Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يَأْمُرُونَ
ஏவுகிறார்கள்
بِٱلْقِسْطِ
நீதத்தை
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
فَبَشِّرْهُم
அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
أَلِيمٍ
துன்புறுத்தக்கூடியது

Innal lazeena yakfuroona bi Aayaatil laahi wa yaqtuloonan Nabiyyeena bighairi haqqinw wa yaqtuloonal lazeena yaamuroona bilqisti minannaasi fabashirhum bi'azaabin aleem

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
حَبِطَتْ
அழிந்தன
أَعْمَٰلُهُمْ
இவர்களுடைய செயல்கள்
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
وَمَا
இன்னும் இல்லை
لَهُم
அவர்களுக்கு
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் ஒருவரும்

Ulaaa'ikal lazeena habitat a'maaluhum fid dunyaa wal Aaakhirati wa maa lahum min naasireen

இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
கொடுக்கப் பட்டவர்களை
نَصِيبًا
ஒரு பகுதி
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
يُدْعَوْنَ
அழைக்கப் படுகிறார்கள்
إِلَىٰ
பக்கம்
كِتَٰبِ
வேதம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்கு
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
ثُمَّ
பிறகு
يَتَوَلَّىٰ
விலகிவிடுகிறார்(கள்)
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنْهُمْ
அவர்களில்
وَهُم
இன்னும் அவர்கள்
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்கள்

Alam tara ilal lazeena ootoo naseebam minal Kitaabi yud'awna ilaa Kitaabil laahi liyahkuma bainahum summa yatawallaa fareequm minhum wa hum mu'ridoon

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்துவைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.

Tafseer

ذَٰلِكَ
இது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
قَالُوا۟
கூறினார்கள்
لَن تَمَسَّنَا
எங்களை அறவே தீண்டாது
ٱلنَّارُ
நரக நெருப்பு
إِلَّآ أَيَّامًا
தவிர/நாட்கள்
مَّعْدُودَٰتٍۖ
எண்ணப்பட்டவை
وَغَرَّهُمْ
இன்னும் ஏமாற்றிவிட்டது அவர்களை
فِى دِينِهِم
அவர்களுடைய மார்க்கத்தில்
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
يَفْتَرُونَ
பொய் கூறுவார்கள்

Zaalika bi annahum qaaloo lan tamassanan naaru illaaa ayyaamam ma'doodaatinw wa gharrahum fee deenihim maa kaanoo yaftaroon

இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.

Tafseer

فَكَيْفَ
எப்படி?
إِذَا جَمَعْنَٰهُمْ
நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்
لِيَوْمٍ
ஒரு நாளில்
لَّا
அறவே இல்லை
رَيْبَ فِيهِ
சந்தேகம்/அதில்
وَوُفِّيَتْ
இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்
كُلُّ نَفْسٍ
எல்லா ஆத்மா
مَّا
எது
كَسَبَتْ
அது செய்தது
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Fakaifa izaa jama'naahum li Yawmil laa raiba fee wa wuffiyat kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon

(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

قُلِ
கூறுவீராக
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
مَٰلِكَ
உரிமையாளனே
ٱلْمُلْكِ
ஆட்சிகளுக்கெல்லாம்
تُؤْتِى
கொடுக்கிறாய்
ٱلْمُلْكَ
ஆட்சியை
مَن
எவர்
تَشَآءُ
நாடுகிறாய்
وَتَنزِعُ
இன்னும் பறிக்கிறாய்
ٱلْمُلْكَ
ஆட்சியை
مِمَّن
எவரிடமிருந்து
تَشَآءُ
நாடுகிறாய்
وَتُعِزُّ
இன்னும் கண்ணியப் படுத்துகிறாய்
مَن
எவர்
تَشَآءُ
நாடுகிறாய்
وَتُذِلُّ
இன்னும் இழிவுபடுத்துகிறாய்
مَن
எவர்
تَشَآءُۖ
நாடுகிறாய்
بِيَدِكَ
உன் கையில்தான்
ٱلْخَيْرُۖ
நன்மை
إِنَّكَ
நிச்சயமாக நீ
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Qulil laahumma Maalikal Mulki tu'til mulka man tashaaa'u wa tanzi'ulmulka mimman tashhaaa'u wa tu'izzu man tashaaa'u wa tuzillu man tashaaa'u biyadikal khairu innaka 'alaa kulli shai'in Qadeer

(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.

