Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
إِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
ٱلنِّسَآءَ
பெண்களை
فَطَلِّقُوهُنَّ
அவர்களை விவாகரத்து செய்யுங்கள்
لِعِدَّتِهِنَّ
அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு
وَأَحْصُوا۟
இன்னும் சரியாக கணக்கிடுங்கள்
ٱلْعِدَّةَۖ
இத்தாவை
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّكُمْۖ
உங்கள் இறைவனாகிய
لَا تُخْرِجُوهُنَّ
அவர்களை வெளியேற்றாதீர்கள்
مِنۢ بُيُوتِهِنَّ
அவர்களின் இல்லங்களில் இருந்து
وَلَا يَخْرُجْنَ
இன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம்
إِلَّآ أَن
அவர்கள் செய்தாலே தவிர
بِفَٰحِشَةٍ
தீய செயலை
مُّبَيِّنَةٍۚ
தெளிவான
وَتِلْكَ
இவை
حُدُودُ
சட்டங்களாகும்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
وَمَن يَتَعَدَّ
எவர்/மீறுவாரோ
حُدُودَ
சட்டங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَقَدْ
திட்டமாக
ظَلَمَ
அநீதி இழைத்துக் கொண்டார்
نَفْسَهُۥۚ
தனக்குத் தானே
لَا تَدْرِى
நீர் அறியமாட்டீர்
لَعَلَّ ٱللَّهَ
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
أَمْرًا
ஒரு காரியத்தை

Yaaa ayyuhan nabiyyu izaa tallaqtummun nisaaa'a fatalliqoohunna li'iddatihinna wa ahsul'iddata; wattaqul laaha rabbakum laa tukhri joohunna mim bu-yootihinna wa laa yakhrujna illaaa any yaateema bifaahishatim mubaiyinah; wa tilka hudoodul laah; wa many yata'adda hudoodal laahi faqad zalama nafsha; laa tadree la'allal laaha yuhdisu ba'dazaalika amraa

நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.

Tafseer

فَإِذَا بَلَغْنَ
அவர்கள் அடைந்து விட்டால்
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
فَأَمْسِكُوهُنَّ
தடுத்து வையுங்கள் அவர்களை
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
أَوْ
அல்லது
فَارِقُوهُنَّ
நீங்கள் பிரிந்து விடுங்கள் அவர்களை
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
وَأَشْهِدُوا۟
இன்னும் சாட்சியாக்குங்கள்
ذَوَىْ عَدْلٍ
நீதமான இருவரை
مِّنكُمْ
உங்களில்
وَأَقِيمُوا۟
இன்னும் நிலை நிறுத்துங்கள்
ٱلشَّهَٰدَةَ
சாட்சியத்தை
لِلَّهِۚ
அல்லாஹ்விற்காக
ذَٰلِكُمْ
இவை
يُوعَظُ
உபதேசிக்கப் படுகின்றார்
بِهِۦ
இவற்றின் மூலம்
مَن كَانَ
எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
மறுமை நாளையும்
وَمَن
எவர்
يَتَّقِ
அஞ்சுவாரோ
ٱللَّهَ
அல்லாஹ்வை
يَجْعَل
ஏற்படுத்துவான்
لَّهُۥ
அவருக்கு
مَخْرَجًا
ஒரு தீர்வை

Fa izaa balaghna ajalahunna fa amsikoohunna bima'roofin aw faariqoohunna bima'roofinw wa ashhidoo zawai 'adlim minkum wa aqeemush shahaadata lillaah; zaalikum yoo'azu bihee man kaana yu'minu billaahi wal yawmil aakhir; wa many yattaqil laaha yaj'al lahoo makhrajaa

அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்தபோதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகின்றது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான்.

Tafseer

وَيَرْزُقْهُ
இன்னும் அவருக்கு உணவளிப்பான்
مِنْ حَيْثُ
விதத்தில் இருந்து
لَا يَحْتَسِبُۚ
அவர் எண்ணாத
وَمَن يَتَوَكَّلْ
எவர் நம்பிக்கை வைப்பாரோ
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
فَهُوَ
அவனே
حَسْبُهُۥٓۚ
அவருக்குப் போதுமானவன்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بَٰلِغُ
நிறைவேற்றுவான்
أَمْرِهِۦۚ
தனது காரியத்தை
قَدْ
திட்டமாக
جَعَلَ
ஏற்படுத்தினான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِكُلِّ شَىْءٍ
ஒவ்வொன்றுக்கும்
قَدْرًا
ஓர் அளவை

