Skip to main content

أَمْ لَهُمْ
இவர்களுக்கு உண்டா?
شُرَكَآءُ
கூட்டாளிகள்
فَلْيَأْتُوا۟
அவர்கள் கொண்டு வரட்டும்
بِشُرَكَآئِهِمْ
அவர்களின் அந்த கூட்டாளிகளை
إِن كَانُوا۟
அவர்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Am lahum shurakaaa'u falyaatoo bishurakaaa 'ihim in kaanoo saadiqeen

அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவைகளை(ச் சாட்சிக்காக) அழைத்து வரவும்.

Tafseer

يَوْمَ
நாளில்
يُكْشَفُ
அகற்றப்படுகின்ற
عَن سَاقٍ
கெண்டைக்காலை விட்டும்
وَيُدْعَوْنَ
இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்
إِلَى ٱلسُّجُودِ
சிரம்பணிய
فَلَا يَسْتَطِيعُونَ
ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்

Yawma yukshafu 'am saaqinw wa yud'awna ilas sujoodi falaa yastatee'oon

கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்.) அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.

Tafseer

خَٰشِعَةً
தாழ்ந்து இருக்கும்
أَبْصَٰرُهُمْ
அவர்களின் பார்வைகள்
تَرْهَقُهُمْ
அவர்களை சூழும்
ذِلَّةٌۖ
இழிவு
وَقَدْ كَانُوا۟
அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
إِلَى ٱلسُّجُودِ
தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது

Khaashi'atan absaaruhum tarhaquhum zillatunw wa qad kaanoo yud'awna ilassujoodi wa hum saalimoon

அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதனை நிராகரித்துவிட்டனர்.)

Tafseer

فَذَرْنِى
என்னை(யும்) விட்டு விடுவீராக!
وَمَن يُكَذِّبُ
பொய்ப் பிப்பவர்களையும்
بِهَٰذَا ٱلْحَدِيثِۖ
இந்த வேதத்தை
سَنَسْتَدْرِجُهُم
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்
مِّنْ حَيْثُ
அவர்கள் அறியாத விதத்தில்

Fazarnee wa many yukazzibu bihaazal hadeesi sanastad rijuhum min haisu laa ya'lamoon

ஆகவே, (நீங்கள் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டுவிடுங்கள். அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களைக் கஷ்டத்தில் சிக்க வைப்போம்.

Tafseer

وَأُمْلِى
நாம் தவணை அளிப்போம்
لَهُمْۚ
அவர்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
كَيْدِى
எனது சூழ்ச்சி
مَتِينٌ
மிக பலமானது

Wa umlee lahum; inna kaidee mateen

(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)

Tafseer

أَمْ تَسْـَٔلُهُمْ
இவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
أَجْرًا
கூலி ஏதும்
فَهُم
அவர்கள்
مِّن مَّغْرَمٍ
கடனால்
مُّثْقَلُونَ
சிரமப்படுகிறார்களா?

Am tas'aluhum ajran fahum mim maghramim musqaloon

(நபியே!) நீங்கள் அவர்களிடம் (வரியாக) யாதேனும் கூலி கேட்கின்றீர்களா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அவ்வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கி விட்டனரா?

Tafseer

أَمْ عِندَهُمُ
அவர்களிடம் இருக்கின்றதா?
ٱلْغَيْبُ
மறைவானவை
فَهُمْ
அவர்கள்
يَكْتُبُونَ
எழுதுகின்றனரா?

Am 'indahumul ghaibu fahum yaktuboon

அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?

Tafseer

فَٱصْبِرْ
பொறுமை காப்பீராக!
لِحُكْمِ
தீர்ப்புக்காக
رَبِّكَ
உமது இறைவனின்
وَلَا تَكُن
நீர் ஆகிவிடாதீர்
كَصَاحِبِ ٱلْحُوتِ
மீனுடையவரைப்போல்
إِذْ نَادَىٰ
அவர் அழைத்த நேரத்தில்
وَهُوَ
அவர்
مَكْظُومٌ
கடும் கோபமுடையவராக

Fasbir lihkmi rabbika wa laa takun kasaahibil boot; iz naadaa wa huwa makzoom

(நபியே!) நீங்கள் உங்களது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (யூனுஸை)ப் போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள்!

Tafseer

لَّوْلَآ أَن
அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்
مِّن رَّبِّهِۦ
அவருடைய இறைவனிடமிருந்து
لَنُبِذَ
எறியப்பட்டிருப்பார்
بِٱلْعَرَآءِ
ஒரு பெருவெளியில்
وَهُوَ
அவர் இருந்தார்
مَذْمُومٌ
பழிப்பிற்குரிய வராகத்தான்

Law laaa an tadaara kahoo ni'matum mir rabbihee lanubiza bil'araaa'i wa huwa mazmoom

அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.

Tafseer

فَٱجْتَبَٰهُ
பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்
رَبُّهُۥ
அவரது இறைவன்
فَجَعَلَهُۥ
அவரை ஆக்கினான்
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Fajtabaahu rabbuhoo faja'alahoo minas saaliheen

(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கி வைத்தான்.

Tafseer