Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
لَهْوًا
கேளிக்கையாக
وَلَعِبًا
இன்னும் விளையாட்டாக
وَغَرَّتْهُمُ
இன்னும் மயக்கியது/அவர்களை
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
ٱلدُّنْيَاۚ
உலகம்
فَٱلْيَوْمَ
இன்று
نَنسَىٰهُمْ
மறப்போம்/அவர்களை
كَمَا نَسُوا۟
அவர்கள் மறந்ததினால்
لِقَآءَ
சந்திப்பை
يَوْمِهِمْ هَٰذَا
அவர்களுடைய இந்நாளின்
وَمَا كَانُوا۟
இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
يَجْحَدُونَ
மறுப்பார்கள்

Allazeenat takhazoo deenahu lahwanw wa la'i-banw wa gharrat humul hayaatud dunyaa; fal Yawma nnannsaahum kamaa nasoo liqaaa'a Yawmihim haazaa wa maa kaanoo bi aayaatinaa yajhadoon

இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம்.

Tafseer

وَلَقَدْ جِئْنَٰهُم
திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்
بِكِتَٰبٍ
ஒரு வேதத்தைக் கொண்டு
فَصَّلْنَٰهُ
விவரித்தோம்/அதை
عَلَىٰ عِلْمٍ
அறிந்து
هُدًى
நேர்வழியாக
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa laqad ji'naahum bi Kitaabin fassalnaahu 'alaa 'ilmin hudanw wa rahmatal liqawminy-yu'miinoon

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது.

Tafseer

هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கின்றனரா?
إِلَّا
தவிர
تَأْوِيلَهُۥۚ
அதன் முடிவை
يَوْمَ
நாள்
يَأْتِى
வரும்
تَأْوِيلُهُۥ
அதன் முடிவு
يَقُولُ
கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
نَسُوهُ
மறந்தனர்/அதை
مِن قَبْلُ
முன்னர்
قَدْ جَآءَتْ
வந்தா(ர்க)ள்
رُسُلُ
தூதர்கள்
رَبِّنَا
எங்கள் இறைவனின்
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
فَهَل لَّنَا
எங்களுக்கு உண்டா?
مِن شُفَعَآءَ
சிபாரிசு செய்பவர்களில்
فَيَشْفَعُوا۟
சிபாரிசு செய்வார்கள்
لَنَآ
எங்களுக்கு
أَوْ
அல்லது
نُرَدُّ
நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்
فَنَعْمَلَ
செய்வோமே
غَيْرَ ٱلَّذِى
அல்லாததை
كُنَّا نَعْمَلُۚ
இருந்தோம்/செய்வோம்
قَدْ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்துக் கொண்டனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுவார்கள்

hal yanzuroona illaa taa weelah; yawma yaatee taaweeluhoo yaqoolul lazeena nasoohu min qablu qad jaaa'at Rusulu Rabbinaa bilhaqq; fahal lanaa min shufa'aaa'a fa yashfa'oo lanaaa aw nuraddu fana'mala ghairal lazee kunnaa na'mal; qad khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon

(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكُمُ
உங்கள் இறைவன்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى خَلَقَ
எவன் படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
فِى سِتَّةِ
ஆறு நாட்களில்
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
عَلَى ٱلْعَرْشِ
அர்ஷின் மீது
يُغْشِى
மூடுகிறான்
ٱلَّيْلَ
இரவால்
ٱلنَّهَارَ
பகலை
يَطْلُبُهُۥ
தேடுகிறது/அதை
حَثِيثًا
தீவிரமாக
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியனை
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
وَٱلنُّجُومَ
இன்னும் நட்சத்திரங்களை
مُسَخَّرَٰتٍۭ
வசப்படுத்தப்பட்டவையாக
بِأَمْرِهِۦٓۗ
தனது கட்டளைக் கொண்டு
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
لَهُ
அவனுக்கே
ٱلْخَلْقُ
படைத்தல்
وَٱلْأَمْرُۗ
இன்னும் அதிகாரம்
تَبَارَكَ
அருள் வளமிக்கவன்
ٱللَّهُ رَبُّ
அல்லாஹ்/இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Inna Rabbakkumul laahul lazee khalaqas sammaawaati wal arda fee sittati qiyaamin summmas tawaa 'alal 'arshi yughshil lailan nahaara yatlu buhoo haseesanw washshamsa walqamara wannujooma musakhkharaatim bi amrih; alaa lahul khalqu wal-amr; tabaarakal laahu Rabbul 'aalameen

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.

