Skip to main content

فَمَنْ
ஆகவே யாராவது
حَآجَّكَ
உம்மிடம்தர்க்கித்தால்
فِيهِ
இதில்
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا جَآءَكَ
உமக்கு வந்தது
مِنَ ٱلْعِلْمِ
கல்வி
فَقُلْ
கூறுவீராக
تَعَالَوْا۟
வாருங்கள்
نَدْعُ
அழைப்போம்
أَبْنَآءَنَا
எங்கள் பிள்ளைகளை
وَأَبْنَآءَكُمْ
இன்னும் உங்கள் பிள்ளைகளை
وَنِسَآءَنَا
இன்னும் எங்கள்பெண்களை
وَنِسَآءَكُمْ
இன்னும் உங்கள்பெண்களை
وَأَنفُسَنَا
இன்னும் எங்களை
وَأَنفُسَكُمْ
இன்னும் உங்களை
ثُمَّ
பிறகு
نَبْتَهِلْ
பிரார்த்திப்போம்
فَنَجْعَل
ஆக்குவோம்
لَّعْنَتَ ٱللَّهِ
அல்லாஹ்வின் சாபத்தை
عَلَى ٱلْكَٰذِبِينَ
பொய்யர்கள் மீது

Faman haaajjaka feehi mim ba'di maa jaaa'aka minal 'ilmi faqul ta'aalaw nad'u abnaaa'anaa wa abnaaa'akum wa nisaaa'anaa wa nisaaa'akum wa anfusanaa wa anfusakum summa nabtahil fanaj'al la'natal laahi 'alal kaazibeen

(நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا لَهُوَ
இதுதான்
ٱلْقَصَصُ
வரலாறு
ٱلْحَقُّۚ
உண்மையானது
وَمَا
இல்லை
مِنْ
அறவே
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
ஞானவான்

Innaa haazaa lahuwal qasasul haqq; wa maa min ilaahin illal laah; wa innal laahaa la Huwal 'Azeezul Hakeem

நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
عَلِيمٌۢ
மிக அறிந்தவன்
بِٱلْمُفْسِدِينَ
விஷமிகளை

Fa in tawallaw fa innal laaha'aleemun bil mufsideen

(நபியே! இதற்குப் பின்னரும் உங்களை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
تَعَالَوْا۟
வாருங்கள்
إِلَىٰ
பக்கம்
كَلِمَةٍ
ஒரு விஷயம்
سَوَآءٍۭ
சமமானது
بَيْنَنَا
எங்கள் மத்தியில்
وَبَيْنَكُمْ
இன்னும் உங்கள் மத்தியில்
أَلَّا نَعْبُدَ
வணங்க மாட்டோம்
إِلَّا
தவிர
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلَا نُشْرِكَ
இன்னும் இணையாக்க மாட்டோம்
بِهِۦ
அவனுக்கு
شَيْـًٔا وَلَا
எதையும்
يَتَّخِذَ
இன்னும் எடுத்துக் கொள்ள மாட்டார்(கள்)
بَعْضُنَا
நம்மில் சிலர்
بَعْضًا
சிலரை
أَرْبَابًا
கடவுள்களாக
مِّن دُونِ
அல்லாஹ்வைத் தவிர
فَإِن تَوَلَّوْا۟
(அவர்கள்) விலகினால்
فَقُولُوا۟
கூறுங்கள்
ٱشْهَدُوا۟
சாட்சியாக இருங்கள்
بِأَنَّا
நிச்சயமாக நாம்
مُسْلِمُونَ
முஸ்லிம்கள்

Qul yaa Ahlal Kitaabi ta'aalaw ilaa Kalimatin sawaaa'im bainanaa wa bainakum allaa na'buda illal laaha wa laa nushrika bihee shai'anw wa laa yattakhiza ba'dunaa ba'dan arbaabam min doonil laah; fa in tawallaw faqoolush hadoo bi annaa muslimoon

