Skip to main content

وَلَهُم
இன்னும் அவர்களுக்கு
مَّقَٰمِعُ
சம்பட்டிகள்
مِنْ حَدِيدٍ
இரும்பு

Wa lahum maqaami'u min hadeed

அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளுண்டு. (அதனைக் கொண்டு அவர்களை அடிக்கப்படும்.)

Tafseer

كُلَّمَآ أَرَادُوٓا۟
நாடும்போதெல்லாம்
أَن يَخْرُجُوا۟
அவர்கள் வெளியேறுவதற்கு
مِنْهَا
அதிலிருந்து
مِنْ غَمٍّ
துக்கத்தால்
أُعِيدُوا۟
திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
فِيهَا
அதில்
وَذُوقُوا۟
இன்னும் சுவையுங்கள்
عَذَابَ
வேதனையை
ٱلْحَرِيقِ
பொசுக்கக்கூடிய

Kullamaa araadooo any yakhrujoo minhaa min ghammin u'eedoo feeha wa zooqoo 'azaabal hareeq

இத்துயர(மான நரக)த்திலிருந்து அவர்கள் வெளிப்படக் கருதி முயற்சிக்கும்போதெல்லாம் அதில் அவர்கள் தள்ளப்பட்டு "எரிக்கும் (நெருப்பு) வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" (எனவும் கூறப்படும்).

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُدْخِلُ
நுழைப்பான்
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
يُحَلَّوْنَ
அணிவிக்கப் படுவார்கள்
فِيهَا
அவற்றில்
مِنْ أَسَاوِرَ
வளையல்களும்
مِن ذَهَبٍ
தங்கத்தினாலான
وَلُؤْلُؤًاۖ
இன்னும் முத்து
وَلِبَاسُهُمْ
இன்னும் அவர்களது ஆடை
فِيهَا
அவற்றில்
حَرِيرٌ
பட்டாகும்

Innal laaha yudkhilul lazeena aamanoo wa 'amilus saalihaati jannaatin tajree min tahtihal anhaaru yuhallawna feehaa min asaawira min zahabinw wa lu'lu'aa; wa libaasuhum feehaa hareer

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். (பின்னும்) பொற்கடகமும், முத்து ஆபரணமும் (விருதுகளாக) அவர்களுக்கு அணிவிக்கப்படும். அவர்களுடைய ஆடைகளோ மிருதுவான பட்டினால் ஆனதாக இருக்கும்.

Tafseer

وَهُدُوٓا۟
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
إِلَى ٱلطَّيِّبِ
நல்லதற்கு
مِنَ ٱلْقَوْلِ
பேச்சுகளில்
وَهُدُوٓا۟
இன்னும் வழிகாட்டப்பட்டார்கள்
إِلَىٰ صِرَٰطِ
பாதைக்கு
ٱلْحَمِيدِ
புகழுக்குரியவனின்

Wa hudooo ilat taiyibi minal qawli wa hudooo ilaaa siraatil hameed

பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
وَيَصُدُّونَ
இன்னும் தடுப்பார்கள்
عَن سَبِيلِ
பாதையிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱلْمَسْجِدِ
இன்னும் அல்மஸ்ஜிது
ٱلْحَرَامِ
ஹராம்
ٱلَّذِى
எது
جَعَلْنَٰهُ
அதை ஆக்கியிருக்கிறோம்
لِلنَّاسِ
மக்களுக்கு
سَوَآءً
பொதுவானது
ٱلْعَٰكِفُ
தங்கிஇருப்பவருக்கும்
فِيهِ
அதில்
وَٱلْبَادِۚ
வெளியிலிருந்து வருபவருக்கும்
وَمَن
எவர்
يُرِدْ فِيهِ
அதில் நாடுவாரோ
بِإِلْحَادٍۭ
வரம்பு மீறுவதை
بِظُلْمٍ
அநியாயமாக
نُّذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
مِنْ عَذَابٍ
வேதனையை
أَلِيمٍ
வலி தருகின்ற

Innal lazeena kafaroo wa yasuddoona 'an sabeelil laahi wal Masjidil Haraamil lazee ja'alnaahu linnaasi sawaaa'anil 'aakifu feehi walbaad; wa mai yurid feehi bi ilhaadim bizulmin nuziqhu min 'azaabin aleem

நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதை(யில் செல்வதை)யும் தடுத்துக்கொண்டு (மக்காவாகிய) அங்கு வசித்திருப்பவர்கள் ஆயினும், வெளியிலிருந்து வருபவர்களாயினும், மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமையுள்ளதாக நாம் ஏற்படுத்திய சிறப்புற்ற மஸ்ஜிதுக்குச் செல்வதையும் தடை செய்து கொண்டு, அதில் மார்க்கத்திற்கு விரோதமான அநியாயம் செய்ய விரும்பினால், அவர்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.

