Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
خُذُوا۟
பற்றிப் பிடியுங்கள்
حِذْرَكُمْ
எச்சரிக்கையை/உங்கள்
فَٱنفِرُوا۟
புறப்படுங்கள்
ثُبَاتٍ
சிறு கூட்டங்களாக
أَوِ
அல்லது
ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
جَمِيعًا
அனைவருமாக

Yaaa aiyuhal lazeena aamanoo khuzoo hizrakum fanfiroo subaain awin firoo jamee'aa

நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள்.

Tafseer

وَإِنَّ مِنكُمْ
நிச்சயமாக/உங்களில்
لَمَن
திட்டமாக எவர்
لَّيُبَطِّئَنَّ
நிச்சயமாக பின்தங்கிவிடுகிறான்
فَإِنْ أَصَٰبَتْكُم
ஏற்பட்டால்/உங்களுக்கு
مُّصِيبَةٌ
ஒரு சோதனை
قَالَ
கூறுகிறான்
قَدْ
திட்டமாக
أَنْعَمَ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىَّ
என் மீது
إِذْ
ஏனெனில்
لَمْ أَكُن
நான் இருக்கவில்லை
مَّعَهُمْ
அவர்களுடன்
شَهِيدًا
பிரசன்னமாகி இருப் பவன்

Wa inna minkum lamal la yubatti'anna fa in asaabatkum museebatun qaala qad an'amal laahu 'alaiya iz lam akum ma'ahum shaheeda

(போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு யாதொரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) "நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்" என்று கூறுகின்றார்கள்.

Tafseer

وَلَئِنْ
أَصَٰبَكُمْ
அடைந்தால்/உங்களை
فَضْلٌ
ஓர் அருள்
مِّنَ
இருந்து
ٱللَّهِ
அல்லாஹ்
لَيَقُولَنَّ
நிச்சயமாக கூறுகிறான்
كَأَن
போன்று
لَّمْ تَكُنۢ
இருக்கவில்லை
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
وَبَيْنَهُۥ
இன்னும் அவனுக்கிடையில்
مَوَدَّةٌ
நட்பு
يَٰلَيْتَنِى كُنتُ
நான் இருந்திருக்க வேண்டுமே
مَعَهُمْ
அவர்களுடன்
فَأَفُوزَ
வெற்றிபெற்றிருப்பேன்
فَوْزًا
வெற்றி
عَظِيمًا
மகத்தானது

Wa la'in asaabakum fadlum minal laahi la yaqoolanna ka al lam takum bainakum wa bainahoo mawaddatuny yaa laitanee kuntu ma'ahum fa afooza fawzan 'azeemaa

அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ "நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!" என்று உங்களுடன் சம்பந்தம் இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்.

Tafseer

فَلْيُقَٰتِلْ
போரிடட்டும்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلَّذِينَ
எவர்கள்
يَشْرُونَ
விற்கிறார்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
ٱلدُّنْيَا
இவ்வுலகம்
بِٱلْءَاخِرَةِۚ
மறுமைக்குப் பகரமாக
وَمَن
இன்னும் எவர்
يُقَٰتِلْ
போரிடுவாரோ
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَيُقْتَلْ
அவர் கொல்லப்பட்டாலும்
أَوْ
அல்லது
يَغْلِبْ
வெற்றி பெற்றாலும்
فَسَوْفَ نُؤْتِيهِ
கொடுப்போம்/அவருக்கு
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தானது

Falyuqaatil fee sabeelil laahil lazeena yashroonal hayaatad dunyaa bil Aakhirah; wa many-uqaatil fee sabeelil laahi fa yuqtal aw yaghlib fasawfa nu'teehi ajran 'azeemaa

மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப் பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்.