(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

Tafseer

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لِمَ
ஏன்
تُحَآجُّونَ
தர்க்கம்செய்கிறீர்கள்
فِىٓ إِبْرَٰهِيمَ
இப்றாஹீம் விஷயத்தில்
وَمَآ أُنزِلَتِ
இறக்கப்படவில்லை
ٱلتَّوْرَىٰةُ
தவ்றாத்து
وَٱلْإِنجِيلُ
இன்னும் இன்ஜீல்
إِلَّا
தவிர
مِنۢ بَعْدِهِۦٓۚ
அவருக்கு பின்னரே
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Yaaa Ahlal Kitaabi limaa tuhaaajjoona feee Ibraaheema wa maaa unzilatit Tawraatu wal Injeelu illaa mim ba'dih; afala ta'qiloon

வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கின்றீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

هَٰٓأَنتُمْ
நீங்களோ
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
حَٰجَجْتُمْ
தர்க்கம் செய்தீர்கள்
فِيمَا
எதில்
لَكُم
உங்களுக்கு
بِهِۦ عِلْمٌ
அதில்/அறிவு
فَلِمَ
ஆகவே ஏன்
تُحَآجُّونَ
தர்க்கம்செய்கிறீர்கள்
فِيمَا لَيْسَ
எதில்/இல்லை
لَكُم
உங்களுக்கு
بِهِۦ
அதில்
عِلْمٌۚ
அறிவு
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
وَأَنتُمْ
நீங்கள்
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Haaa antum haaa'ulaaa'i baajajtum feemaa lakum bihee 'ilmun falima tuhaaajjoonaa feemaa laisa lakum bihee 'ilm; wallaahu ya'lamu wa antum laa ta'lamoon

நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள். அல்லாஹ் தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.

Tafseer

مَا كَانَ
இருக்கவில்லை
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
يَهُودِيًّا
யூதராக
وَلَا
இன்னும் இல்லை
نَصْرَانِيًّا
கிறித்தவராக
وَلَٰكِن كَانَ
எனினும் இருந்தார்
حَنِيفًا
அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக
مُّسْلِمًا
முஸ்லிமாக
وَمَا كَانَ
அவர்இருக்கவில்லை
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Maa kaana Ibraaheemu Yahoodiyyanw wa laa Nasraa niyyanw wa laakin kaana Haneefam Muslimanw wa maa kaana minal mushrikeen

இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
أَوْلَى
மிக நெருங்கியவர்
ٱلنَّاسِ
மக்களில்
بِإِبْرَٰهِيمَ
இப்ராஹீமுக்கு
لَلَّذِينَ
உறுதியாக எவர்கள்
ٱتَّبَعُوهُ
அவரைப் பின்பற்றினார்கள்
وَهَٰذَا ٱلنَّبِىُّ
இன்னும் இந்த நபி
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ۗ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
وَلِىُّ
பாதுகாவலன்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்

Innaa awlan naasi bi Ibraaheema lallazeenat taba 'oohu wa haazan nabiyyu wallazeena aamanoo; wallaahu waliyyul mu'mineen

நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பவனாக இருக்கின்றான்.

Tafseer

وَدَّت
விரும்பியது
طَّآئِفَةٌ
ஒரு கூட்டம்
مِّنْ أَهْلِ
வேதக்காரர்களில்
لَوْ يُضِلُّونَكُمْ
அவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும்
وَمَا يُضِلُّونَ
வழிகெடுக்க மாட்டார்கள்
إِلَّآ
தவிர
أَنفُسَهُمْ
தங்களை
وَمَا يَشْعُرُونَ
இன்னும் உணரமாட்டார்கள்

Waddat taaa'ifatum min Ahlil Kitaabi law yudil loonakum wa maa yudilloona illaaa anfusahum wa maa yash'uroon

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகின்றார்கள். அவர்கள் தங்களையேயன்றி (உங்களை) வழி கெடுத்திட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.

Tafseer

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
لِمَ
ஏன்
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَأَنتُمْ
நீங்களே
تَشْهَدُونَ
சாட்சியளிக்கிறீர்கள்

Yaaa Ahlal Kitaabi lima takfuroona bi Aayaatil laahi wan antum tashadoon

வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?

Tafseer