Tafseer

تُولِجُ
நுழைக்கிறாய்
ٱلَّيْلَ
இரவை
فِى ٱلنَّهَارِ
பகலில்
وَتُولِجُ
இன்னும் நுழைக்கிறாய்
ٱلنَّهَارَ
பகலை
فِى ٱلَّيْلِۖ
இரவில்
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
ٱلْحَىَّ
உயிருள்ளதை
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
ٱلْمَيِّتَ
இறந்ததை
مِنَ ٱلْحَىِّۖ
உயிருள்ளதிலிருந்து
وَتَرْزُقُ
இன்னும் வழங்குகிறாய்
مَن تَشَآءُ
நீ நாடியவருக்கு
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி

Toolijul laila fin nahaari wa toolijun nahaara fil laili wa tukhrijul haiya minalmaiyiti wa tukhrijulo maiyita minal haiyi wa tarzuqu man tashaaa'u bighari hisab

நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்."

Tafseer

لَّا يَتَّخِذِ
எடுத்துக் கொள்ள வேண்டாம்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
مِن دُونِ
நம்பிக்கையாளர்களைத் தவிர
وَمَن
இன்னும் எவர்
يَفْعَلْ ذَٰلِكَ
இதை செய்வார்
فَلَيْسَ
அவர் இல்லை
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
فِى شَىْءٍ
எதிலும்
إِلَّآ
தவிர
أَن تَتَّقُوا۟
நீங்கள் அஞ்சுவது
مِنْهُمْ
அவர்களை
تُقَىٰةًۗ
அஞ்சுதல்(கடுமையாக)
وَيُحَذِّرُكُمُ
இன்னும் எச்சரிக்கிறான்
ٱللَّهُ نَفْسَهُۥۗ
அல்லாஹ்/தன்னை
وَإِلَى ٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Laa yattakhizil mu'minoonal kaafireena awliyaaa'a min doonil mu'mineena wa mai yaf'al zaalika falaisa minal laahi fee shai'in illaaa an tattaqoo minhum tuqaah; wa yuhazzirukumul laahu nafsah; wa ilal laahil maseer

நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

Tafseer

قُلْ
கூறுவீராக
إِن تُخْفُوا۟
நீங்கள் மறைத்தாலும்
مَا
எதை
فِى صُدُورِكُمْ
உங்கள் நெஞ்சங்களில்
أَوْ
அல்லது
تُبْدُوهُ
அதை வெளிப்படுத்தினாலும்
يَعْلَمْهُ
அதைஅறிவான்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَيَعْلَمُ
இன்னும் அறிவான்
مَا
எதை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَمَا فِى
இன்னும் பூமியில் உள்ளது
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
عَلَىٰ
மீது
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Qul in tukhfoo maa fee sudoorikum aw tubdoohu ya'lamhul laah; wa ya'lamu maa fis samaawaati wa maa fil ard; wallaahu 'alaa kulli shai'in Qadeer

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَوْمَ
நாள்
تَجِدُ
பெற்றுக்கொள்ளும்
كُلُّ
ஒவ்வொரு
نَفْسٍ
ஆத்மா
مَّا
எதை
عَمِلَتْ
(அது) செய்தது
مِنْ خَيْرٍ
நன்மையில்
مُّحْضَرًا
சமர்ப்பிக்கப்பட்டதாக
وَمَا
இன்னும் எது
عَمِلَتْ
செய்தது
مِن سُوٓءٍ
தீமையில்
تَوَدُّ
விரும்பும்
لَوْ
இருக்க வேண்டுமே!
أَنَّ
நிச்சயமாக
بَيْنَهَا
அதற்கு மத்தியில்
وَبَيْنَهُۥٓ
இன்னும் அதற்கு மத்தியில்
أَمَدًۢا بَعِيدًاۗ
தூரம்/நீண்ட
وَيُحَذِّرُكُمُ
இன்னும் உங்களை எச்சரிக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
نَفْسَهُۥۗ
தன்னை
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
رَءُوفٌۢ
மிக இரக்கமுடையவன்
بِٱلْعِبَادِ
அடியார்களிடம்

Yawma tajidu kullu nafsim maa'amilat min khairim muhdaranw wa maa 'amilat min sooo'in tawaddu law anna bainahaa wa bainahooo amadam ba'eedaa; wa yuhazzirukumul laahu nafsah; wallaahu ra'oofum bil'ibaad

ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான்.

Tafseer