Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَتَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذْ هَمَّ
போது/நாடினர்
قَوْمٌ
ஒரு சமுதாயம்
أَن يَبْسُطُوٓا۟
அவர்கள் நீட்டுவதற்கு
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
أَيْدِيَهُمْ
தங்கள் கரங்களை
فَكَفَّ
தடுத்தான்
أَيْدِيَهُمْ
அவர்களுடைய கரங்களை
عَنكُمْۖ
உங்களை விட்டு
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Yaa aiyuhal lazeena aamanuz kuroo ni'matallaahi 'alaikum iz hamma qawmun ai yabsutooo ilaikum aidiyahm fakaffa aidiyahum 'ankum wattaqullaah; wa'alal laahi fal yatawakalil mu'minoon

நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கை கொண்ட அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.

Tafseer

وَلَقَدْ
திட்டமாக
أَخَذَ
வாங்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِيثَٰقَ
உறுதிமொழி
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
وَبَعَثْنَا
இன்னும் அனுப்பினோம்
مِنْهُمُ
அவர்களிலிருந்து
ٱثْنَىْ عَشَرَ
பன்னிரெண்டு
نَقِيبًاۖ
தலைவரை
وَقَالَ
இன்னும் கூறினான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِنِّى
நிச்சயமாக நான்
مَعَكُمْۖ
உங்களுடன்
لَئِنْ أَقَمْتُمُ
நீங்கள் நிலைநிறுத்தினால்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتَيْتُمُ
இன்னும் நீங்கள் கொடுத்தீர்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَءَامَنتُم
இன்னும் நம்பிக்கை கொண்டீர்கள்
بِرُسُلِى
என் தூதர்களை
وَعَزَّرْتُمُوهُمْ
இன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள்
وَأَقْرَضْتُمُ
இன்னும் நீங்கள் கடன் கொடுத்தால்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
قَرْضًا حَسَنًا
கடன்/அழகியது
لَّأُكَفِّرَنَّ
நிச்சயமாக அகற்றிடுவேன்
عَنكُمْ
உங்களைவிட்டு
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
وَلَأُدْخِلَنَّكُمْ
இன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களை
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
இருந்து/அதன் கீழே
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
فَمَن
எவர்
كَفَرَ
நிராகரிப்பார்
بَعْدَ
பின்னர்
ذَٰلِكَ
இதற்கு
مِنكُمْ
உங்களில்
فَقَدْ
திட்டமாக
ضَلَّ
வழி தவறிவிட்டார்
سَوَآءَ
நடு (நேரான)
ٱلسَّبِيلِ
வழி

Wa laqad akhazal laahu meesaaqa Banee Israaa'eela wa ba'sanaa minhumus ani 'ashara naqeebanw wa qaalal laahu innee ma'akum la'in aqamtumus Salaata wa aataitumuz Zakaata wa aamantum bi Rusulee wa'azzartumoohum wa aqradtumul laaha qardan hasanal la ukaffiranna 'ankum saiyiaatikum wa la udkhilan nakum Jannaatin tajree min tahtihal anhaar; faman kafara ba'da zaalika minkum faqad dalla sawaaa'as Sabeel

நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கின்றான். அன்றி, அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கின்றோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, (கஷ்டத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் உங்களை நுழைய வைப்பேன்" என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.

Tafseer

فَبِمَا نَقْضِهِم
ஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்
مِّيثَٰقَهُمْ
உறுதி மொழியை/தங்கள்
لَعَنَّٰهُمْ
சபித்தோம்/அவர்களை
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
قُلُوبَهُمْ
உள்ளங்களை/அவர்களுடைய
قَٰسِيَةًۖ
இறுக்கமானதாக
يُحَرِّفُونَ
புரட்டுகிறார்கள்
ٱلْكَلِمَ
வசனங்களை
عَن
இருந்து
مَّوَاضِعِهِۦۙ
அதன் இடங்கள்
وَنَسُوا۟
இன்னும் மறந்தார்கள்
حَظًّا
ஒரு பாகத்தை
مِّمَّا
எதிலிருந்து
ذُكِّرُوا۟ بِهِۦۚ
உபதேசிக்கப்பட்டார்கள்/அதை
وَلَا تَزَالُ
கண்டுகொண்டே இருப்பீர்
عَلَىٰ خَآئِنَةٍ
மோசடியை
مِّنْهُمْ
அவர்களிடமிருந்து
إِلَّا
தவிர
قَلِيلًا
சிலரை
مِّنْهُمْۖ
அவர்களில்
فَٱعْفُ
ஆகவே மன்னிப்பீராக
عَنْهُمْ
அவர்களை
وَٱصْفَحْۚ
இன்னும் புறக்கணிப்பீராக
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُحْسِنِينَ
நற்பண்பாளர்களை

Fabimaa naqdihim meesaa qahum la'annaahum wa ja'alnaa quloobahum qaasiyatany yuharrifoonal kalima 'ammawaadi'ihee wa nasoo hazzam mimmaa zukkiroo bih; khaaa'inatim minhum illaa qaleelam minhum fa'fu 'anhum wasfah; innal laaha yuhibbul muhsineen

அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டு கின்றார்கள். அன்றி, (நம்முடைய இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர்கள். ஆகவே, இ(வ்)வ(ற்ப)ர்களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கின்றான்.

