Skip to main content

ٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ
எப்படி
فَضَّلْنَا
மேன்மையாக்கினோம்
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
عَلَىٰ
விட
بَعْضٍۚ
சிலரை
وَلَلْءَاخِرَةُ
மறுமைதான்
أَكْبَرُ
மிகப் பெரியது
دَرَجَٰتٍ
பதவிகளால்
وَأَكْبَرُ
இன்னும் மிகப் பெரியது
تَفْضِيلًا
மேன்மையால்

Unzur kaifa faddalnaa ba'dahum 'alaa ba'd; wa lal Aakhiratu akbaru darajaatinw wa akbaru tafdeelaa

(நபியே!) சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை, நீங்கள் கவனித்துப் பாருங்கள்! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் எவ்வளவோ பெரிது; சிறப்பிப்பதாலும் எவ்வளவோ பெரிது.

Tafseer

لَّا تَجْعَلْ
ஆக்காதீர்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَ
வேறு
فَتَقْعُدَ
அமர்ந்து விடுவீர்
مَذْمُومًا
இகழப்பட்டவராக
مَّخْذُولًا
கைவிடப்பட்டவராக

Laa taj'al ma'al laahi ilaahan aakhara fataq'uda mazoomam makhzoolaa

(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற் குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்கள்.

Tafseer

وَقَضَىٰ
கட்டளையிட்டு இருக்கின்றான்
رَبُّكَ
உம் இறைவன்
أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள் என்று
إِلَّآ إِيَّاهُ
அவனைத் தவிர
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் பெற்றோருக்கு
إِحْسَٰنًاۚ
நன்மை புரியுங்கள்
إِمَّا يَبْلُغَنَّ
நிச்சயமாக அடைந்தால்
عِندَكَ
உன்னிடம்
ٱلْكِبَرَ
முதுமையை
أَحَدُهُمَآ
அவ்விருவர்களில் ஒருவர்
أَوْ
அல்லது
كِلَاهُمَا
அவர்கள் இருவரும்
فَلَا تَقُل
சொல்லாதே!
لَّهُمَآ
அவ்விருவரையும்
أُفٍّ
“சீ”
وَلَا
இன்னும் வெருட்டாதே!
تَنْهَرْهُمَا
இன்னும் வெருட்டாதே! அவ்விருவரை
وَقُل
இன்னும் சொல்!
لَّهُمَا
அவ்விருவருக்கும்
قَوْلًا
சொல்லை
كَرِيمًا
மரியாதையானது

Wa qadaa Rabbuka allaa ta'budooo illaaa iyyaahu wa bilwaalidaini ihsaanaa; immaa yablughanna 'indakal kibara ahaduhumaaa aw kilaahumaa falaa taqul lahumaaa uffinw wa laa tanharhumaa wa qullahumaa qawlan kareemaa

(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.

Tafseer

وَٱخْفِضْ
இன்னும் தாழ்த்து
لَهُمَا
அவர்களுக்கு முன்
جَنَاحَ ٱلذُّلِّ
இறக்கையை/ பணிவின்
مِنَ ٱلرَّحْمَةِ
கருணையுடன்
وَقُل
இன்னும் கூறு!
رَّبِّ
என் இறைவா
ٱرْحَمْهُمَا
நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு
كَمَا رَبَّيَانِى
அவர்கள் வளர்த்தவாறே/என்னை
صَغِيرًا
சிறியவனாக

Wakhfid lahumaa janaahaz zulli minar rahmati wa qur Rabbir hamhumaa kamaa rabbayaanee sagheera

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!

Tafseer

رَّبُّكُمْ
உங்கள் இறைவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا
எதை
فِى نُفُوسِكُمْۚ
உங்கள் மனங்களில்
إِن تَكُونُوا۟
நீங்கள் இருந்தால்
صَٰلِحِينَ
நல்லவர்களாக
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
لِلْأَوَّٰبِينَ
மீளுகிறவர்களுக்கு
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக

Rabbukum a'lamu bimaa fee nufoosikum; in takoonoo saaliheena fa innahoo kaana lil awwaabeena Ghafoooraa

உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَءَاتِ
இன்னும் கொடு!
ذَا ٱلْقُرْبَىٰ
உறவினருக்கு
حَقَّهُۥ
அவருடைய உரிமையை
وَٱلْمِسْكِينَ
இன்னும் ஏழைக்கு
وَٱبْنَ ٱلسَّبِيلِ
இன்னும் வழிப்போக்கருக்கு
وَلَا تُبَذِّرْ
இன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே!
تَبْذِيرًا
மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்

Wa aati zal qurbaa haqqahoo walmiskeena wabnas sabeeli wa laa tubazzir tabzeeraa

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.

Tafseer

إِنَّ ٱلْمُبَذِّرِينَ
நிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள்
كَانُوٓا۟
இருக்கின்றனர்
إِخْوَٰنَ
சகோதரர்களாக
ٱلشَّيَٰطِينِۖ
ஷைத்தான்களின்
وَكَانَ
இன்னும் இருக்கின்றான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
لِرَبِّهِۦ
தன் இறைவனுக்கு
كَفُورًا
நன்றி கெட்டவனாக

Innal mubazzireena kaanoo ikhwaanash shayaateeni wa kaanash shaytaanu li Rabbihee kafooraa

ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன்.

Tafseer

وَإِمَّا تُعْرِضَنَّ
நீ புறக்கணித்தால்
عَنْهُمُ
அவர்களை
ٱبْتِغَآءَ
நாடி
رَحْمَةٍ
ஓர் அருளை
مِّن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
تَرْجُوهَا
ஆதரவு வைத்தவனாக/ அதை
فَقُل
ஆகவே சொல்
لَّهُمْ
அவர்களுக்கு
قَوْلًا
சொல்லை
مَّيْسُورًا
மென்மையானது

Wa immaa turidanna 'anhumub tighaaa'a rahmatim mir rabbika tarjoohaa faqul lahum qawlam maisooraa

(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள்.

Tafseer

وَلَا تَجْعَلْ
ஆக்காதே
يَدَكَ
உனது கையை
مَغْلُولَةً
விலங்கிடப்பட்டதாக
إِلَىٰ عُنُقِكَ
உன் கழுத்தில்
وَلَا تَبْسُطْهَا
இன்னும் விரிக்காதே/அதை
كُلَّ ٱلْبَسْطِ
முற்றிலும் விரித்ததாக
فَتَقْعُدَ
அதனால் தங்கிவிடுவாய்
مَلُومًا
பழிக்கப்பட்டவராக
مَّحْسُورًا
முடக்கப்பட்டவராக

Wa laa taj'al yadaka maghloolatan il 'unuqika wa laa tabsut haa kullal basti fataq'uda maloomam mahsooraa

(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
يَبْسُطُ
விரிவாக்குகின்றான்
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
وَيَقْدِرُۚ
இன்னும் அளவாகக் கொடுக்கின்றான்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக
بَصِيرًا
உற்று நோக்குபவனாக

Inna Rabbaka yabsuturrizqa limai yashaaa'u wa yaqdir; innahoo kaana bi'ibaadihee Khabeeram Baseera

நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.)

Tafseer