَ
உம் தவறில்தான்
ٱلْقَدِيمِ
பழையது

Qaaloo tallaahi innaka lafee dalaalikal qadeem

(இதனைச் செவியுற்ற அவருடைய மக்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் உங்களுடைய பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

فَلَمَّآ
போது
أَن جَآءَ
வந்தார்
ٱلْبَشِيرُ
நற்செய்தியாளர்
أَلْقَىٰهُ
போட்டார்/அதை
عَلَىٰ وَجْهِهِۦ
அவருடைய முகத்தில்
فَٱرْتَدَّ
அவர் திரும்பினார்
بَصِيرًاۖ
பார்வையுடையவராக
قَالَ
கூறினார்
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
لَّكُمْ
உங்களுக்கு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَعْلَمُ
அறிவேன்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَا لَا
நீங்கள் அறியாதவற்றை

Falammaaa an jaaa'albasheeru alqaahu 'alaa wajhihee fartadda baseeran qaala alam aqul lakum inneee a'lamu minal laahi maa laa ta'lamoon

அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
ٱسْتَغْفِرْ
மன்னிக்க கோருவீராக
لَنَا
எங்களுக்கு
ذُنُوبَنَآ
எங்கள் பாவங்களை
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
خَٰطِـِٔينَ
தவறிழைப்பவர்களாக

Qaaloo yaaa abaanas taghfir lanaa zunoo =banaaa innaa kunnaa khaati'een

(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
سَوْفَ أَسْتَغْفِرُ
மன்னிப்புக் கோருவேன்
لَكُمْ
உங்களுக்காக
رَبِّىٓۖ
என் இறைவனிடம்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Qaala sawfa astaghfiru lakum Rabbeee innahoo Huwal Ghafoorur Raheem

அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

Tafseer

فَلَمَّا
போது
دَخَلُوا۟
நுழைந்தனர்
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃபிடம்
ءَاوَىٰٓ
அரவணைத்தார்
إِلَيْهِ
தன் பக்கம்
أَبَوَيْهِ
தன் பெற்றோரை
وَقَالَ
இன்னும் கூறினார்
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
مِصْرَ
எகிப்தில்
إِن شَآءَ
நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக

Falammaa dakhaloo 'alaa Yoosufa aawaaa ilaihi abayaihi wa qaalad khuloo Misra inshaaa'al laahu aamineen

(பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று ("இறைவன் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று கூறினார்.

Tafseer

وَرَفَعَ
இன்னும் உயர்த்தினார்
أَبَوَيْهِ
தன் பெற்றோரை
عَلَى
மேல்
ٱلْعَرْشِ
(அரச) கட்டில்
وَخَرُّوا۟
இன்னும் விழுந்தனர்
لَهُۥ
அவருக்கு
سُجَّدًاۖ
சிரம் பணிந்தவர்களாக
وَقَالَ
இன்னும் கூறினார்
يَٰٓأَبَتِ
என் தந்தையே
هَٰذَا
இது
تَأْوِيلُ
விளக்கம்
رُءْيَٰىَ
என் கனவின்
مِن قَبْلُ
முன்னர்
قَدْ جَعَلَهَا
ஆக்கி விட்டான்/அதை
رَبِّى
என் இறைவன்
حَقًّاۖ
உண்மையாக
وَقَدْ أَحْسَنَ
நன்மை புரிந்திருக்கிறான்
بِىٓ
எனக்கு
إِذْ
போது
أَخْرَجَنِى
அவன் வெளியேற்றினான்/என்னை
مِنَ
இருந்து
ٱلسِّجْنِ
சிறை
وَجَآءَ
இன்னும் வந்தான்
بِكُم
உங்களைக் கொண்டு
مِّنَ
இருந்து
ٱلْبَدْوِ
கிராமம்
مِنۢ بَعْدِ
பின்னர்
أَن نَّزَغَ
பிரிவினையை உண்டு பண்ணினான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
بَيْنِى
எனக்கிடையில்
وَبَيْنَ
இன்னும் இடையில்
إِخْوَتِىٓۚ
என் சகோதரர்கள்
إِنَّ
நிச்சயமாக
رَبِّى
என் இறைவன்
لَطِيفٌ
மகா நுட்பமானவன்
لِّمَا يَشَآءُۚ
தான் நாடியதற்கு
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Wa raf'a abawaihi 'alal 'arshi wa kharroo lahoo sujjadaa; wa qaala yaaa abati haaza taaweelu ru'yaaya min qablu qad ja'alahaa Rabbee haqqaa; wa qad ahsana beee iz akhrajanee minas sijni wa jaaa'a bikum minal badwi mim ba'di an nazaghash Shaitaanu bainee wa baina ikhwatee; inna Rabbee lateeful limaa yashaaa'; innahoo Huwal 'Aleemul Hakeem

பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார்.

Tafseer