Wa yarzuqhu min haisu laa yahtasib; wa many yatawakkal 'alal laahi fahuwa husbuh; innal laaha baalighu amrih; qad ja'alal laahu likulli shai'in qadraa

அன்றி, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ்தான் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)

Tafseer

وَٱلَّٰٓـِٔى
எவர்கள்
يَئِسْنَ
நிராசை அடைந்து விட்டனரோ
مِنَ ٱلْمَحِيضِ
மாதவிடாயிலிருந்து
مِن نِّسَآئِكُمْ
உங்கள் பெண்களில்
إِنِ ٱرْتَبْتُمْ
நீங்கள் சந்தேகித்தால்
فَعِدَّتُهُنَّ
அவர்களின் இத்தா
ثَلَٰثَةُ
மூன்று
أَشْهُرٍ
மாதங்களாகும்
وَٱلَّٰٓـِٔى
எவர்கள்
لَمْ يَحِضْنَۚ
அவர்கள் மாதவிடாய் வரவில்லை
وَأُو۟لَٰتُ ٱلْأَحْمَالِ
கர்ப்பமுடைய பெண்கள்
أَجَلُهُنَّ
அவர்களின் தவணை
أَن يَضَعْنَ
அவர்கள் பெற்றெடுப்பதாகும்
حَمْلَهُنَّۚ
தங்கள் கர்ப்பத்தை
وَمَن
எவர்
يَتَّقِ
அஞ்சுவாரோ
ٱللَّهَ
அல்லாஹ்வை
يَجْعَل
ஏற்படுத்துவான்
لَّهُۥ
அவருக்கு
مِنْ أَمْرِهِۦ
அவரின் காரியத்தில்
يُسْرًا
இலகுவை

Wallaaa'ee ya'isna minal maheedi min nisaaa 'ikum inir tabtum fa'iddatuhunna salaasatu ashhurinw wallaaa'ee lam yahidn; wa ulaatul ahmaali ajaluhunna any yada'na hamlahun; wa many yattaqil laaha yaj'al lahoo min armrihee yusraa

(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கையிழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரையில் மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையில் இருக்கின்றது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகின்றான்.

Tafseer

ذَٰلِكَ أَمْرُ
இது/கட்டளையாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أَنزَلَهُۥٓ
இதை இறக்கி இருக்கின்றான்
إِلَيْكُمْۚ
உங்களுக்கு
وَمَن يَتَّقِ
எவர்/அஞ்சுவாரோ
ٱللَّهَ
அல்லாஹ்வை
يُكَفِّرْ
அவன் போக்குவான்
عَنْهُ
அவரை விட்டும்
سَيِّـَٔاتِهِۦ
அவரின் பாவங்களை
وَيُعْظِمْ
இன்னும் பெரிதாக்குவான்
لَهُۥٓ أَجْرًا
அவருக்கு/கூலியை

Zaalika amrul laahi anzalahoo ilaikum; wa many yattaqil laaha yukaffir 'anhu saiyi aatihee wa yu'zim lahoo ajraa

அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, அவருடைய கூலியையும் பெரிதாக்கி விடுகின்றான்.

Tafseer

أَسْكِنُوهُنَّ
அவர்களை தங்க வையுங்கள்
مِنْ حَيْثُ
நீங்கள் தங்கும் இடத்தில்
مِّن وُجْدِكُمْ
உங்கள் வசதிக்கேற்ப
وَلَا
தீங்கு செய்யாதீர்கள்
تُضَآرُّوهُنَّ
தீங்கு செய்யாதீர்கள் அவர்களுக்கு
لِتُضَيِّقُوا۟
நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக
عَلَيْهِنَّۚ
அவர்கள் மீது
وَإِن كُنَّ
அவர்கள் இருந்தால்
أُو۟لَٰتِ حَمْلٍ
கர்ப்பம் உள்ள பெண்களாக
فَأَنفِقُوا۟
செலவு செய்யுங்கள்
عَلَيْهِنَّ
அவர்களுக்கு
حَتَّىٰ
வரை
يَضَعْنَ
அவர்கள் பெற்றெடுக்கின்ற
حَمْلَهُنَّۚ
தங்கள் கர்ப்பத்தை
فَإِنْ أَرْضَعْنَ
அவர்கள் பாலூட்டினால்
لَكُمْ
உங்களுக்காக
فَـَٔاتُوهُنَّ
அவர்களுக்கு கொடுங்கள்
أُجُورَهُنَّۖ
அவர்களின் ஊதியங்களை
وَأْتَمِرُوا۟
ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
بِمَعْرُوفٍۖ
நல்லதை
وَإِن تَعَاسَرْتُمْ
நீங்கள் சிரமமாகக் கருதினால்
فَسَتُرْضِعُ
பாலூட்டுவாள்
لَهُۥٓ
அவருக்காக
أُخْرَىٰ
வேறு ஒரு பெண்

