Skip to main content

قُلْ
கூறுவீராக
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تُحِبُّونَ
நேசிப்பீர்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فَٱتَّبِعُونِى
என்னைப் பின்பற்றுங்கள்
يُحْبِبْكُمُ
உங்களைநேசிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَيَغْفِرْ لَكُمْ
இன்னும் மன்னிப்பான்/ உங்களுக்கு
ذُنُوبَكُمْۗ
உங்கள் பாவங்களை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Qul in kuntum tuhibboonal laaha fattabi' oonee yuhbibkumul laahu wa yaghfir lakum zunoobakum; wallaahu Ghafoorur Raheem

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."

Tafseer

قُلْ
கூறுவீராக
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَٱلرَّسُولَۖ
இன்னும் தூதருக்கு
فَإِن تَوَلَّوْا۟
(நீங்கள்) திரும்பினால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Qul atee'ul laaha war Rasoola fa in tawallaw fa innal laaha laa yuhibbul kaafireen

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ٱصْطَفَىٰٓ
தேர்ந்தெடுத்தான்
ءَادَمَ وَنُوحًا
ஆதமை/இன்னும் நூஹை
وَءَالَ
இன்னும் குடும்பத்தை
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
وَءَالَ عِمْرَٰنَ
இன்னும் இம்ரானின் குடும்பத்தை
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட

Innal laahas tafaaa Aadama wa Noohanw wa Aala Ibraaheema wa Aala Imraana 'alal 'aalameen

நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான்.

Tafseer

ذُرِّيَّةًۢ
ஒரு சந்ததி
بَعْضُهَا
அதில் சிலர்
مِنۢ بَعْضٍۗ
சிலரைச் சேர்ந்தவர்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Zurriyyatam ba'duhaa mim ba'd; wallaahu Samee'un 'Aleem

அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِذْ قَالَتِ
கூறியசமயம்
ٱمْرَأَتُ
மனைவி
عِمْرَٰنَ
இம்ரானுடைய
رَبِّ
என் இறைவா
إِنِّى
நிச்சயமாக நான்
نَذَرْتُ
நேர்ச்சை செய்தேன்
لَكَ
உனக்கு
مَا
எது
فِى بَطْنِى
என் வயிற்றில்
مُحَرَّرًا
அர்ப்பணிக்கப்பட்டதாக
فَتَقَبَّلْ
ஆகவே ஏற்றுக்கொள்
مِنِّىٓۖ
என்னிடமிருந்து
إِنَّكَ أَنتَ
நிச்சயமாக நீதான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்

Iz qaalatim ra atu 'Imraana Rabbi innee nazartu laka maa fee batnee muharraran fataqabbal minnee innaka Antas Samee'ul 'Aleem

இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,

Tafseer

فَلَمَّا وَضَعَتْهَا
போது/அவளைப் பெற்றெடுத்தாள்
قَالَتْ
கூறினாள்
رَبِّ
என் இறைவா
إِنِّى
நிச்சயமாக நான்
وَضَعْتُهَآ
அவளைப் பெற்றெடுத்தேன்
أُنثَىٰ
ஒரு பெண்ணாக
وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا وَضَعَتْ
அவள் பெற்றெடுத்ததை
وَلَيْسَ
இன்னும் இல்லை
ٱلذَّكَرُ
ஆண்
كَٱلْأُنثَىٰۖ
பெண்ணைப்போன்று
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
سَمَّيْتُهَا
அவளுக்குப் பெயரிட்டேன்
مَرْيَمَ
மர்யம்
وَإِنِّىٓ
இன்னும் நிச்சயமாக நான்
أُعِيذُهَا
அவளை பாதுகாக்கிறேன்
بِكَ
உன்னைக்கொண்டு
وَذُرِّيَّتَهَا
இன்னும் அவளுடைய சந்ததியை
مِنَ ٱلشَّيْطَٰنِ
இருந்து/ஷைத்தான்
ٱلرَّجِيمِ
விரட்டப்பட்டவன்

Falammaa waqa'athaa qaalat Rabbi innee wada'tuhaaa unsaa wallaahu a'lamu bimaa wada'at wa laisaz zakaru kalunsaa wa innee sammaituhaa Maryama wa innee u'eezuhaa bika wa zurriyyatahaa minash Shaitaanir Rajeem

அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்" என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு "மர்யம்" எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார்.