Tafseer

وَمَا لَكُمْ
உங்களுக்கு என்ன
لَا تُقَٰتِلُونَ
நீங்கள் போரிடாமல் இருக்க
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱلْمُسْتَضْعَفِينَ
பலவீனர்கள்
مِنَ
இருந்து
ٱلرِّجَالِ
ஆண்கள்
وَٱلنِّسَآءِ
இன்னும் பெண்கள்
وَٱلْوِلْدَٰنِ
இன்னும் சிறுவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يَقُولُونَ
கூறுகின்றனர்
رَبَّنَآ
எங்கள் இறைவா
أَخْرِجْنَا
வெளியேற்று/ எங்களை
مِنْ هَٰذِهِ
இருந்து/இந்த
ٱلْقَرْيَةِ
ஊர்
ٱلظَّالِمِ
அநியாயக்காரர்(கள்)
أَهْلُهَا
இந்த ஊர் வாசிகள்
وَٱجْعَل
இன்னும் ஏற்படுத்து
لَّنَا
எங்களுக்கு
مِن
இருந்து
لَّدُنكَ
உன் புறம்
وَلِيًّا
ஒரு பாதுகாவலரை
وَٱجْعَل
இன்னும் ஏற்படுத்து
لَّنَا
எங்களுக்கு
مِن
இருந்து
لَّدُنكَ
உன் புறம்
نَصِيرًا
ஓர் உதவியாளரை

Wa maa lakum laa tuqaatiloona fee sabeelil laahi walmustad'afeena minar rijaali wannisaaa'i walwildaanil lazeena yaqooloona Rabbanaaa akhrijnaa min haazihil qaryatiz zaalimi ahluhaa waj'al lanaa mil ladunka waliyanw waj'al lanaa mil ladunka naseeraa

பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.

Tafseer

ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
يُقَٰتِلُونَ
போரிடுவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
وَٱلَّذِينَ كَفَرُوا۟
இன்னும் நிராகரிப்பாளர்கள்
يُقَٰتِلُونَ
போரிடுவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱلطَّٰغُوتِ
ஷைத்தானின்
فَقَٰتِلُوٓا۟
ஆகவே போரிடுங்கள்
أَوْلِيَآءَ
நண்பர்களிடம்
ٱلشَّيْطَٰنِۖ
ஷைத்தானின்
إِنَّ كَيْدَ
நிச்சயமாக சூழ்ச்சி
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
كَانَ ضَعِيفًا
இருக்கிறது/பலவீனமாக

Allazeena aamanoo yuqaatiloona fee sabeelil laahi wallazeena kafaroo yuqaatiloona fee sabeelit Taaghoot faqaatiloo awliyaaa'ash Shaitaan; inna kaidash Shairaani kaana da'eefa

(ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கை யாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களுடன் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் தொகை அதிகமாக இருக்கின்றதே என்று தயங்காதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதே!

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
قِيلَ
கூறப்பட்டது
لَهُمْ
அவர்களுக்கு
كُفُّوٓا۟
தடுத்துக் கொள்ளுங்கள்
أَيْدِيَكُمْ
உங்கள் கரங்களை
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
فَلَمَّا كُتِبَ
விதிக்கப்பட்ட போது
عَلَيْهِمُ
அவர்கள் மீது/
ٱلْقِتَالُ إِذَا
போர்/அப்போது
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنْهُمْ
அவர்களில்
يَخْشَوْنَ
பயப்படுகின்றனர்
ٱلنَّاسَ
மக்களை
كَخَشْيَةِ
பயப்படுவதுபோல்
ٱللَّهِ
அல்லாஹ்வை
أَوْ
அல்லது
أَشَدَّ
மிகக் கடுமையாக
خَشْيَةًۚ
பயத்தால்
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா
لِمَ كَتَبْتَ
ஏன் விதித்தாய்
عَلَيْنَا
எங்கள் மீது
ٱلْقِتَالَ
போரை
لَوْلَآ أَخَّرْتَنَآ
எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
ஒரு தவணை
قَرِيبٍۗ
சமீபமாக
قُلْ
கூறுவீராக
مَتَٰعُ
இன்பம்
ٱلدُّنْيَا
உலகத்தின்
قَلِيلٌ
அற்பமானது
وَٱلْءَاخِرَةُ
மறுமை
خَيْرٌ
மேலானது
لِّمَنِ
எவருக்கு
ٱتَّقَىٰ
அஞ்சினார்
وَلَا تُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
فَتِيلًا
ஒரு நூலும்

Alam tara ilal lazeena qeela lahum kuffooo aidiyakum wa aqeemus Salaata w aaatuz Zakaata falammaa kutiba 'alaihimul qitaalu izaa fareequm minhum yakhshawnnan naasa kakhashyatil laahi aw ashadda khashyah; wa qaaloo Rabbanaa lima katabta 'alainal qitaala law laaa akhkhartanaa ilaaa ajalin qareeb; qul mataa'ud dunyaa qaleelunw wal Aakhiratu khairul limanit taqaa wa laa tuzlamoona fateelaa

