Skip to main content

بَلَىٰ
அவ்வாறன்று
مَن
எவர்(கள்)
كَسَبَ
சம்பாதித்தார்(கள்)
سَيِّئَةً
தீமையை
وَأَحَٰطَتْ
இன்னும் சூழ்ந்து கொண்டது
بِهِۦ
அவரை
خَطِيٓـَٔتُهُۥ
அவருடைய பாவம்
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ
அவர்கள்
فِيهَا
அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Balaa man kasaba sayyi'atanw wa ahaatat bihee khateee'atuhoo fa-ulaaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon

அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நற்காரியங்களை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wallazeena aamanoo wa 'amilus saalihaati ulaaa'ika Ashaabul Jannati hum feeha khaalidoon

ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

Tafseer

وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
مِيثَٰقَ
உறுதிமொழியை
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலுடைய சந்ததிகளின்
لَا تَعْبُدُونَ
வணங்காதீர்கள்
إِلَّا ٱللَّهَ
தவிர/அல்லாஹ்வை
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் பெற்றோருக்கு
إِحْسَانًا
நன்மை செய்யுங்கள்
وَذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினர்கள்
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
لِلنَّاسِ
மக்களிடம்
حُسْنًا
அழகியதை
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
ثُمَّ
பிறகு
تَوَلَّيْتُمْ
திரும்பி விட்டீர்கள்
إِلَّا قَلِيلًا
தவிர/குறைவானவர்கள்
مِّنكُمْ
உங்களில்
وَأَنتُم
நீங்களோ
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்கள்

Wa iz akhaznaa meesaaqa Baneee Israaa'eela laa ta'budoona illal laaha wa bil waalidaini ihsaananw wa zil qurbaa walyataamaa walmasaakeeni wa qooloo linnaasi husnanw wa aqeemus salaata wa aatuzZakaata summa tawallitum illaa qaleelam minkum wa antum mu'ridoon

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள்.

Tafseer

وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
لَا تَسْفِكُونَ
ஓட்டாதீர்கள்
دِمَآءَكُمْ
இரத்தங்களை/உங்கள்
وَلَا تُخْرِجُونَ
இன்னும் வெளியேற்றாதீர்கள்
أَنفُسَكُم
உங்களை
مِّن
இருந்து
دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்கள்
ثُمَّ
பிறகு
أَقْرَرْتُمْ
உறுதிப்படுத்தினீர்கள்
وَأَنتُمْ تَشْهَدُونَ
நீங்களே/சாட்சிகளாக இருக்கிறீர்கள்

Wa iz akhaznaa meesaa qakum laa tasfikoona dimaaa'akum wa laa tukrijoona anfusakum min diyaarikum summa aqrartum wa antum tashhadoon

அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَنتُمْ
நீங்கள்
هَٰٓؤُلَآءِ
ஓ இவர்களே
تَقْتُلُونَ
கொன்றீர்கள்
أَنفُسَكُمْ
உங்களை
وَتُخْرِجُونَ
இன்னும் வெளியேற்றுகிறீர்கள்
فَرِيقًا
ஒரு பிரிவினரை
مِّنكُم
உங்களில்
مِّن
இருந்து
دِيَٰرِهِمْ
இல்லங்கள்/ அவர்களுடைய
تَظَٰهَرُونَ
உதவுகிறீர்கள்
عَلَيْهِم
அவர்களுக்கு எதிராக
بِٱلْإِثْمِ
பாவமாக
وَٱلْعُدْوَٰنِ
இன்னும் அநியாயம்
وَإِن يَأْتُوكُمْ
அவர்கள் வந்தால்/உங்களிடம்
أُسَٰرَىٰ
கைதிகளாக
تُفَٰدُوهُمْ
ஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை
وَهُوَ
அதுவோ
مُحَرَّمٌ
தடுக்கப்பட்டது
عَلَيْكُمْ
உங்கள் மீது
إِخْرَاجُهُمْۚ
வெளியேற்றுவது/அவர்களை
أَفَتُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்?
بِبَعْضِ
சிலவற்றை
ٱلْكِتَٰبِ
வேதத்தில்
وَتَكْفُرُونَ
இன்னும் நிராகரிக்கிறீர்கள்
بِبَعْضٍۚ
சிலவற்றை
فَمَا
இல்லை
جَزَآءُ
கூலி
مَن
எவர்
يَفْعَلُ
செய்கிறார்
ذَٰلِكَ
அதை
مِنكُمْ
உங்களில்
إِلَّا
தவிர
خِزْىٌ
இழிவு
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَاۖ
இவ்வுலகம்
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
இன்னும் மறுமை நாளில்
يُرَدُّونَ
திருப்பப்படுவார்கள்
إِلَىٰٓ
பக்கம்
أَشَدِّ
மிகக் கடுமையானது
ٱلْعَذَابِۗ
வேதனை
وَمَا ٱللَّهُ
இல்லை/அல்லாஹ்
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
عَمَّا تَعْمَلُونَ
எதைப் பற்றி/ செய்கிறீர்கள்

Summa antum haaa'ulaaa'i taqtuloona anfusakum wa tukhrijoona fareeqam minkum min diyaarihim tazaaharoona 'alaihim bil ismi wal'udwaani wa iny yaatookum usaaraa tufaadoohum wahuwa muharramun 'alaikum ikhraajuhum; afatu' mi-noona biba'dil Kitaabi wa takfuroona biba'd; famaa jazaaa'u mai yaf'alu zaalika minkum illaa khizyun fil hayaatid-dunyaa wa yawmal qiyaamati yuraddoona ilaaa ashaddil 'azaab; wa mal laahu bighaafilin 'ammaa ta'maloon

இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
ٱلدُّنْيَا
இவ்வுலக(ம்)
بِٱلْءَاخِرَةِۖ
மறுமைக்குப் பதிலாக
فَلَا يُخَفَّفُ
எனவே இலேசாக்கப்படாது
عَنْهُمُ
அவர்களை விட்டு
ٱلْعَذَابُ
வேதனை
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்

Ulaaa'ikal lazeenash tarawul hayaatad dunyaa bil aakhirati falaa yukhaffafu 'anhumul 'azaabu wa laa hum yunsaroon

இத்தகையவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் யாதொரு உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَقَفَّيْنَا
இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம்
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
بِٱلرُّسُلِۖ
தூதர்களை
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
عِيسَى
ஈஸாவிற்கு
ٱبْنَ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
وَأَيَّدْنَٰهُ
இன்னும் பலப்படுத்தினோம்/அவரை
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
ٱلْقُدُسِۗ
பரிசுத்தமான
أَفَكُلَّمَا جَآءَكُمْ
வந்தபோதெல்லாம்/உங்களுக்கு
رَسُولٌۢ
ஒரு தூதர்
بِمَا لَا
எதைக் கொண்டு/விரும்பவில்லை
أَنفُسُكُمُ
மனங்கள்/உங்கள்
ٱسْتَكْبَرْتُمْ
பெருமையடித்தீர்கள்
فَفَرِيقًا
ஒரு பிரிவினரை
كَذَّبْتُمْ
பொய்ப்பித்தீர்கள்
وَفَرِيقًا
இன்னும் ஒரு பிரிவினரை
تَقْتُلُونَ
கொலை செய்கிறீர்கள்

Wa laqad aatainaa Moosal Kitaaba wa qaffainaa mim ba'dihee bir Rusuli wa aatainaa 'Eesab-na-Maryamal baiyinaati wa ayyadnaahu bi Roohil Qudus; afakullamaa jaaa'akum Rasoolum bimaa laa tahwaaa anfusukumus takbartum fafareeqan kazzabtum wa fareeqan taqtuloon

தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்!

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
قُلُوبُنَا
உள்ளங்கள்/எங்கள்
غُلْفٌۢۚ
திரையிடப்பட்டுள்ளன
بَل
மாறாக
لَّعَنَهُمُ
அவர்களை சபித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِكُفْرِهِمْ
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
فَقَلِيلًا مَّا
எனவே மிகக் குறைவாகவே
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Wa qaaloo quloobunaa ghulf; bal la'anahumul laahu bikufrihim faqaleelam maa yu'minoon

"எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே!

Tafseer

وَلَمَّا
போது/வந்தது
جَآءَهُمْ
அவர்களுக்கு
كِتَٰبٌ
ஒரு வேதம்
مِّنْ
இருந்து
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مُصَدِّقٌ
உண்மைப்படுத்தக் கூடியது
لِّمَا مَعَهُمْ
எதை/அவர்களுடன்
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
مِن قَبْلُ
முன்னர்
يَسْتَفْتِحُونَ
வெற்றியைத் தேடுவார்கள்
عَلَى
எதிராக
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
فَلَمَّا
வந்த போது
جَآءَهُم
அவர்களிடம்
مَّا عَرَفُوا۟
எது/அறிந்தனர்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بِهِۦۚ
அதை
فَلَعْنَةُ
எனவே சாபம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَى
மீது
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்

Wa lammaa jaaa'ahum Kitaabum min 'indil laahi musaddiqul limaa ma'ahum wa kaanoo min qablu yastaftihoona 'alal lazeena kafaroo falammaa jaaa'ahum maa 'arafoo kafaroo bih; fala 'natul laahi 'alal kaafireen

அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!

Tafseer

بِئْسَمَا
கெட்டது/எது
ٱشْتَرَوْا۟
விற்றார்கள்
بِهِۦٓ
அதற்குப் பகரமாக
أَنفُسَهُمْ
தங்களை
أَن يَكْفُرُوا۟
அவர்கள் நிராகரித்து
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
بَغْيًا
பொறாமைப்பட்டு
أَن يُنَزِّلَ
இறக்குவதை
ٱللَّهُ
அல்லாஹ்
مِن
இருந்து
فَضْلِهِۦ
தன் அருள்
عَلَىٰ
மீது
مَن
எவர்
يَشَآءُ
நாடுகிறான்
مِنْ
இருந்து
عِبَادِهِۦۖ
தன் அடியார்கள்
فَبَآءُو
ஆகவே சார்ந்தார்கள்
بِغَضَبٍ
கோபத்தில்
عَلَىٰ
மேல்
غَضَبٍۚ
கோபம்
وَلِلْكَٰفِرِينَ
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
عَذَابٌ
வேதனை
مُّهِينٌ
இழிவு தரக்கூடியது

Bi'samash taraw biheee anfusahum ai yakfuroo bimaaa anzalal laahu baghyan ai yunazzilal laahu min fadlilhee 'alaa mai yashaaa'u min ibaadihee fabaaa'oo bighadabin 'alaa ghadab; wa lilkaafireena 'azaabum muheen

(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

Tafseer