Askinoohunna min haisu sakantum minw wujdikum wa laa tudaaarroohunna litudaiyiqoo 'alaihinn; wa in kunna ulaati hamlin fa anfiqoo 'alihinna hattaa yada'na hamlahunn; fain arda'na lakum fa aatoo hunna ujoorahunna waatamiroo bainakum bima'roofinw wa in ta'aasartum fasaturdi'u lahooo ukhraa

("தலாக்" கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்களுடைய) பெண்களை உங்களால் ஆனவரையில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாயிருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரையில் அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்.

Tafseer

لِيُنفِقْ
செலவு செய்யட்டும்
ذُو سَعَةٍ
வசதியுடையவர்
مِّن سَعَتِهِۦۖ
தனது வசதியிலிருந்து
وَمَن
எவர் ஒருவர்
قُدِرَ
நெருக்கடியாக இருக்கின்றதோ
عَلَيْهِ
அவர் மீது
رِزْقُهُۥ
அவருடைய வாழ்வாதாரம்
فَلْيُنفِقْ
அவர்கள் செலவு செய்யட்டும்
مِمَّآ ءَاتَىٰهُ
தனக்கு கொடுத்ததில் இருந்து
ٱللَّهُۚ
அல்லாஹ்
لَا يُكَلِّفُ
சிரமம் கொடுக்க மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
إِلَّا
தவிர
مَآ ءَاتَىٰهَاۚ
அவன் அதற்கு கொடுத்ததை
سَيَجْعَلُ
ஏற்படுத்துவான்
ٱللَّهُ
அல்லாஹ்
بَعْدَ
பின்னர்
عُسْرٍ
சிரமத்திற்கு
يُسْرًا
இலகுவை

Liyuntiq zoo sa'atim min sa'atihee wa man qudira 'alaihi riquhoo falyunfiq mimmaaa aataahul laah; laa yukalliful laahu nafsan illaa maaa aataahaa; sa yaj'alul laahu ba'da'usriny yusraa

(பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன்னுடைய தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.

Tafseer

وَكَأَيِّن
எத்தனையோ
مِّن قَرْيَةٍ
ஊர்கள்/மீறின
عَنْ أَمْرِ
கட்டளையையும்
رَبِّهَا
தமது இறைவனின்
وَرُسُلِهِۦ
இன்னும் தமது தூதரின்
فَحَاسَبْنَٰهَا
நாம் அவற்றை விசாரித்தோம்
حِسَابًا
விசாரணையால்
شَدِيدًا
கடுமையான
وَعَذَّبْنَٰهَا
இன்னும் அவற்றை வேதனை செய்தோம்
عَذَابًا نُّكْرًا
மோசமான தண்டனையால்

Wa ka ayyim min qaryatin 'atat 'an amri Rabbihaa wa Rusulihee fahaasabnaahaa hisaaban shadeedanw wa 'azzabnaahaa 'azaaban nukraa

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையை கொண்டு வேதனை செய்தோம்.

Tafseer

فَذَاقَتْ
அவை சுவைத்தன
وَبَالَ
கெட்ட முடிவை
أَمْرِهَا
தமது காரியத்தின்
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டது
عَٰقِبَةُ
முடிவு
أَمْرِهَا
அவற்றின் காரியத்தின்
خُسْرًا
மிக நஷ்டமாகவே

Fazaaqat wabbala amrihaa wa kaana 'aaqibatu amrihaa khusraa

ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆயிற்று.

Tafseer

أَعَدَّ
தயார் செய்துள்ளான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
தண்டனையை
شَدِيدًاۖ
கடுமையான
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்களே!
ٱلَّذِينَ ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டவர்கள்
قَدْ
திட்டமாக
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَيْكُمْ
உங்களுக்கு
ذِكْرًا
நல்லுபதேசத்தை

A'addal laahu lahum 'azaaban shadeedan fattaqul laaha yaaa ulil albaab, allazeena aammanoo; qad anzalal laahu ilaikum zikraa

(அன்றி, மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திருக்குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக் கின்றான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துத் தலாஃக்
القرآن الكريم:الطلاق
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):At-Talaq
ஸூரா:65
வசனம்:12
Total Words:249
Total Characters:1060
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:99
Starting from verse:5217