Skip to main content

وَإِذْ قُلْنَا
நாம் கூறிய சமயம்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِءَادَمَ
ஆதமுக்கு
فَسَجَدُوٓا۟
சிரம் பணிந்தனர்
إِلَّآ
தவிர
إِبْلِيسَ
இப்லீஸ்
قَالَ
கூறினான்
ءَأَسْجُدُ
நான் சிரம் பணிவதா?
لِمَنْ
எவருக்கு
خَلَقْتَ
நீ படைத்தாய்
طِينًا
மண்ணிலிருந்து

Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Ibleesa qaala 'a-asjudu liman khalaqta teena

மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ "நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
கூறினான்
أَرَءَيْتَكَ
நீ அறிவிப்பாயாக
هَٰذَا
இவர்தானா
ٱلَّذِى
எவர்
كَرَّمْتَ
நீ கண்ணியப்படுத்தினாய்
عَلَىَّ
என்னை விட
لَئِنْ أَخَّرْتَنِ
நீ பிற்படுத்தினால்/என்னை
إِلَىٰ
வரை
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
لَأَحْتَنِكَنَّ
நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்
ذُرِّيَّتَهُۥٓ
இவருடைய சந்ததிகளை
إِلَّا
தவிர
قَلِيلًا
குறைவானவர்களை

Qaala ara'aytaka haazal lazee karramta 'alaiya la'in akhhartani ilaa Yawmil Qiyaamati la-ah tanikanna zurriyyatahooo illaa qaleelaa

(பின்னும் இறைவனை நோக்கி) "என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?" (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) "நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
ٱذْهَبْ
போய்விடு
فَمَن تَبِعَكَ
யார்/பின்பற்றினார்/உன்னை
مِنْهُمْ
அவர்களில்
فَإِنَّ
நிச்சயமாக
جَهَنَّمَ
நரகம்தான்
جَزَآؤُكُمْ
கூலி உங்கள்
جَزَآءً
கூலியாக
مَّوْفُورًا
முழுமையானது

Qaalaz hab faman tabi'aka minhum fa inna Jahannama jazaaa'ukum jazaaa'am mawfooraa

(அதற்கு இறைவன், இங்கிருந்து) "நீ அப்புறப்பட்டுவிடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்" என்றும்,

Tafseer

وَٱسْتَفْزِزْ
இன்னும் தூண்டிவிடு
مَنِ
எவர்
ٱسْتَطَعْتَ
நீ இயன்றாய்
مِنْهُم
அவர்களில்
بِصَوْتِكَ
உன் சப்தத்தைக் கொண்டு
وَأَجْلِبْ
இன்னும் ஏவிவிடு
عَلَيْهِم
அவர்கள் மீது
بِخَيْلِكَ
உன் குதிரைப் படைக¬ளை
وَرَجِلِكَ
இன்னும் உன் காலாட்படைகள்
وَشَارِكْهُمْ
இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன்
فِى ٱلْأَمْوَٰلِ
செல்வங்களில்
وَٱلْأَوْلَٰدِ
இன்னும் சந்ததிகளில்
وَعِدْهُمْۚ
இன்னும் வாக்களி அவர்களுக்கு
وَمَا
வாக்களிக்க மாட்டான்
يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான் அவர்களுக்கு
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
إِلَّا
தவிர
غُرُورًا
ஏமாற்றுவதற்கே

Wastafziz manis tat'ta minhum bisawtika wa ajlib 'alaihim bikhailika wa rajilika wa shaarik hum fil amwaali wal awlaadi wa 'idhum; wa maa ya'iduhumush Shaitaanu illaa ghurooraa

(அன்றி) "நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்துகொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி" என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை.

Tafseer

إِنَّ عِبَادِى
நிச்சயமாக என் அடியார்கள்
لَيْسَ
இல்லை
لَكَ
உனக்கு
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سُلْطَٰنٌۚ
ஓர் அதிகாரம்
وَكَفَىٰ
போதுமாகி விட்டான்
بِرَبِّكَ
உம் இறைவனே
وَكِيلًا
பொறுப்பாளனாக

Inna 'ibaadee laisa laka 'alaihim sultaan; wa kafaa bi Rabbika Wakeelaa

நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.