Tafseer

فَتَقَبَّلَهَا
ஆகவேஅவளைஏற்றான்
رَبُّهَا
அவளுடைய இறைவன்
بِقَبُولٍ
ஏற்பாக
حَسَنٍ
அழகியது
وَأَنۢبَتَهَا
இன்னும் அவளை வளர்த்தான்
نَبَاتًا
வளர்ப்பாக
حَسَنًا
அழகியது
وَكَفَّلَهَا
இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்
زَكَرِيَّاۖ
ஸகரிய்யாவை
كُلَّمَا دَخَلَ
நுழையும் போதெல்லாம்
عَلَيْهَا
அவளிடம்
زَكَرِيَّا
ஸகரிய்யா
ٱلْمِحْرَابَ
மாடத்தில்
وَجَدَ
பெற்றார்
عِندَهَا
அவளிடம்
رِزْقًاۖ
ஓர் உணவை
قَالَ
கூறினார்
يَٰمَرْيَمُ
மர்யமே!
أَنَّىٰ
எங்கிருந்து?
لَكِ
உனக்கு
هَٰذَاۖ
இது
قَالَتْ
கூறினாள்
هُوَ
இது
مِنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يَرْزُقُ
வழங்குவான்
مَن يَشَآءُ
எவர்/நாடுகிறான்
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Fataqabbalahaa Rabbuhaa biqaboolin hasaninw wa ambatahaa nabaatan hasananw wa kaffalahaa Zakariyyaa kullamaa dakhala 'alaihaa Zakariyyal Mihraaba wajada 'indahaa rizqan qaala yaa Maryamu annaa laki haazaa qaalat huwa min 'indil laahi innal laaha yarzuqu mai yashaaa'u bighairi hisaab

ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்.

Tafseer

هُنَالِكَ
அவ்விடத்தில்
دَعَا
பிரார்த்தித்தார்
زَكَرِيَّا
ஸகரிய்யா
رَبَّهُۥۖ
அவரின் இறைவனை
قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
هَبْ لِى
எனக்கு தா!
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
ذُرِّيَّةً
ஒரு சந்ததியை
طَيِّبَةًۖ إِنَّكَ
நல்லது/நிச்சயமாக நீ
سَمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلدُّعَآءِ
பிரார்த்தனை

Hunaaalika da'aa Zakariyyaa Rabbahoo qaala Rabbi hab lee mil ladunka zurriyyatan taiyibatan innaka samee'ud du'aaa'

(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார்.

Tafseer

فَنَادَتْهُ
ஆகவேஅழைத்தா(ர்க)ள்
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
وَهُوَ قَآئِمٌ
அவர் நின்று தொழுதுகொண்டிருக்க
يُصَلِّى
தொழுகிறார்
فِى ٱلْمِحْرَابِ
மாடத்தில்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
يُبَشِّرُكَ
உமக்கு நற்செய்தி கூறுகிறான்
بِيَحْيَىٰ
யஹ்யாவைக் கொண்டு
مُصَدِّقًۢا
உண்மைப்படுத்துபவராக
بِكَلِمَةٍ
ஒரு வாக்கியத்தை
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَسَيِّدًا
இன்னும் தலைவராக
وَحَصُورًا
இன்னும் இன்பத்தைத் துறந்தவராக
وَنَبِيًّا
இன்னும் நபியாக
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரைச்சேர்ந்தவர்

Fanaadat hul malaaa'ikatu wa huwa qaaa'imuny yusallee fil Mihraabi annal laaha yubashshiruka bi Yahyaa musaddiqam bi Kalimatim minal laahi wa saiyidanw wa hasooranw wa Nabiyyam minas saaliheen

ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.

Tafseer

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா!
أَنَّىٰ
எவ்வாறு
يَكُونُ
உண்டாகும்
لِى
எனக்கு
غُلَٰمٌ
ஒரு குழந்தை
وَقَدْ بَلَغَنِىَ
என்னையோ அடைந்து விட்டிருக்க
ٱلْكِبَرُ
முதுமை
وَٱمْرَأَتِى
இன்னும் என்மனைவியோ
عَاقِرٌۖ
மலடி
قَالَ
கூறினான்
كَذَٰلِكَ
இவ்வாறு
ٱللَّهُ
அல்லாஹ்
يَفْعَلُ
செய்வான்
مَا
எதை
يَشَآءُ
நாடுகிறான்

Qaala Rabbi annaa yakoonu lee ghulaamunw wa qad balaghaniyal kibaru wamraatee 'aaqirun qaala kazaalikal laahu yaf'alu maa yashaaa'

(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான்.

Tafseer