Skip to main content

هُنَالِكَ
அங்குதான்
ٱبْتُلِىَ
சோதிக்கப்பட்டார்கள்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
وَزُلْزِلُوا۟ زِلْزَالًا
இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
شَدِيدًا
கடுமையாக

Hunaalikab tuliyal mu'minoona wa zulziloo zilzaalan shadeedaa

அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர்.

Tafseer

وَإِذْ يَقُولُ
இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்களும்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
مَّا وَعَدَنَا
நமக்கு வாக்களிக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
وَرَسُولُهُۥٓ
அவனது தூதரும்
إِلَّا
தவிர
غُرُورًا
பொய்யை

Wa iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradum maa wa'adanal laahu wa Rasooluhooo illaa ghurooraa

"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்" என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.

Tafseer

وَإِذْ قَالَت
கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
طَّآئِفَةٌ
ஒரு சாரார்
مِّنْهُمْ
அவர்களில்
يَٰٓأَهْلَ يَثْرِبَ
யஸ்ரிப் வாசிகளே!
لَا مُقَامَ
தங்குவது அறவே முடியாது
لَكُمْ
உங்களுக்கு
فَٱرْجِعُوا۟ۚ
ஆகவே, திரும்பிவிடுங்கள்
وَيَسْتَـْٔذِنُ
அனுமதிகேட்கின்றனர்
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
مِّنْهُمُ
அவர்களில்
ٱلنَّبِىَّ
நபியிடம்
يَقُولُونَ
கூறியவர்களாக
إِنَّ
நிச்சயமாக
بُيُوتَنَا
எங்கள் இல்லங்கள்
عَوْرَةٌ
பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன
وَمَا
ஆனால் இல்லை.
هِىَ
அவை
بِعَوْرَةٍۖ
பாதுகாப்பு அற்றதாக
إِن يُرِيدُونَ
அவர்கள் நாடவில்லை
إِلَّا
தவிர
فِرَارًا
விரண்டோடுவதை

Wa iz qaalat taaa'ifatum minhum yaaa ahla Yasriba laa muqaamaa lakum farji'oo; wa yastaazina fareequm minhumun Nabiyya yaqooloona inna buyootanaa 'awrah; wa maa hiya bi'awratin iny yureedoona illaa firaaraa

அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன" என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை.

Tafseer

وَلَوْ دُخِلَتْ
நுழைந்தால்
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّنْ
சுற்றுப் புறங்களில் இருந்து
أَقْطَارِهَا
சுற்றுப் புறங்களில் இருந்து அதன்
ثُمَّ
பிறகு
سُئِلُوا۟
அவர்களிடம் கேட்கப்பட்டால்
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
لَءَاتَوْهَا
அவர்கள் செய்திருப்பார்கள் அதை
وَمَا تَلَبَّثُوا۟
அவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள்
بِهَآ
அதற்கு
إِلَّا يَسِيرًا
கொஞ்சமே தவிர

wa law dukhilat 'alaihim min aqtaarihaa summa su'ilul fitnata la aatawhaa wa maa talabbasoo bihaaa illaa yaseeraa

பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். தவிர (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமேயன்றி அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.)

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
كَانُوا۟ عَٰهَدُوا۟
ஒப்பந்தம் செய்திருந்தனர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
لَا يُوَلُّونَ
ஓடமாட்டார்கள்
ٱلْأَدْبَٰرَۚ
புறமுதுகிட்டு
وَكَانَ
இருக்கின்றது
عَهْدُ
ஒப்பந்தம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
مَسْـُٔولًا
விசாரிக்கப்படுவதாக

Wa laqad kaanoo 'aahadul laaha min qablu laa yuwal loonal adbaar; wa kaana 'ahdul laahi mas'oolaa

அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள்.

Tafseer

قُل
கூறுவீராக!
لَّن يَنفَعَكُمُ
உங்களுக்கு அறவே பலனளிக்காது
ٱلْفِرَارُ
விரண்டோடுவது
إِن فَرَرْتُم
நீங்கள் விரண்டோடினால்
مِّنَ ٱلْمَوْتِ
மரணத்தைவிட்டு
أَوِ ٱلْقَتْلِ
அல்லது கொல்லப்படுவதை விட்டு
وَإِذًا
அப்போதும்
لَّا تُمَتَّعُونَ
சுகமளிக்கப்பட மாட்டீர்கள்
إِلَّا قَلِيلًا
கொஞ்சமே தவிர

Qul lany y anfa'akumul firaaru in farartum minal mawti awil qatli wa izal laa tumatta'oona illaa qaleelaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மரணத்தை விட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடியபோதிலும், உங்களுடைய ஓட்டம் உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்டபோதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்."

