Skip to main content

وَفِى عَادٍ
இன்னும் ஆதிலும்
إِذْ أَرْسَلْنَا
நாம் அனுப்பியபோது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلرِّيحَ ٱلْعَقِيمَ
மலட்டுக் காற்றை

Wa fee 'Aadin iz arsalnaa 'alaihimur reehal'aqeem

"ஆது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) அவர்கள் மீது நாம் நாசகரமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில்,

Tafseer

مَا تَذَرُ
அது விடாது
مِن شَىْءٍ
எதையும்
أَتَتْ
செல்கிறதோ
عَلَيْهِ
அதன் மீது
إِلَّا جَعَلَتْهُ
அதை ஆக்காமல்
كَٱلرَّمِيمِ
பழைய மக்கிப்போன பொருளைப் போன்று

Maa tazaru min shai'in atat 'alaihi illaa ja'alat hu karrameem

அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.

Tafseer

وَفِى ثَمُودَ
இன்னும் சமூதிலும்
إِذْ قِيلَ
சொல்லப்பட்ட போது
لَهُمْ
அவர்களுக்கு
تَمَتَّعُوا۟
சுகமாக இருங்கள் என்று
حَتَّىٰ
வரை
حِينٍ
சிறிது காலம்

Wa fee Samooda iz qeela lahum tamatta''oo hattaa heen

"ஸமூது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) "நீங்கள் ஒரு காலம் வரையில் சுகமாக வாழ்ந்திருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,

Tafseer

فَعَتَوْا۟
பெருமை அடித்தனர்
عَنْ أَمْرِ
கட்டளையை ஏற்காமல்
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
فَأَخَذَتْهُمُ
அவர்களைப் பிடித்தது
ٱلصَّٰعِقَةُ
இடிமுழக்கம்
وَهُمْ
அவர்களோ
يَنظُرُونَ
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்

Fa'ataw 'an amri Rabbihim fa akhazal humus saa'iqatu wa hum yanzuroon

அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.

Tafseer

فَمَا ٱسْتَطَٰعُوا۟
இயலாமல் ஆகிவிட்டார்கள்
مِن قِيَامٍ
நிற்பதற்கு
وَمَا كَانُوا۟
இருக்கவில்லை
مُنتَصِرِينَ
பழிதீர்ப்பவர்களாகவும்

Famas tataa'oo min qiyaaminw wa maa kaanoo muntasireen

ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்த வாறே அழிந்துவிட்டனர்.)

Tafseer

وَقَوْمَ
இன்னும் மக்களையும்
نُوحٍ
நூஹூடைய
مِّن قَبْلُۖ
இதற்கு முன்னர்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
قَوْمًا
மக்களாக
فَٰسِقِينَ
பாவிகளான

Wa qawma Noohim min qablu innahum kaano qawman faasiqeen

இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்.) நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.

Tafseer

وَٱلسَّمَآءَ
வானத்தை
بَنَيْنَٰهَا
அதை நாம் உயர்த்தினோம்
بِأَيْي۟دٍ
பலத்தால்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَمُوسِعُونَ
மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்

Wassamaaa'a banainaa haa bi aydinw wa innaa lamoosi'oon

(எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதனை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசால மாக்கியும் வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَٱلْأَرْضَ
பூமியை
فَرَشْنَٰهَا
அதை நாம் விரித்தோம்
فَنِعْمَ
நாம் மிகச் சிறந்தவர்கள்
ٱلْمَٰهِدُونَ
விரிப்பவர்களில்

Wal arda farashnaahaa fani'mal maahidoon

பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர் களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.

Tafseer

وَمِن كُلِّ
ஒவ்வொன்றிலும்
خَلَقْنَا
படைத்தோம்
زَوْجَيْنِ
இரண்டு ஜோடிகளை
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக

Wa min kulli shai'in khalaqnaa zawjaini la'allakum tazakkaroon

ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!

Tafseer

فَفِرُّوٓا۟
ஆகவே விரண்டு ஓடுங்கள்
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
إِنِّى
நிச்சயமாக நான்
لَكُم
உங்களுக்கு
مِّنْهُ
அவனிடமிருந்து
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
مُّبِينٌ
தெளிவான(வர்)

Fafirrooo ilal laahi innee lakum minhu nazeerum mubeen

ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.

Tafseer