Tafseer

ٱدْعُوا۟
அழையுங்கள்
رَبَّكُمْ
உங்கள் இறைவனை
تَضَرُّعًا
தாழ்மையாக
وَخُفْيَةًۚ
இன்னும் மறைவாக
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை

Ud'oo Rabbakum tadarru'anw wa khufyah; innahoo laa yuhibbul mu'tadeen

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மிக்க தாழ்மையாகவும் அந்தரங்கமாகவும் (அத்தகைய) உங்கள் இறைவனிடமே (உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரி) பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

Tafseer

وَلَا تُفْسِدُوا۟
கலகம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بَعْدَ
பின்னர்
إِصْلَٰحِهَا
அது சீர்திருத்தப்பட்ட
وَٱدْعُوهُ
அழையுங்கள்/அவனை
خَوْفًا
பயத்துடன்
وَطَمَعًاۚ
இன்னும் ஆசையுடன்
إِنَّ رَحْمَتَ
நிச்சயமாக கருணை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
قَرِيبٌ
சமீபமானது
مِّنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு

Wa laa tufsidoo fil ardi ba'da islaahihaa wad'oohu khawfanw wa tama'aa; inna rahmatal laahi qareebum minal muhsineen

(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) நாடு சீர்திருந்திய பின்னர் அதில் விஷமம் செய்து கொண்டலையாதீர்கள். (இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.

Tafseer

وَهُوَ
அவன்
ٱلَّذِى
எவன்
يُرْسِلُ
அனுப்புகிறான்
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
بُشْرًۢا
நற்செய்தியாக
بَيْنَ يَدَىْ
முன்னர்
رَحْمَتِهِۦۖ
தனது கருணைக்கு
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ أَقَلَّتْ
அது சுமந்தால்
سَحَابًا
மேகத்தை
ثِقَالًا
கன(மான)
سُقْنَٰهُ
ஓட்டுகிறோம்/அதை
لِبَلَدٍ
பூமியின் பக்கம்
مَّيِّتٍ
இறந்தது
فَأَنزَلْنَا
இன்னும் இறக்குகிறோம்
بِهِ
அதிலிருந்து
ٱلْمَآءَ
மழையை
فَأَخْرَجْنَا
இன்னும் வெளியாக்குகிறோம்
بِهِۦ
அதன் மூலம்
مِن
இருந்து
كُلِّ
எல்லாம்
ٱلثَّمَرَٰتِۚ
கனிகள்
كَذَٰلِكَ
இவ்வாறே
نُخْرِجُ
வெளியாக்குவோம்
ٱلْمَوْتَىٰ
மரணித்தவர்களை
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Wa Huwal lazee yursilur riyaaha bushram baina yadai rahmatihee hattaaa izaaa aqallat sahaaban siqaalan suqnaahu libaladim maiyitin fa annzalnaa bihil maaa'a fa akhrajnaa bihee minn kullis samaraat; kazaalika nukhrijul mawtaa la'allakum tazakkaroon

அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் (வரண்டு) இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!

Tafseer

وَٱلْبَلَدُ
பூமி
ٱلطَّيِّبُ
நல்லது
يَخْرُجُ
வெளியாகிறது
نَبَاتُهُۥ
அதன் தாவரம்
بِإِذْنِ
அனுமதி கொண்டு
رَبِّهِۦۖ
தன் இறைவனின்
وَٱلَّذِى
எது
خَبُثَ
கெட்டுவிட்டது
لَا يَخْرُجُ
வெளியாகாது
إِلَّا
தவிர
نَكِدًاۚ
வெகு சொற்பமாக
كَذَٰلِكَ
இவ்வாறு
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لِقَوْمٍ
மக்களுக்கு
يَشْكُرُونَ
நன்றி செலுத்துகிறார்கள்

Walbaladut taiyibu yakhruju nabaatuhoo bi-izni Rabbihee wallazee khabusa laa yakhruju illaa nakidaa; kazaalika nusarriful Aayaati liqawminy yashkuroon

(ஒரேவிதமான மழை பெய்தபோதிலும்) வளமான பூமி, தன் இறைவனின் கட்டளையைக் கொண்டே எல்லா புற்பூண்டுகளையும் வெளியாக்குகிறது. எனினும், கெட்ட (வளமற்ற) பூமியிலோ வெகு சொற்பமாகவே தவிர முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பல வகைகளிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம்.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
அனுப்பினோம்
نُوحًا
நூஹை
إِلَىٰ قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்திற்கு
فَقَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا
இல்லை
لَكُم
உங்களுக்கு
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுளும்
غَيْرُهُۥٓ
அவனையன்றி
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابَ
வேதனையை
يَوْمٍ عَظِيمٍ
மகத்தான நாளின்

Laqad arsalnaa noohan ilaa qawmihee faqaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuhoo inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'Azeem

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினர்
ٱلْمَلَأُ
தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்)
مِن قَوْمِهِۦٓ
இருந்து/சமுதாயம்/அவருடைய
إِنَّا
நிச்சயமாக நாம்
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவானது

Qaalal mala-u min qaw miheee innaa lanaraaka fee dalaalim mubeen

அதற்கு அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நீங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்" என்று கூறினார்கள்.

Tafseer