Tafseer

قُلْ
கூறுவீராக!
مَن
யார்?
ذَا ٱلَّذِى
உங்களைப் பாதுகாக்கின்றவர்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வைவிட்டும்
إِنْ أَرَادَ
நாடினால்
بِكُمْ
உங்களுக்கு
سُوٓءًا
ஒரு தீங்கை
أَوْ أَرَادَ
அல்லது/அவன் நாடினால்/உங்களுக்கு
رَحْمَةًۚ
கருணை புரிய
وَلَا يَجِدُونَ
இன்னும் காணமாட்டார்கள்
لَهُم
தங்களுக்கு
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَلِيًّا
பொறுப்பாளரையோ
وَلَا نَصِيرًا
உதவியாளரையோ

Qul m an zal lazee ya'simukum minal laahi in araada bikum sooo'an aw araada bikum rahmah; wa laa yajidoona lahum min doonil laahi waliyyanw wa laa naseeraa

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அல்லது உங்களுக்கு அருள் புரியவே நாடினாலும் அதனை உங்களுக்குத் தடுத்து விடுபவன் யார்? அல்லாஹ்வையன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாத்துக் கொள்பவர்களையும் காண மாட்டார்கள்.

Tafseer

قَدْ
திட்டமாக
يَعْلَمُ
நன்கறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُعَوِّقِينَ
தடுப்பவர்களை(யும்)
مِنكُمْ
உங்களில்
وَٱلْقَآئِلِينَ
சொல்பவர்களையும்
لِإِخْوَٰنِهِمْ
தங்கள் சகோதரர்களுக்கு
هَلُمَّ
வந்துவிடுங்கள்
إِلَيْنَاۖ
எங்களிடம்
وَلَا يَأْتُونَ
இன்னும் வரமாட்டார்கள்
ٱلْبَأْسَ
போருக்கு
إِلَّا قَلِيلًا
குறைவாகவே தவிர

Qad ya'lamul laahul mu'awwiqeena minkum walqaaa'ileena li ikhwaanihim hahumma ilainaa, wa laa yaatoonal baasa illaa qaleelaa

உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் "(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை.

Tafseer

أَشِحَّةً
மிகக் கருமிகளாக இருக்கின்றனர்
عَلَيْكُمْۖ
உங்கள் விஷயத்தில்
فَإِذَا جَآءَ
வந்தால்
ٱلْخَوْفُ
பயம்
رَأَيْتَهُمْ
அவர்களை நீர் காண்பீர்
يَنظُرُونَ
அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக
إِلَيْكَ
உம் பக்கம்
تَدُورُ
சுழலக்கூடிய நிலையில்
أَعْيُنُهُمْ
அவர்களது கண்கள்
كَٱلَّذِى يُغْشَىٰ
மயக்கம் அடைகின்றவனைப் போல்
عَلَيْهِ
அவன் மீது
مِنَ ٱلْمَوْتِۖ
மரணத்தால்
فَإِذَا ذَهَبَ
சென்றுவிட்டால்
ٱلْخَوْفُ
பயம்
سَلَقُوكُم
உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்
بِأَلْسِنَةٍ
நாவுகளினால்
حِدَادٍ
கூர்மையான
أَشِحَّةً
பேராசையுடையவர்களாக
عَلَى ٱلْخَيْرِۚ
செல்வத்தின் மீது
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَمْ يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ளவில்லை
فَأَحْبَطَ
ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْمَٰلَهُمْۚ
அவர்களின் அமல்களை
وَكَانَ
இருக்கின்றது
ذَٰلِكَ
இது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرًا
மிக எளிதாக

Ashihhatan 'alaikum faizaa jaaa'al khawfu ra aytahum yanzuroona ilaika tadooru a'yunuhum kallazee yughshaa 'alaihi minal mawti fa izaa zahabal khawfu salqookum bi alsinatin hidaadin ashibbatan 'alal khayr; ulaaa'ika lam yu'minoo fa ahbatal laahu a'maalahum; wa kaana zaalika 'alal laahi yaseeraa

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) யாதொரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பயம் நீங்கி (நம்பிக்கை யாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தை களைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இத்தகையவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.

Tafseer

يَحْسَبُونَ
எண்ணுகின்றனர்
ٱلْأَحْزَابَ
இராணுவங்கள்
لَمْ يَذْهَبُوا۟ۖ
அவர்கள் செல்லவில்லை
وَإِن يَأْتِ
வந்தால்
ٱلْأَحْزَابُ
அந்த இராணுவங்கள்
يَوَدُّوا۟
ஆசைப்படுகின்றனர்
لَوْ أَنَّهُم
நிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமே
بَادُونَ
கிராமங்களில்
فِى ٱلْأَعْرَابِ
தாங்கள் கிராமவாசிகளுடன்
يَسْـَٔلُونَ
அவர்கள் விசாரிக்கின்றனர்
عَنْ أَنۢبَآئِكُمْۖ
உங்கள் செய்திகளைப் பற்றி
وَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்தாலும்
فِيكُم
உங்களுடன்
مَّا قَٰتَلُوٓا۟
அவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள்
إِلَّا قَلِيلًا
மிகக் குறைவாகவே தவிர

Yahsaboonal Ahzaaba lam yazhaboo wa iny yaatil Ahzaabu yawaddoo law annahum baadoona fil A'raabi yasaloona 'an ambaaa'ikum wa law kaanoo feekum maa qaatalooo illaa qaleela

(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவம் முற்றுகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் திரும்ப வந்துவிட்டாலோ யாதொரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களோ தோல்வியுறு கின்றீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கிவிட்ட போதிலும், ஒரு சொற்ப நேரமே அன்றி (அதிகமாக) போர் புரியமாட்டார்கள்.

Tafseer