உங்களுடைய கைகளைத் (தற்சமயம் போர் புரியாது) தடுத்துக் கொண்டும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடித்தும், ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்களென்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து "எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதனைப் பிற்படுத்த வேண்டாமா?" என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். (இதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஓர் நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

Tafseer

أَيْنَمَا تَكُونُوا۟
நீங்கள் எங்கிருந்தாலும்
يُدْرِككُّمُ
அடையும்/உங்களை
ٱلْمَوْتُ
மரணம்
وَلَوْ كُنتُمْ
நீங்கள் இருந்தாலும்
فِى بُرُوجٍ
கோபுரங்களில்
مُّشَيَّدَةٍۗ
பலமான
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
حَسَنَةٌ
ஒரு நன்மை
يَقُولُوا۟
கூறுகின்றனர்
هَٰذِهِۦ مِنْ
இது/இருந்து
عِندِ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
سَيِّئَةٌ
ஒரு தீங்கு
يَقُولُوا۟
கூறுகின்றனர்
هَٰذِهِۦ
இது
مِنْ
இருந்து
عِندِكَۚ
உம்மிடம்
قُلْ
கூறுவீராக
كُلٌّ مِّنْ
எல்லாம்/இருந்து
عِندِ ٱللَّهِۖ
அல்லாஹ்விடம்
فَمَالِ هَٰٓؤُلَآءِ
இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது?
لَا يَكَادُونَ
அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே
حَدِيثًا
ஒரு பேச்சை

Ainamaa takoonoo yudrikkumul mawtu wa law kuntum fee buroojim mushai yadah; wa in tusibhum hasanatuny yaqooloo haazihee min indil laahi wa in tusibhum saiyi'atuny yaqooloo haazihee min 'indik; qul kullum min 'indillaahi famaa lihaaa 'ulaaa'il qawmi laa yakkaadoona yafqahoona hadeesaa

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உங்களுடைய கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை யாதொரு நன்மையடையும் பட்சத்தில் "இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது" எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டு விட்டாலோ "(நபியே!) இது உங்களால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)" எனக் கூறுகின்றனர். (ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லையே!

Tafseer

مَّآ
எது
أَصَابَكَ
அடைந்தது/உம்மை
مِنْ حَسَنَةٍ
இருந்து/நன்மை
فَمِنَ
இருந்து
ٱللَّهِۖ
அல்லாஹ்
وَمَآ
இன்னும் எது
أَصَابَكَ
அடைந்தது/உம்மை
مِن سَيِّئَةٍ
இருந்து/தீமை
فَمِن نَّفْسِكَۚ
உன்னிலிருந்து
وَأَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/உம்மை
لِلنَّاسِ
மக்களுக்கு
رَسُولًاۚ
தூதராக
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்
شَهِيدًا
சாட்சியாளனாக

Maaa asaabaka min hasanatin faminal laahi wa maaa asaaabaka min saiyi'atin famin nafsik; wa arsalnaaka linnaasi Rasoolaa; wa kafaa billaahi Shaheedaa

அன்றி, (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) "உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும் "உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது" என்றும் (கூறுங்கள். நபியே!) நாம் உங்களை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

Tafseer

مَّن
எவர்
يُطِعِ
கீழ்ப்படிகிறார்
ٱلرَّسُولَ
தூதருக்கு
فَقَدْ
திட்டமாக
أَطَاعَ
கீழ்ப்படிந்தார்
ٱللَّهَۖ
அல்லாஹ்விற்கு
وَمَن
இன்னும் எவர்(கள்)
تَوَلَّىٰ
திரும்பினார்(கள்)
فَمَآ أَرْسَلْنَٰكَ
அனுப்பவில்லை/உம்மை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَفِيظًا
பாதுகாவலராக

Man yuti'ir Rasoola faqad ataa'al laaha wa man tawallaa famaaa arsalnaaka 'alaihim hafeezaa

எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டார். ஆகவே (நபியே! உங்களை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உங்களை நாம் அனுப்பவில்லை.

Tafseer