Skip to main content
bismillah

صٓۚ
ஸாத்
وَٱلْقُرْءَانِ
குர்ஆன் மீது சத்தியமாக!
ذِى ٱلذِّكْرِ
அறிவுரைகள் நிறைந்த

Saaad; wal-Qur-aani ziz zikr

ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக!

Tafseer

بَلِ
மாறாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
فِى عِزَّةٍ
பிடிவாதத்திலும்
وَشِقَاقٍ
முரண்பாட்டிலும்

Balil lazeena kafaroo fee 'izzatilnw wa shiqaaq

(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப் பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.

Tafseer

كَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
مِن قَبْلِهِم
இவர்களுக்கு முன்னர்
مِّن قَرْنٍ
பல தலைமுறை
فَنَادَوا۟
அழைத்தனர்
وَّلَاتَ
அந்த நேரம் அல்ல
حِينَ مَنَاصٍ
தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்

Kam ahlaknaa min qablihim min qarnin fanaadaw wa laata heena manaas

இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.

Tafseer

وَعَجِبُوٓا۟
ஆச்சரியப்பட்டனர்
أَن
வந்ததால்
جَآءَهُم
அவர்களிடம்
مُّنذِرٌ
ஓர் எச்சரிப்பாளர்
مِّنْهُمْۖ
அவர்களில் இருந்தே
وَقَالَ
கூறினர்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
هَٰذَا
இவர்
سَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்
كَذَّابٌ
ஒரு பெரும் பொய்யர்

Wa 'ajibooo an jaaa'a hum munzirum minhum wa qaalal kaafiroona haazaa saahirun kazzaab

(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்" என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.

Tafseer

أَجَعَلَ
இவர் ஆக்கிவிட்டாரா?
ٱلْءَالِهَةَ
தெய்வங்களை
إِلَٰهًا
தெய்வமாக
وَٰحِدًاۖ
ஒரே ஒரு
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
لَشَىْءٌ
ஒரு விஷயம்தான்
عُجَابٌ
ஆச்சரியமான

Aja'alal aalihata Ilaahanw Waahidan inna haazaa lashai'un 'ujaab

"என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,)

Tafseer

وَٱنطَلَقَ
சென்றனர்
ٱلْمَلَأُ
தலைவர்கள்
مِنْهُمْ
அவர்களில் உள்ள
أَنِ ٱمْشُوا۟
நீங்கள் சென்று விடுங்கள்
وَٱصْبِرُوا۟
உறுதியாக இருங்கள்!
عَلَىٰٓ ءَالِهَتِكُمْۖ
உங்கள் தெய்வங்கள் மீது
إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
لَشَىْءٌ
ஒரு விஷயம்தான்
يُرَادُ
நாடப்பட்ட

Wantalaqal mala-u minhum anim shoo wasbiroo 'alaaa aalihatikum innna haazaa lashai 'uny yuraad

அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, "இவரைவிட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது" என்று கூறிக்கொண்டே சென்று விட்டனர்.

Tafseer

مَا سَمِعْنَا
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
بِهَٰذَا
இதை
فِى ٱلْمِلَّةِ
மார்க்கத்தில்
ٱلْءَاخِرَةِ
வேறு
إِنْ هَٰذَآ
இது இல்லை
إِلَّا ٱخْتِلَٰقٌ
கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர

Maa sami'naa bihaazaa fil millatil aakhirati in haazaaa illakh tilaaq

"முன்னுள்ள வகுப்பார்களிலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை" என்றும்,

Tafseer

أَءُنزِلَ
இறக்கப்பட்டதா?
عَلَيْهِ
அவர் மீது
ٱلذِّكْرُ
வேதம்
مِنۢ بَيْنِنَاۚ
நமக்கு மத்தியில்
بَلْ
மாறாக
هُمْ
அவர்கள்
فِى شَكٍّ
சந்தேகத்தில்
مِّن ذِكْرِىۖ
எனது வேதத்தில்
بَل
மாறாக,
لَّمَّا يَذُوقُوا۟
அவர்கள் சுவைக்கவில்லை
عَذَابِ
எனது வேதனையை

'A-unzila 'alaihiz zikru mim baininaa; bal hum fee shakkim min Zikree bal lammaa yazooqoo 'azaab

"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.

Tafseer

أَمْ
?
عِندَهُمْ
அவர்களிடம்
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
رَحْمَةِ
அருளுடைய
رَبِّكَ
உமது இறைவனின்
ٱلْعَزِيزِ
கண்ணியமிக்க(வன்)
ٱلْوَهَّابِ
மகா கொடை வள்ளல்

Am'indahum khazaaa 'inu rahmati Rabbikal 'Azeezil Wahhab

(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?

Tafseer

أَمْ لَهُم
அவர்களுக்கு இருக்கின்றதா?
مُّلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَاۖ
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
فَلْيَرْتَقُوا۟
அவர்கள் ஏறட்டும்
فِى ٱلْأَسْبَٰبِ
வாசல்களில்

Am lahum mulkus samaawaati wal ardi wa maa bainahumaa falyartaqoo fil asbaab

அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவைகளின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலேறவும்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து ஸாத்
القرآن الكريم:ص
ஸஜ்தா (سجدة):24
ஸூரா (latin):Sad
ஸூரா:38
வசனம்:88
Total Words:732
Total Characters:3760
Number of Rukūʿs:5
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:38
Starting from verse:3970