Skip to main content

ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَن
எவர்
لَّا يَسْـَٔلُكُمْ
உங்களிடம் கேட்க மாட்டார்
أَجْرًا
கூலியை
وَهُم
அவர்கள்தான்
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்

Ittabi'oo mal-laa yas'alukum ajranw-wa hum muhtadoon

உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். (அவர்கள் நேர்வழியைப் போதிப்பவர்கள் மாத்திரம் அன்றி) அவர்கள்தாம் நேர்வழி அடைந்தவர்கள்.

Tafseer

وَمَا لِىَ
எனக்கு என்ன நேர்ந்தது?
لَآ أَعْبُدُ
நான் வணங்காமல் இருப்பதற்கு
ٱلَّذِى فَطَرَنِى
என்னைப் படைத்தவனை
وَإِلَيْهِ
அவன் பக்கம்தான்
تُرْجَعُونَ
நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Wa maa liya laaa a'budul lazee fataranee wa ilaihi turja'oon

என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்."

Tafseer

ءَأَتَّخِذُ
நான் எடுத்துக் கொள்வேனா!
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ءَالِهَةً
(வேறு) தெய்வங்களை
إِن يُرِدْنِ
எனக்கு நாடினால்
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
بِضُرٍّ
ஒரு தீங்கை
لَّا تُغْنِ
தடுக்காது
عَنِّى
என்னை விட்டும்
شَفَٰعَتُهُمْ
அவற்றின் சிபாரிசு
شَيْـًٔا وَلَا
எதையும்
يُنقِذُونِ
இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்

'A-attakhizu min dooniheee aalihatan iny-yuridnir Rahmaanu bidurril-laa tughni 'annee shafaa 'atuhum shai 'anw-wa laa yunqizoon

அவனையன்றி, (மற்றெதனையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்கக் கருதினால் இவைகளுடைய சிபாரிசு அதிலொன்றையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவைகளால் விடுவிக்கவும் முடியாது.

Tafseer

إِنِّىٓ
நிச்சயமாக நான்
إِذًا
அப்போது
لَّفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
مُّبِينٍ
தெளிவான

Inneee izal-lafee dalaa-lim-mubeen

(அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.

Tafseer

إِنِّىٓ
நிச்சயமாக நான்
ءَامَنتُ
நம்பிக்கை கொண்டேன்
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
فَٱسْمَعُونِ
ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!

Inneee aamantu bi Rabbikum fasma'oon

நிச்சயமாக நான் உங்களைப் படைத்து வளர்ப்பவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அன்று.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்" (என்று கூறினார்).

Tafseer

قِيلَ
கூறப்பட்டது
ٱدْخُلِ
நீர் நுழைவீராக!
ٱلْجَنَّةَۖ
சொர்க்கத்தில்
قَالَ
அவர் கூறினார்
يَٰلَيْتَ قَوْمِى
என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!

Qeelad khulil Jannnah; qaala yaa laita qawmee ya'lamoon

(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) "நீங்கள் சுவனபதியில் நுழைவீராக!" எனக் கூறப்பட்டது.

Tafseer

بِمَا غَفَرَ
மன்னிப்பு வழங்கியதையும்
لِى
எனக்கு
رَبِّى
என் இறைவன்
وَجَعَلَنِى
என்னை அவன் ஆக்கியதையும்
مِنَ ٱلْمُكْرَمِينَ
கண்ணியமானவர்களில்

Bimaa ghafara lee Rabbee wa ja'alanee minal mukrameen

(சுவனபதியில் நுழைந்த) அவர் "என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என்னுடைய மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார்.

Tafseer

وَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கவில்லை
عَلَىٰ
மீது
قَوْمِهِۦ
அவருடைய மக்கள்
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
مِن جُندٍ
ஒரு படையை
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
وَمَا كُنَّا
நாம் இல்லை
مُنزِلِينَ
இறக்குபவர்களாகவும்

Wa maaa anzalnaa 'alaa qawmihee mim ba'dihee min jundim minas-samaaa'i wa maa kunnaa munzileen

அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.

Tafseer

إِن كَانَتْ
அது இருக்கவில்லை
إِلَّا
தவிர
صَيْحَةً
ஒரு சப்தமாகவே
وَٰحِدَةً
ஒரே ஒரு
فَإِذَا هُمْ
ஆகவே, அப்போது அவர்கள்
خَٰمِدُونَ
அழிந்து விட்டார்கள்

In kaanat illaa saihatanw waahidatan fa-izaa hum khaamidoon

ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.

Tafseer

يَٰحَسْرَةً
நிகழ்ந்த துக்கமே!
عَلَى ٱلْعِبَادِۚ
அடியார்கள் மீது
مَا يَأْتِيهِم
அவர்களிடம் வரவில்லை
مِّن رَّسُولٍ
எந்த ஒரு தூதரும்
إِلَّا
தவிர
كَانُوا۟
அவர்கள் இருந்தே
بِهِۦ
அவரை
يَسْتَهْزِءُونَ
அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக

Yaa hasratan 'alal 'ibaad; maa yaateehim mir Rasoolin illaa kaanoo bihee yastahzi 'oon

அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நம்முடைய எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.

Tafseer