Tafseer

وَإِذْ بَوَّأْنَا
நாம் உறுதிப்படுத்திய சமயத்தை
لِإِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
مَكَانَ
இடத்தை
ٱلْبَيْتِ
வீட்டுடைய
أَن لَّا
நீர் இணைவைக்காதீர்
بِى شَيْـًٔا
எனக்கு எதையும்
وَطَهِّرْ
இன்னும் சுத்தமாக வைத்திருப்பீராக
بَيْتِىَ
எனது வீட்டை
لِلطَّآئِفِينَ
தவாஃப் செய்பவர்களுக்காக
وَٱلْقَآئِمِينَ
இன்னும் நின்று தொழுபவர்களுக்காக
وَٱلرُّكَّعِ
இன்னும் குனிந்து தொழுபவர்களுக்காக
ٱلسُّجُودِ
சிரம் பணிந்து தொழுபவர்களுக்காக

Wa iz bawwaanaa li Ibraaheema makaanal Baiti allaa tushrik bee shai'anw wa tahhir Baitiya litaaa'ifeena walqaaa' imeena warrukka 'is sujood

(நபியே!) இப்ராஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) "நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில்,

Tafseer

وَأَذِّن
இன்னும் அறிவிப்(புச் செய்து அழைப்)பீராக!
فِى ٱلنَّاسِ
மக்களுக்கு
بِٱلْحَجِّ
ஹஜ்ஜுக்காக
يَأْتُوكَ
உம்மிடம் வருவார்கள்
رِجَالًا
நடந்தவர்களாகவும்
وَعَلَىٰ كُلِّ
இன்னும் மீது/எல்லாம்
ضَامِرٍ
மெலிந்த வாகனம்
يَأْتِينَ
அவர்கள் வருவார்கள்
مِن كُلِّ
பாதைகளிலிருந்து
عَمِيقٍ
தூரமான

Wa azzin fin naasi bil Hajji yaatooka rijaalanw wa 'alaa kulli daamiriny yaateena min kulli fajjin 'ameeq

(அவரை நோக்கி) "ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிக்கையிடுங்கள். (அவர்கள்) கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உங்களிடம்) வருவார்கள்.

Tafseer

لِّيَشْهَدُوا۟
அவர்கள் அடைவதற்காக
مَنَٰفِعَ
பலாபலன்களை
لَهُمْ
அவர்கள் தங்களுக்குரிய
وَيَذْكُرُوا۟
நினைவு கூர்வதற்காக
ٱسْمَ
பெயர்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
فِىٓ أَيَّامٍ
நாட்களில்
مَّعْلُومَٰتٍ
குறிப்பிட்ட
عَلَىٰ
மீது
مَا رَزَقَهُم
அவர்களுக்குக் கொடுத்த
مِّنۢ
இருந்து
بَهِيمَةِ
பிராணிகள்
ٱلْأَنْعَٰمِۖ
கால்நடைகள்
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
مِنْهَا
அவற்றிலிருந்து
وَأَطْعِمُوا۟
இன்னும் உணவளியுங்கள்
ٱلْبَآئِسَ
வறியவருக்கு(ம்)
ٱلْفَقِيرَ
ஏழைக்கு(ம்)

Li yashhadoo manaafi'a lahum wa yazkurus mal laahi feee ayyaamimma'loomaatin 'alaa maa razaqahum mim baheematil an'aami fakuloo minhaa wa at'imul baaa'isal faqeer

(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்.) குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள். ஆகவே, அவ்வாறு அறுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்; சிரமப்படும் ஏழைகளுக்கும் புசிக்கக் கொடுங்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
لْيَقْضُوا۟
இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்
تَفَثَهُمْ
தங்களது அழுக்குகளை
وَلْيُوفُوا۟
இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்
نُذُورَهُمْ
நேர்ச்சைகளை தங்களது
وَلْيَطَّوَّفُوا۟
இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்
بِٱلْبَيْتِ
வீட்டை
ٱلْعَتِيقِ
மிகப் பழமையான

Summal yaqdoo tafasahum wal yoofoo nuzoorahum wal yattawwafoo bil Baitil 'Ateeq

பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.

Tafseer

ذَٰلِكَ
அவைதான்
وَمَن
எவர்
يُعَظِّمْ
மதிப்பார்
حُرُمَٰتِ
புனிதங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
فَهُوَ
அது
خَيْرٌ
மிகச் சிறந்தது
لَّهُۥ
அவருக்கு
عِندَ رَبِّهِۦۗ
அவருடைய இறைவனிடம்
وَأُحِلَّتْ
ஆகுமாக்கப் பட்டுள்ளன
لَكُمُ
உங்களுக்கு
ٱلْأَنْعَٰمُ
கால்நடைகள்
إِلَّا
தவிர
مَا يُتْلَىٰ
ஓதிக்காட்டப்படுபவற்றை
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
فَٱجْتَنِبُوا۟
விலகிக்கொள்ளுங்கள்
ٱلرِّجْسَ
அசுத்தங்களை
مِنَ ٱلْأَوْثَٰنِ
சிலைகளை
وَٱجْتَنِبُوا۟
இன்னும் விலகிக் கொள்ளுங்கள்
قَوْلَ
பேச்சை (விட்டு)
ٱلزُّورِ
பொய்

Zaalika wa mai yu'azzim hurumaatil laahi fahuwa khairul lahoo 'inda Rabbih; wa uhillat lakumul an'aamu illaa maa yutlaa 'alaikum fajtanibur rijsa minal awsaani wajtaniboo qawlaz zoor

இவ்வாறே அல்லாஹ் கண்ணியப்படுத்திய சிறப்பான வைகளை எவர் மகிமைப்படுத்துகின்றாரோ அவருக்கு அது அவருடைய இறைவனிடத்தில் மிக்க நன்மையாகவே முடியும். (நீங்கள் புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளைப் பற்றி உங்களுக்கு ஓதிக் காண்பித்த (செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப்பட்ட)வைகளைத் தவிர (மற்றவைகளைப் புசிப்பது) ஆகும். ஆகவே, சிலை வணக்க அசுத்தத்திலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். அன்றி, பொய்யான வார்த்தைகளில் இருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்."

Tafseer