Tafseer

وَمِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
قَالُوٓا۟
கூறினர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
نَصَٰرَىٰٓ
கிறிஸ்த்தவர்கள்
أَخَذْنَا
வாங்கினோம்
مِيثَٰقَهُمْ
அவர்களுடைய உறுதிமொழியை
فَنَسُوا۟
மறந்தார்கள்
حَظًّا
ஒரு பகுதியை
مِّمَّا
எதிலிருந்து
ذُكِّرُوا۟
உபதேசிக்கப்பட்டார்கள்
بِهِۦ
அதைக் கொண்டு
فَأَغْرَيْنَا
ஆகவே மூட்டினோம்
بَيْنَهُمُ
அவர்களுக்கு மத்தியில்
ٱلْعَدَاوَةَ
பகைமையை
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
إِلَىٰ يَوْمِ
வரை/மறுமை நாள்
وَسَوْفَ يُنَبِّئُهُمُ
அவர்களுக்கு அறிவிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எதை
كَانُوا۟
இருந்தார்கள்
يَصْنَعُونَ
செய்கிறார்கள்

Wa minal lazeena qaalooo innaa nasaaraaa akhaznaa meesaaqahum fanasoo hazzam mimmaa zukkiroo bihee fa aghrainaa binahumul 'adaawata walbaghdaaa'a ilaa yawmil Qiyaamah; wa sawfa yunabbi'uhumul laahu bimaa kaanoo yasna'oon

அன்றி, எவர்கள் தங்களை "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" எனக் கூறுகின்றார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கின்றோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.

Tafseer

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
قَدْ
திட்டமாக வந்து விட்டார்
جَآءَكُمْ
உங்களிடம்
رَسُولُنَا
நம் தூதர்
يُبَيِّنُ
தெளிவுபடுத்துவார்
لَكُمْ
உங்களுக்கு
كَثِيرًا
பலவற்றை
مِّمَّا
எதிலிருந்து
كُنتُمْ
இருந்தீர்கள்
تُخْفُونَ
மறைக்கிறீர்கள்
مِنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
وَيَعْفُوا۟
இன்னும் விட்டுவிடுவார்
عَن كَثِيرٍۚ
பலவற்றை
قَدْ
திட்டமாக வந்து விட்டது
جَآءَكُم
உங்களிடம்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
نُورٌ
ஓர் ஒளி
وَكِتَٰبٌ
இன்னும் ஒரு வேதம்
مُّبِينٌ
தெளிவானது

yaaa Ahlal kitaabi qad jaaa'akum Rasoolunaa yubaiyinu lakum kaseeram mimmmaa kuntum tukhfoona minal Kitaabi wa ya'foo 'an kaseer; qad jaaa'akum minal laahi noorunw wa Kitaabum Mubeen

வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.

Tafseer

يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
بِهِ
அதன் மூலமாக
ٱللَّهُ
அல்லாஹ்
مَنِ
எவர்கள்
ٱتَّبَعَ
பின்பற்றினார்(கள்)
رِضْوَٰنَهُۥ
அவனின் பொருத்தத்தை
سُبُلَ
பாதைகளை
ٱلسَّلَٰمِ
ஈடேற்றத்தின்
وَيُخْرِجُهُم
இன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களை
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
إِلَى
பக்கம்
ٱلنُّورِ
ஒளி
بِإِذْنِهِۦ
தன் கட்டளைப்படி
وَيَهْدِيهِمْ
இன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்
إِلَىٰ صِرَٰطٍ
பக்கம்/வழி
مُّسْتَقِيمٍ
நேர்

Yahdee bihil laahu manit taba'a ridwaanahoo subulas salaami wa yukhrijuhum minaz zulumaati ilan noori bi iznihee wa yahdeehim ilaa Siraatim Mustaqeem

(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி, இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான்.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
كَفَرَ
நிராகரித்தனர்
ٱلَّذِينَ قَالُوٓا۟
எவர்கள்/கூறினர்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
هُوَ
அவன்
ٱلْمَسِيحُ
மஸீஹ்தான்
ٱبْنُ
மகன்
مَرْيَمَۚ
மர்யமுடைய
قُلْ
கூறுவீராக
فَمَن
யார்
يَمْلِكُ
சக்தி பெறுவான்
مِنَ
இடம்
ٱللَّهِ
அல்லாஹ்
شَيْـًٔا
ஒரு சிறிதும்
إِنْ أَرَادَ
நாடினால்
أَن يُهْلِكَ
அவன் அழிப்பதை
ٱلْمَسِيحَ
மஸீஹை
ٱبْنَ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
وَأُمَّهُۥ
இன்னும் அவருடைய தாயை
وَمَن
யார்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
جَمِيعًاۗ
அனைவரையும்
وَلِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَاۚ
இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
يَخْلُقُ
படைக்கிறான்
مَا يَشَآءُۚ
எதை/நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீதும்
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Laqad kafaral lazeena qaalooo innal laaha huwal maseehub nu Maryam; qul famany-yamliku minal laahi shai'an in araada ai yuhlikal Maseehab na Maryama wa ummahoo wa man fil ardi jamee'aa, wa lillaahi mmulkus samaawaati wal ardi wa maa bainahumaa; yakhluqu maa Yashaaa'; wakhluqu maa yashaaa'; wallaahu 'alaa kulli shai'in Qadeer

எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர் களாகவே இருக்கின்றனர். ஆகவே (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால், வானங்கள், பூமி இன்னும் இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை படைக்கின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَقَالَتِ
கூறினர்
ٱلْيَهُودُ
யூதர்கள்
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
نَحْنُ
நாங்கள்
أَبْنَٰٓؤُا۟
பிள்ளைகள்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَأَحِبَّٰٓؤُهُۥۚ
இன்னும் அவனுடைய நேசர்கள்
قُلْ
கூறுவீராக
فَلِمَ يُعَذِّبُكُم
அவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களை
بِذُنُوبِكُمۖ
உங்கள் குற்றங்களுக்காக
بَلْ
மாறாக
أَنتُم
நீங்கள்
بَشَرٌ
மனிதர்கள்
مِّمَّنْ
எவர்களில்
خَلَقَۚ
படைத்தான்
يَغْفِرُ
மன்னிக்கிறான்
لِمَن يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்கிறான்
مَن يَشَآءُۚ
எவர்களை/நாடுகிறான்
وَلِلَّهِ
அல்லாஹ்விற்குரியதே
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَاۖ
இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
وَإِلَيْهِ
அவனளவில்தான்
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Wa qaalatil Yahoodu wan Nasaaraa nahnu abnaaa'ul laahi wa ahibbaaa'uh; qul falima yu'azzibukum bizunoobikum bal antum basharum mimmman khalaq; yaghfiru limai yashaaa'u wa yu'azzibu mai yashaaa'; wa lillaahi mulkus samaawaati wal ardi wa maa bainahumaa wa ilaihil maseer

யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகளாகவும் அவனுடைய அன்பிற்குரியவர்களாகவும் இருக்கின்றோம்" என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுக்குப் பிறந்த பிள்ளை களல்ல. ஆகவே உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கின்றான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கின்றான். வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கின்றது.

Tafseer

يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
قَدْ
வந்துவிட்டார்
جَآءَكُمْ
உங்களிடம்
رَسُولُنَا
நம் தூதர்
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறார்
لَكُمْ
உங்களிடம்
عَلَىٰ فَتْرَةٍ
இடைவெளியில்
مِّنَ ٱلرُّسُلِ
தூதர்களின்
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறாதிருக்க
مَا
வரவில்லை
جَآءَنَا
வரவில்லை எங்களுக்கு
مِنۢ
எவரும்
بَشِيرٍ
நற்செய்தி கூறுபவர்
وَلَا
இன்னும் இல்லை
نَذِيرٍۖ
எச்சரிப்பவர்
فَقَدْ
உறுதியாக
جَآءَكُم
வந்துவிட்டார் உங்களிடம்
بَشِيرٌ
நற்செய்தி கூறுபவர்
وَنَذِيرٌۗ
இன்னும் எச்சரிப்பவர்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீதும்
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Yaaa Ahlal Kitaabi qad jaaa'akum Rasoolunaa yubaiyinu lakum 'alaa fatratim minal Rusuli an taqooloo maa jaaa'anaa mim basheerinw wa laa nazeerin faqad jaaa'akum basheerunw wa nazeer; wallaahu 'alaa kulli shai'in Qadeer

வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரையில்) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் "நற்செய்தி கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் கூடிய (ஒரு தூது)வர் எங்களிடம் வரவேயில்லை" என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நம்முடைய (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். அவர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவுமே இருக்கின்றார். அல்லாஹ், அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை...
مُوسَىٰ
மூஸா
لِقَوْمِهِۦ
தன் சமுதாயத்திற்கு
يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَةَ
அருளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِذْ جَعَلَ
அந்நேரத்தில்/ ஆக்கினான்
فِيكُمْ
உங்களில்
أَنۢبِيَآءَ
நபிமார்களை
وَجَعَلَكُم
ஆக்கினான்/உங்களை
مُّلُوكًا
அரசர்களாக
وَءَاتَىٰكُم
இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு
مَّا
எவற்றை
لَمْ يُؤْتِ
கொடுக்கவில்லை
أَحَدًا
ஒருவருக்கும்
مِّنَ ٱلْعَٰلَمِينَ
உலகத்தாரில்

Qa iz qaala Moosaa liqawmihee yaa qawmiz kuroo ni'matal laahi 'alaikum iz ja'ala feekum mulookanw wa aataakum maa lam yu'ti ahadam minal 'aalameen

அன்றி, மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், "மன்னுஸல்வா" என்ற உணவு போன்ற)வைகளையும் உங்களுக்கு அளித்திருக்கின்றான்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்.

Tafseer