Skip to main content

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
عَبْدَنَآ
நமது அடியார்
أَيُّوبَ
அய்யூபை
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
رَبَّهُۥٓ
தன் இறைவனை
أَنِّى
நிச்சயமாக நான்
مَسَّنِىَ
எனக்கு ஏற்படுத்தி விட்டான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
بِنُصْبٍ
களைப்பையும்
وَعَذَابٍ
வலியையும்

Wazkur 'abdanaaa Ayyoob; iz naada Rabbahooo annee massaniyash Shaitaanu binus binw wa 'azaab

(நபியே!) நமது அடியார் அய்யூபை நினைத்துப் பாருங்கள். அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது "நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறினார்.)

Tafseer

ٱرْكُضْ
அடிப்பீராக!
بِرِجْلِكَۖ
உமது காலால்
هَٰذَا
இது
مُغْتَسَلٌۢ
குளிக்கின்ற நீராகும்
بَارِدٌ
குளிர்ந்த(து)
وَشَرَابٌ
இன்னும் குடிக்கின்ற நீராகும்

Urkud birijlika haaza mughtasalum baaridunw wa sharaab

(அதற்கு நாம்) "உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்" (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) "இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்" என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)

Tafseer

وَوَهَبْنَا
நாம் கொடுத்தோம்
لَهُۥٓ
அவருக்கு
أَهْلَهُۥ
அவருடைய குடும்பத்தாரை(யும்)
وَمِثْلَهُم
அவர்கள் போன்றவர்களையும்
مَّعَهُمْ
அவர்களுடன்
رَحْمَةً
கருணையாகவும்
مِّنَّا
நம் புறத்தில் இருந்து
وَذِكْرَىٰ
இன்னும் ஓர் உபதேசமாக
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு

Wa wahabnaa lahoo ahlahoo wa mislahum ma'ahum rahmatam minna wa zikraa li ulil albaab

பின்னர், நம்முடைய அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள்புரிந்தோம்.

Tafseer

وَخُذْ
இன்னும் எடுப்பீராக
بِيَدِكَ
உமது கரத்தால்
ضِغْثًا
ஒரு பிடி புல்லை
فَٱضْرِب
அடிப்பீராக!
بِّهِۦ
அதன்மூலம்
وَلَا تَحْنَثْۗ
நீர் சத்தியத்தை முறிக்காதீர்!
إِنَّا
நிச்சயமாக நாம்
وَجَدْنَٰهُ
அவரைக் கண்டோம்
صَابِرًاۚ
பொறுமையாளராக
نِّعْمَ ٱلْعَبْدُۖ
அவர் சிறந்த அடியார்
إِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
أَوَّابٌ
அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர்

Wa khuz biyadika dighsan fadrib bihee wa laa tahnas, innaa wajadnaahu saabiraa; ni'mal 'abd; innahooo awwaab

"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.

Tafseer

وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
عِبَٰدَنَآ
நமது அடியார்களான
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
وَيَعْقُوبَ
யஃகூப்
أُو۟لِى ٱلْأَيْدِى
பலமும் உடையவர்களான
وَٱلْأَبْصَٰرِ
அகப்பார்வையும்

Wazkur 'ibaadanaaa Ibraaheema wa Is-haaqa wa Ya'qooba ulil-aydee walabsaar

(நபியே!) நமது அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூபையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் கொடையாளி களாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَخْلَصْنَٰهُم
அவர்களை மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம்
بِخَالِصَةٍ
சிறப்பைக் கொண்டு
ذِكْرَى
உபதேசம் எனும்
ٱلدَّارِ
மறுமையின்

Innaaa akhlasnaahum bi khaalisatin zikrad daar

மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம்.

Tafseer

وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
عِندَنَا
நம்மிடம்
لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
ٱلْأَخْيَارِ
மிகச்சிறந்தவர்களாகிய

Wa innahum 'indanaa laminal mustafainal akhyaar

அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடி யார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர்.

Tafseer

وَٱذْكُرْ
இன்னும் நினைவு கூறுவீராக
إِسْمَٰعِيلَ
இஸ்மாயீலையும்
وَٱلْيَسَعَ
அல்யசஉவையும்
وَذَا ٱلْكِفْلِۖ
துல்கிஃப்லையும்
وَكُلٌّ
எல்லோரும்
مِّنَ ٱلْأَخْيَارِ
மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்

Wazkur Ismaa'eela wal Yasa'a wa Zal-Kifli wa kullum minal akhyaar

(நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம்.

Tafseer

هَٰذَا
இது
ذِكْرٌۚ
ஒரு நினைவூட்டலாகும்
وَإِنَّ
நிச்சயமாக
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு
لَحُسْنَ
அழகிய
مَـَٔابٍ
மீளுமிடம்

Haazaa zikr; wa inna lilmuttaqeena lahusna ma aab

(மேற்கூறிய) இவைகளெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல உதாரணங்களாகும். நிச்சயமாக (இத்தகைய) இறை அச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு.

Tafseer

جَنَّٰتِ عَدْنٍ
அத்ன் சொர்க்கங்கள்
مُّفَتَّحَةً
திறக்கப்பட்டிருக்கும்
لَّهُمُ
அவர்களுக்காக
ٱلْأَبْوَٰبُ
வாசல்கள்

Jannaati 'adnim mufat tahatal lahumul abwaab

அது நிலையான சுவனபதியில் இருக்கிறது. அதன் வாசல்கள் (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும்.

Tafseer