Skip to main content

يَٰقَوْمِ
என் சமுதாயமே
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
ٱلْأَرْضَ
பூமியில்
ٱلْمُقَدَّسَةَ
பரிசுத்தமானது
ٱلَّتِى كَتَبَ
எது/விதித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَكُمْ
உங்களுக்கு
وَلَا تَرْتَدُّوا۟
இன்னும் திரும்பிவிடாதீர்கள்
عَلَىٰٓ
பின் புறங்களில்
أَدْبَارِكُمْ
பின் புறங்களில் உங்கள்
فَتَنقَلِبُوا۟
திரும்புவீர்கள்
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக

Yaa qawmid khulul Ardal MMuqaddasatal latee katabal laahu lakum wa laa tartaddoo 'alaaa adbaarikum fatanqaliboo khaasireen

(தவிர, அவர்) "என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர் களாகவே திரும்புவீர்கள்" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِنَّ
நிச்சயமாக
فِيهَا
அதில்
قَوْمًا
ஒரு சமுதாயம்
جَبَّارِينَ
பலசாலிகளான
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَن نَّدْخُلَهَا
நுழையவேமாட்டோம் /அதில்
حَتَّىٰ
வரை
يَخْرُجُوا۟
வெளியேறுவார்கள்
مِنْهَا
அதிலிருந்து
فَإِن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறினால்
مِنْهَا
அதிலிரு ந்து
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
دَٰخِلُونَ
நுழைவோம்

Qaaloo yaa Moosaaa innaa feehaa qwman jabbaareena wa innaa lan nadkhulahaa hattaa yakhrujoo minhaa fa innaa daakhiloon

(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்" என்றனர்.

Tafseer

قَالَ
கூறினார்(கள்)
رَجُلَانِ
இருவர்
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
يَخَافُونَ
பயப்படுகிறார்கள்
أَنْعَمَ
அருள் புரிந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمَا
அவ்விருவர் மீதும்
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
عَلَيْهِمُ
அவர்களைஎதிர்த்து
ٱلْبَابَ
வாசலில்
فَإِذَا دَخَلْتُمُوهُ
அதில் நீங்கள் நுழைந்தால்
فَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
غَٰلِبُونَۚ
வெற்றி பெறுவீர்கள்
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
فَتَوَكَّلُوٓا۟
நம்பிக்கை வையுங்கள்
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Qaala rajulaani minal lazeena yakhaafoona an'amal laahu 'alaihimad khuloo 'alaihimul baab, fa izaa dakhaltumoohu fa innakum ghaaliboon; wa 'alal laahi fatawakkalooo in kuntum mu'mineen

(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள். அதில் நீங்கள் நுழைந்த மாத்திரத்தில் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வையே நம்புங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
கூறினர்
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَن نَّدْخُلَهَآ
நுழையவேமாட்டோம் /அதில்
أَبَدًا
அறவே
مَّا دَامُوا۟
அவர்கள் இருக்கும் காலமெல்லாம்
فِيهَاۖ
அதில்
فَٱذْهَبْ أَنتَ
ஆகவே செல் / நீ
وَرَبُّكَ
இன்னும் உன் இறைவன்
فَقَٰتِلَآ
இருவரும் போரிடுங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
هَٰهُنَا
இங்கேதான்
قَٰعِدُونَ
உட்கார்ந்திருப்போம்

Qaaloo yaa Moosaaa innaa lan nadkhulahaa abadam maa daamoo feehaa fazhab anta wa Rabbuka faqaatilaaa innaa haahunaa qaa'idoon

(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
رَبِّ
என் இறைவா
إِنِّى
நிச்சயமாக நான்
لَآ أَمْلِكُ
அதிகாரம் பெற மாட்டேன்
إِلَّا
தவிர
نَفْسِى
எனக்கு
وَأَخِىۖ
இன்னும் என் சகோதரர்
فَٱفْرُقْ
ஆகவே பிரித்திடு
بَيْنَنَا
எங்களுக்கு மத்தியில்
وَبَيْنَ
இன்னும் மத்தியில்
ٱلْقَوْمِ
சமுதாயம்
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Qaala Rabbi innee laaa amliku illaa nafsee wa akhee fafruq bainanaa wa bainal qawmil faasiqeen

(அதற்கு மூஸா) "என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

Tafseer

قَالَ
கூறினான்
فَإِنَّهَا
ஆகவே நிச்சயமாக அது
مُحَرَّمَةٌ
தடுக்கப்பட்டதாகும்
عَلَيْهِمْۛ
அவர்கள் மீது
أَرْبَعِينَ
நாற்பது
سَنَةًۛ
ஆண்டு(கள்)
يَتِيهُونَ
திக்கற்றலைவார்கள்
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
فَلَا تَأْسَ
ஆகவே கவலைப்படாதீர்
عَلَى ٱلْقَوْمِ
சமுதாயத்தின் மீது
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Qaala fa innahaa muhar ramatun 'alaihim arba'eena sanah; yateehoona fil ard; falaa taasa 'alal qawmil faasiqeen

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) "அந்த இடம் நாற்பது வருடங்கள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, இந்தப் பாவிகளான மக்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்!" என்று (மூஸாவுக்குக்) கூறினான்.