Tafseer

رَّبُّكُمُ
உங்கள் இறைவன்
ٱلَّذِى
எத்தகையவன்
يُزْجِى
செலுத்துகிறான்
لَكُمُ
உங்களுக்காக
ٱلْفُلْكَ فِى
கப்பலை/கடலில்
لِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக
مِن فَضْلِهِۦٓۚ
அவனுடைய அருளிலிருந்து
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கின்றான்
بِكُمْ
உங்கள் மீது
رَحِيمًا
பெரும் கருணையாளனாக

Rabbukumul lazee yuzjee lakumul fulka fil bahri litabtaghoo min fadlih; innahoo kaana bikum Raheemaa

(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும்பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது கிருபையுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَإِذَا مَسَّكُمُ
ஏற்பட்டால்/ உங்களுக்கு
ٱلضُّرُّ
தீங்கு, துன்பம்
فِى ٱلْبَحْرِ
கடலில்
ضَلَّ
மறைந்துவிடுகின்றனர்
مَن
எவர், எவை
تَدْعُونَ
பிரார்தித்தீர்கள்
إِلَّآ
தவிர
إِيَّاهُۖ
அவனை
فَلَمَّا نَجَّىٰكُمْ
அவன் பாதுகாத்தபோது/உங்களை
إِلَى ٱلْبَرِّ
கரையில்
أَعْرَضْتُمْۚ
புறக்கணிக்கின்றீர்கள்
وَكَانَ
இருக்கின்றான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
كَفُورًا
மகா நன்றி கெட்டவனாக

Wa izaa massakumuddurru fil bahri dalla man tad'oona illaaa iyyaahu falammaa najjaakum ilal barri a'radtum; wa kaanal insaanu kafooraa

உங்களுக்கு கடலில் யாதொரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவன்.

Tafseer

أَفَأَمِنتُمْ
நீங்கள் அச்சமற்று விட்டீர்களா?
أَن يَخْسِفَ
அவன் சொருகிவிடுவதை
بِكُمْ
உங்களை
جَانِبَ ٱلْبَرِّ
ஓரத்தில்/பூமியில்
أَوْ
அல்லது
يُرْسِلَ
அவன் அனுப்புவதை
عَلَيْكُمْ
உங்கள் மீது
حَاصِبًا ثُمَّ
கல் மழையை/பிறகு
لَا تَجِدُوا۟
காணமாட்டீர்கள்
لَكُمْ
உங்களுக்கு
وَكِيلًا
ஒரு பொறுப்பாளரை

Afa amintum any yakhsifa bikum jaanibal barri aw yursil 'alaikum haasiban summa laa tajidoo lakum wakeelaa

(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மாரி பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

أَمْ أَمِنتُمْ
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
أَن
அவன் மீட்பதை
يُعِيدَكُمْ
அவன் மீட்பதை உங்களை
فِيهِ
அதில்
تَارَةً
முறை
أُخْرَىٰ
மற்றொரு
فَيُرْسِلَ
அனுப்புவான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
قَاصِفًا
உடைத்தெரியக் கூடியது
مِّنَ ٱلرِّيحِ
இருந்து/காற்று
فَيُغْرِقَكُم
அவன் மூழ்கடிப்பான்/உங்களை
بِمَا كَفَرْتُمْۙ
நீங்கள் நன்றி கெட்டதால்
ثُمَّ
பிறகு
لَا تَجِدُوا۟
காணமாட்டீர்கள்
لَكُمْ
உங்களுக்கு
عَلَيْنَا بِهِۦ
நம்மிடம்/அதற்காக
تَبِيعًا
பழிதீர்ப்பவரை

Am amintum any yu'eedakum feehi taaratan ukhraa fa yursila 'alaikum qaasifam minar reehi fa yugh riqakum bimaa kafartum summa laa tajidoo lakum 'alainaa bihee tabee'aa

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
كَرَّمْنَا
நாம் கண்ணியப்படுத்தினோம்
بَنِىٓ
சந்ததிகளை
ءَادَمَ
ஆதமுடைய
وَحَمَلْنَٰهُمْ
இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை
فِى ٱلْبَرِّ
கரையில்
وَٱلْبَحْرِ
இன்னும் கடலில்
وَرَزَقْنَٰهُم
இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு
مِّنَ
இருந்து
ٱلطَّيِّبَٰتِ
நல்லவை
وَفَضَّلْنَٰهُمْ
இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை
عَلَىٰ
விட
كَثِيرٍ
அதிகமானது
مِّمَّنْ
எவற்றிலிருந்து
خَلَقْنَا
நாம் படைத்தோம்
تَفْضِيلًا
மேன்மையாக

Wa laqad karramnaa Baneee aadama wa hamalnaahum fil barri walbahri wa razaqnaahum minat taiyibaati wa faddalnaahum 'alaa kaseerim mimman khalaqnaa tafdeelaa

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.

Tafseer