Skip to main content

إِنَّمَا تُنذِرُ
நீர் எச்சரிப்பதெல்லாம்
مَنِ ٱتَّبَعَ
எவர்/பின்பற்றினார்
ٱلذِّكْرَ
இந்த வேதத்தை
وَخَشِىَ
இன்னும் பயந்தார்
ٱلرَّحْمَٰنَ
பேரருளாளனை
بِٱلْغَيْبِۖ
மறைவில்
فَبَشِّرْهُ
ஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக!
بِمَغْفِرَةٍ
மன்னிப்பைக் கொண்டும்
وَأَجْرٍ
கூலியைக் கொண்டும்
كَرِيمٍ
கண்ணியமான

Innamaa tunziru manit taba 'az-Zikra wa khashiyar Rahmaana bilghaib, fabashshirhu bimaghfiratinw-wa ajrin kareem

நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்உபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ் வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர் களுக்குத்தான். ஆகவே, இத்தகையவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
نُحْىِ
உயிர்ப்பிக்கின்றோம்
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
وَنَكْتُبُ
இன்னும் பதிவு செய்வோம்
مَا قَدَّمُوا۟
அவர்கள் முன்னர் செய்தவற்றையும்
وَءَاثَٰرَهُمْۚ
காலடிச் சுவடுகளை அவர்களின்
وَكُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
أَحْصَيْنَٰهُ
அதைப் பதிவு செய்துள்ளோம்
فِىٓ إِمَامٍ
பதிவேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Innaa Nahnu nuhyil mawtaa wa naktubu maa qaddamoo wa aasaarahum; wa kulla shai'in ahsainaahu feee Imaamim Mubeen

நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَٱضْرِبْ
எடுத்துச் சொல்வீராக!
لَهُم
அவர்களுக்கு
مَّثَلًا
உதாரணமாக
أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ
அந்த ஊர் வாசிகளை
إِذْ جَآءَهَا
அவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்

Wadrib lahum masalan Ashaabal Qaryatih; iz jaaa'ahal mursaloon

(நபியே!) நம்முடைய தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்.

Tafseer

إِذْ أَرْسَلْنَآ
நாம் அனுப்பியபோது
إِلَيْهِمُ
அவர்களிடம்
ٱثْنَيْنِ
இருவரை
فَكَذَّبُوهُمَا
அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
فَعَزَّزْنَا
பலப்படுத்தினோம்
بِثَالِثٍ
மூன்றாவது ஒருவரைக்கொண்டு
فَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِلَيْكُم
உங்கள் பக்கம்
مُّرْسَلُونَ
அனுப்பப்பட்ட தூதர்கள்

Iz arsalnaaa ilaihimusnaini fakazzaboohumaa fa'azzaznaa bisaalisin faqaalooo innaaa ilaikum mursaloon

நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) "மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
مَآ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
அன்றி
بَشَرٌ
மனிதர்கள்
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
وَمَآ أَنزَلَ
இறக்கவில்லை
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
مِن شَىْءٍ
எதையும்
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
தவிர
تَكْذِبُونَ
பொய் சொல்கின்றவர்களாகவே

Qaaloo maaa antum illaa basharum mislunaa wa maaa anzalar Rahmaanu min shai'in in antum illaa takziboon

அதற்கவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) யாதொன்றையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
رَبُّنَا
எங்கள் இறைவன்
يَعْلَمُ
நன்கறிவான்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
لَمُرْسَلُونَ
அனுப்பப்பட்ட தூதர்கள்

Qaaloo Rabbunaa ya'lamu innaaa ilaikum lamursaloon

அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்" என்றதுடன்,

Tafseer

وَمَا عَلَيْنَآ
எங்கள் மீது இல்லை
إِلَّا
தவிர
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதை
ٱلْمُبِينُ
தெளிவாக

Wa maa 'alainaaa illal balaaghul mubeen

"எங்களுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதையன்றி (உங்களை நிர்ப்பந்திப்பது ) எங்கள் மீது கடமையல்ல" என்றும் (கூறினார்கள்.)

Tafseer

قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
تَطَيَّرْنَا
துர்ச்குனமாக கருதுகின்றோம்
بِكُمْۖ
உங்களை
لَئِن لَّمْ
நீங்கள் விலகவில்லை என்றால்
لَنَرْجُمَنَّكُمْ
நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம்
وَلَيَمَسَّنَّكُم
இன்னும் நிச்சயமாக உங்களை வந்தடையும்
مِّنَّا
எங்களிடமிருந்து
عَذَابٌ أَلِيمٌ
வேதனை/வலிமிகுந்த

Qaaloo innaa tataiyarnaa bikum la'il-lam tantahoo lanar jumannakum wa la-yamassan nakum minnaa 'azaabun aleem

அதற்கவர்கள் "நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கின்றோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். அன்றி, எங்களுடைய துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
طَٰٓئِرُكُم
துர்ச்சகுனம் உங்கள்
مَّعَكُمْۚ
உங்களுடன்தான்
أَئِن ذُكِّرْتُمۚ
நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா
بَلْ
மாறாக
أَنتُمْ
நீங்கள்
قَوْمٌ
மக்கள்
مُّسْرِفُونَ
வரம்பு மீறுகின்ற

Qaaloo taaa'irukum ma'akum; a'in zukkirtum; bal antum qawmum musrifoon

அதற்கு (நம் தூதர்கள்) "உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

وَجَآءَ
வந்தார்
مِنْ أَقْصَا
கடைக்கோடியில் இருந்து
ٱلْمَدِينَةِ
பட்டணத்தின்
رَجُلٌ
ஓர் ஆடவர்
يَسْعَىٰ
விரைந்தவராக
قَالَ
அவர் கூறினார்
يَٰقَوْمِ
என் மக்களே!
ٱتَّبِعُوا۟
நீங்கள் பின்பற்றுங்கள்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

Wa jaaa'a min aqsal madeenati rajuluny yas'aa qaala yaa qawmit tabi'ul mursaleen

இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து "(ஹபீபுந் நஜ்ஜார்" என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: "என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.

Tafseer