Tafseer

وَٱتْلُ
ஓதுவீராக
عَلَيْهِمْ
அவர்கள் முன்
نَبَأَ ٱبْنَىْ
செய்தியை/இரு மகன்களின்
ءَادَمَ
ஆதமுடைய
بِٱلْحَقِّ
உண்மையில்
إِذْ قَرَّبَا
போது/ குர்பானி கொடுத்தனர்
قُرْبَانًا
ஒரு குர்பானியை
فَتُقُبِّلَ
ஏற்றுக் கொள்ளப்பட்டது
مِنْ
இருந்து
أَحَدِهِمَا
அவ்விருவரில் ஒருவர்
وَلَمْ يُتَقَبَّلْ
ஏற்கப்படவில்லை
مِنَ
இருந்து
ٱلْءَاخَرِ
மற்றவர்
قَالَ
என்றார்
لَأَقْتُلَنَّكَۖ
நிச்சயமாக உன்னைக்கொல்வேன்
قَالَ
கூறினார்
إِنَّمَا يَتَقَبَّلُ
ஏற்பதெல்லாம்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்

Watlu 'alaihim naba abnai Aadama bilhaqq; iz qarrabaa qurbaanan fatuqubbila min ahadihimaa wa lam yutaqabbal minal aakhari qaala la aqtulannnaka qaala innamaa yataqabbalul laahu minal muttaqeen

(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் "குர்பானி" (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி அ)து ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் "நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன்" என்றார். உடனே (குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லவர்) "அல்லாஹ் ஏற்றுக் கொள்வ தெல்லாம் இறை அச்சமுள்ளவர்(களின் பலி)களைத்தான்" என்று பதில் கூறினார்.

Tafseer

لَئِنۢ
بَسَطتَ
நீங்கள் நீட்டினால்
إِلَىَّ
என்னளவில்
يَدَكَ
உன் கரத்தை
لِتَقْتُلَنِى
நீ என்னைக் கொல்வ தற்காக
مَآ أَنَا۠
நான் இல்லை
بِبَاسِطٍ
நீட்டுபவனாக
يَدِىَ
என் கரத்தை
إِلَيْكَ
உன்னளவில்
لِأَقْتُلَكَۖ
நான் கொல்வதற்காக/உன்னை
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்

La'im basatta ilaiya yadaka litaqtulanee maaa ana bibaasitiny yadiya ilaika li aqtulaka inneee akhaaful laaha Rabbal 'aalameen

(அன்றி) "நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டு வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்.

Tafseer

إِنِّىٓ
நிச்சயமாக நான்
أُرِيدُ
நாடுகிறேன்
أَن تَبُوٓأَ
நீ திரும்புவதை
بِإِثْمِى
என் பாவத்துடன்
وَإِثْمِكَ
உன் பாவம்
فَتَكُونَ
ஆகிவிடுவாய்
مِنْ
இருந்து
أَصْحَٰبِ
வாசிகள்
ٱلنَّارِۚ
நரகம்
وَذَٰلِكَ
இது
جَزَٰٓؤُا۟
கூலி
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்

Inee ureedu an tabooo'a bi ismee wa ismika fatakoona min Ashaabin Naar; wa zaalika jazaaa'uz zaalimeen

"என்னுடைய பாவச் சுமையையும், உன்னுடைய பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்" (என்று கூறினார்.)

Tafseer

فَطَوَّعَتْ
தூண்டியது
لَهُۥ
அவரை
نَفْسُهُۥ
அவருடைய மனம்
قَتْلَ
கொல்வதற்கு
أَخِيهِ
தன் சகோதரரை
فَقَتَلَهُۥ
ஆகவே அவரைக் கொன்றார்
فَأَصْبَحَ
ஆகவே ஆகினார்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Fatawwa'at lahoo nafsu hoo qatla akheehi faqatalahoo fa asbaha minal khaasireen

(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டி விடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்.

Tafseer