Skip to main content

وَمَا تَكُونُ
இருக்கமாட்டீர்
فِى شَأْنٍ
எந்த செயலிலும்
وَمَا تَتْلُوا۟
இன்னும் நீர் ஓத மாட்டீர்
مِنْهُ
அதிலிருந்து
مِن قُرْءَانٍ
குர்ஆனிலிருந்து
وَلَا تَعْمَلُونَ
இன்னும் செய்யமாட்டீர்கள்
مِنْ عَمَلٍ
எந்த செயலையும்
إِلَّا
தவிர
كُنَّا
நாம் இருந்தோம்
عَلَيْكُمْ
உங்கள் மீது
شُهُودًا
சாட்சிகளாக
إِذْ
போது
تُفِيضُونَ
ஈடுபடுகிறீர்கள்
فِيهِۚ
அவற்றில்
وَمَا يَعْزُبُ
இன்னும் மறையாது
عَن رَّبِّكَ
உம் இறைவனை விட்டு
مِن مِّثْقَالِ
அளவு
ذَرَّةٍ
ஓர் அணு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا فِى
இன்னும் வானத்தில்
وَلَآ أَصْغَرَ
சிறிதும் இல்லை
مِن ذَٰلِكَ
இதை விட
وَلَآ أَكْبَرَ
இன்னும் பெரிதும் இல்லை
إِلَّا
தவிர
فِى كِتَٰبٍ
பதிவேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Wa maa takoonu fee shaaninw wa maa tatloo minhu min quraaninw wa laa ta'maloona min 'amalin illaa kunnaa 'alaikum shuhoodan iz tufeedoona feeh; wa maa ya'zubu 'ar Rabbika mim mis qaali zarratin fil ardi wa laa fis samaaa'i wa laaa asghara min zaalika wa laaa akbara illaa fee Kitaabim Mubeen

நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதியபோதிலும், (உங்களுடைய காரியங்களில்) நீங்கள் எதைச் செய்தபோதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ أَوْلِيَآءَ
நிச்சயமாக/நண்பர்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَا خَوْفٌ
ஒரு பயமுமில்லை
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Alaa innaa awliyaaa'al laahi laa khawfun 'alaihim wa laa hum yahzanoon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
وَكَانُوا۟
இருந்தார்கள்
يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுபவர்களாக

Allazeena aamanoo wa kaanoo yattaqoon

அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர்.

Tafseer

لَهُمُ
அவர்களுக்கே
ٱلْبُشْرَىٰ
நற்செய்தி
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
ٱلدُّنْيَا
உலகம்
وَفِى ٱلْءَاخِرَةِۚ
மறுமையில்
لَا تَبْدِيلَ
அறவே இல்லை/மாற்றம்
لِكَلِمَٰتِ
வாக்குகளில்
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَوْزُ
வெற்றி
ٱلْعَظِيمُ
மகத்தானது

Lahumul bushraa filha yaatid dunyaa wa fil Aakhirah; laa tabdeela likalimaatil laah; zaalika huwal fawzul 'azeem

இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.

Tafseer

وَلَا يَحْزُنكَ
கவலைக்குள்ளாக்க வேண்டாம் / உம்மை
قَوْلُهُمْۘ
சொல்/அவர்களுடைய
إِنَّ ٱلْعِزَّةَ
நிச்சயமாக/கண்ணியம்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
جَمِيعًاۚ
அனைத்து
هُوَ
அவன்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Wa laa yahzunka qawluhum; innal 'izzata lillaahi jamee'aa; Huwas Samee'ul 'Aleem

(நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ
நிச்சயமாக
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
مَن
எவர்கள்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَمَن
இன்னும் எவர்கள்
فِى ٱلْأَرْضِۗ
பூமியில்
وَمَا
இன்னும் எதை?
يَتَّبِعُ
பின்பற்றுகின்றனர்
ٱلَّذِينَ
எவர்கள்
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
شُرَكَآءَۚ
இணை(தெய்வங்) களை
إِن يَتَّبِعُونَ
அவர்கள் பின்பற்றுவதில்லை
إِلَّا
தவிர
ٱلظَّنَّ
சந்தேகத்தை
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
إِلَّا
தவிர
يَخْرُصُونَ
கற்பனை செய்பவர்களாக

Alaaa inna lillaahi man fis samaawaati wa man fil ard; wa maa yattabi'ul lazeena yad'oona min doonil laahi shurakaaa'; iny yattabi'oona illaz zannna wa in hum illaa yakhrusoon

வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை; அன்றி அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே!

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எத்தகையவன்
جَعَلَ
ஆக்கினான்
لَكُمُ
உங்களுக்காக
ٱلَّيْلَ
இரவை
لِتَسْكُنُوا۟
நீங்கள் சுகம்பெறுவதற்காக
فِيهِ وَٱلنَّهَارَ
அதில்/இன்னும் பகலை
مُبْصِرًاۚ
பார்க்கக் கூடியதாக
إِنَّ فِى
நிச்சயமாக/இதில்
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَسْمَعُونَ
செவிசாய்க்கின்றார்கள்

Huwal lazee ja'ala lakumul laila litaskunoo feehi wannahaara mubsiraa; inna fee zaalika la Aayaatil liqawmai yasma'oon

நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

قَالُوا۟
கூறுகின்றனர்
ٱتَّخَذَ
ஆக்கிக் கொண்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَدًاۗ
ஒரு சந்ததியை
سُبْحَٰنَهُۥۖ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
هُوَ
அவன்
ٱلْغَنِىُّۖ
தேவையற்றவன்
لَهُۥ
அவனுக்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியிலுள்ளவை
إِنْ عِندَكُم
இல்லை/உங்களிடம்
مِّن سُلْطَٰنٍۭ
எந்த ஓர் ஆதாரம்
بِهَٰذَآۚ
இதற்கு
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
مَا لَا
எதை/ அறியமாட்டீர்கள்

Qaalut takhazal laahu waladan Subhaanahoo Huwal Ghaniyyu lahoo maa fis samaawaati wa maa fil ard; in 'indakum min sultaanim bihaazaaa; ataqooloona 'alal laahi maa laa ta'lamoon

அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்) கூறுகிறீர்களா?

Tafseer

قُلْ
கூறுவீராக
إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
ٱلْكَذِبَ
பொய்யை
لَا يُفْلِحُونَ
வெற்றி பெறமாட்டார்கள்

Qul innal lazeena yaftaroona 'alal laahil kaziba laa yuflihoon

"எவர்கள் அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள்.

Tafseer

مَتَٰعٌ
ஒரு சுகம்
فِى ٱلدُّنْيَا
உலகில்
ثُمَّ
பிறகு
إِلَيْنَا
நம்மிடமே
مَرْجِعُهُمْ ثُمَّ
மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு
نُذِيقُهُمُ
சுவைக்க வைப்போம் அவர்களுக்கு
ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ
வேதனை/கடினமான
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَكْفُرُونَ
அவர்கள் நிராகரிக்கிறார்கள்

Mataa'un fiddunyaa summa ilainaa marji'uhum summa nuzeequhumul 'azaabash shadeeda bimaa kaanoo yakkfuroon

(இத்தகையவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் வரவேண்டிய திருக்கிறது. பின்னர், (உண்மையை இவ்வாறு) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம்.

Tafseer