Skip to main content

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்களோ
وَٱتَّبَعَتْهُمْ
இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ
ذُرِّيَّتُهُم
அவர்களின் சந்ததிகளும்
بِإِيمَٰنٍ
இறை நம்பிக்கையில்
أَلْحَقْنَا بِهِمْ
அவர்களுடன் சேர்த்து வைப்போம்
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
وَمَآ أَلَتْنَٰهُم
அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்
مِّنْ عَمَلِهِم
அவர்களின் அமல்களில்
مِّن شَىْءٍۚ
எதையும்
كُلُّ ٱمْرِئٍۭ
ஒவ்வொரு/மனிதனும்
بِمَا كَسَبَ
தான் செய்த செயலுக்காக
رَهِينٌ
தடுத்து வைக்கப்பட்டிருப்பான்

Wallazeena aamanoo wattaba'at hum zurriyyatuhum bieemaanin alhaqnaa bihim zurriyyatahum wa maaa alatnaahum min 'amalihim min shai'; kullum ri'im bimaa kasaba raheen

எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான்.

Tafseer

وَأَمْدَدْنَٰهُم
நாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்
بِفَٰكِهَةٍ
பழங்களை(யும்)
وَلَحْمٍ
மாமிசங்களையும்
مِّمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புகின்றவற்றின்

Wa amdadnaahum bifaa kihatinw wa lahmim mimmaa yashtahoon

அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனி வர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (அனுதினமும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்.

Tafseer

يَتَنَٰزَعُونَ فِيهَا
அதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்
كَأْسًا
குடிபானம் நிறைந்த குவளைகளை
لَّا لَغْوٌ
அதில் பொய் இருக்காது
وَلَا تَأْثِيمٌ
பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது

Yatanaaza'oona feehaa kaasal laa laghwun feehaa wa laa taaseem

ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது.

Tafseer

وَيَطُوفُ
சுற்றி வருவார்கள்
عَلَيْهِمْ
அவர்களை
غِلْمَانٌ
சிறுவர்கள்
لَّهُمْ
அவர்களுக்குரிய
كَأَنَّهُمْ
அவர்களோ இருப்பார்கள்
لُؤْلُؤٌ
முத்துக்களைப் போன்று
مَّكْنُونٌ
பாதுகாக்கப்பட்ட

Wa yatoofu 'alaihim ghilmaanul lahum ka annahum lu'lu'um maknoon

அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும் சிறுவர்கள் பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.)

Tafseer

وَأَقْبَلَ
முன்னோக்கி வருவார்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
عَلَىٰ بَعْضٍ
சிலரை
يَتَسَآءَلُونَ
தங்களுக்குள் கேட்டவர்களாக

Wa aqbala ba'duhum 'alaa ba'diny yatasaaa'aloon

அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கியிருந்து கொண்டு (உல்லாசமாக) உரையாட ஆரம்பித்து,

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
قَبْلُ
இதற்கு முன்னர்
فِىٓ أَهْلِنَا
எங்கள் குடும்பங்களில்
مُشْفِقِينَ
பயந்தவர்களாகவே

Qaalooo innaa kunnaa qablu feee ahlinaa mushfiqeen

"இதற்கு முன்னர், நாம் நம்முடைய குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்து கொண்டே இருந்தோம்.

Tafseer

فَمَنَّ
ஆக, உபகாரம் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْنَا
எங்கள் மீது
وَوَقَىٰنَا
இன்னும் எங்களை பாதுகாத்தான்
عَذَابَ
வேதனையை விட்டும்
ٱلسَّمُومِ
நரகத்தின்

Famannnal laahu 'alainaa wa waqaanaa 'azaabas samoom

ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
نَدْعُوهُۖ
அவனை அழைப்பவர்களாக
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْبَرُّ
மிகவும் அருளுடையவன்
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்

Innaa kunnaa min qablu nad'oohu innahoo huwal barrur raheem

இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன் நன்றி செய்பவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்" என்றும் கூறுவார்கள்.

Tafseer

فَذَكِّرْ
ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!
فَمَآ أَنتَ
நீர் இல்லை
بِنِعْمَتِ
அருட்கொடையால்
رَبِّكَ
உமது இறைவனின்
بِكَاهِنٍ
குறிசொல்பவராக(வும்)
وَلَا مَجْنُونٍ
பைத்தியக்காரராகவும்

Fazakkir famaaa anta bini'mati rabbika bikaahininw wa laa majnoon

(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.

Tafseer

أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
شَاعِرٌ
ஒரு கவிஞர்
نَّتَرَبَّصُ
நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
بِهِۦ
அவருக்கு
رَيْبَ
அசம்பாவிதங்களை
ٱلْمَنُونِ
காலத்தின்

Am yaqooloona shaa'irun natarabbasu bihee raibal manoon

(உங்களைப் பற்றி) அவர்கள் (நீங்கள்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக் கூடிய) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.

Tafseer