Skip to main content

وَإِنَّ
நிச்சயமாக
كُلًّا
எல்லோருக்கும்
لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ
நிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்/அவர்களுக்கு
رَبُّكَ
உம் இறைவன்
أَعْمَٰلَهُمْۚ
அவர்களுடைய செயல்களை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்பவற்றை
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wa inna kullal lammaa la yuwaffiyannahum Rabbuka a'maalahum; innahoo bimaa ya'maloona Khabeer

நிச்சயமாக உங்கள் இறைவன் (அவர்கள் ஒவ்வொரு வருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்களுடைய செய்கைகளை நன்கறிந்தே இருக்கிறான்.

Tafseer

فَٱسْتَقِمْ
நிலையாக இருங்கள்
كَمَآ
போன்றே
أُمِرْتَ
நீர் ஏவப்பட்டீர்
وَمَن
இன்னும் எவர்(கள்)
تَابَ
திருந்தி திரும்பினார்(கள்)
مَعَكَ
உம்முடன்
وَلَا تَطْغَوْا۟ۚ
வரம்பு மீறாதீர்கள்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Fastaqim kamaaa umirta wa man taaba ma'aka wa laa tatghaw; innahoo bimaa ta'maloona Baseer

(நபியே!) உங்களுக்கு ஏவப்பட்டது போன்றே நீங்களும், இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகி, உங்களுடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَلَا تَرْكَنُوٓا۟
நீங்கள் சாய்ந்து விடாதீர்கள்
إِلَى
பக்கம்
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநீதி இழைத்தார்கள்
فَتَمَسَّكُمُ
உங்களை அடைந்து விடும்
ٱلنَّارُ
நெருப்பு
وَمَا
இல்லை
لَكُم
உங்களுக்கு
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِنْ أَوْلِيَآءَ
பாதுகாப்பவர்கள் எவரும்
ثُمَّ لَا
பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்

Wa laa tarkanooo ilal lazeena zalamoo fatamassa kumun Naaru wa maa lakum min doonil laahi min awliyaaa'a summa laa tunsaroon

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.

Tafseer

وَأَقِمِ
நிலை நிறுத்துவீராக!
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
طَرَفَىِ
இரு முனைகளில்
ٱلنَّهَارِ
பகலின்
وَزُلَفًا
இன்னும் ஒரு பகுதியில்
مِّنَ ٱلَّيْلِۚ
இரவில்
إِنَّ ٱلْحَسَنَٰتِ
நிச்சயமாகநன்மைகள்
يُذْهِبْنَ
போக்கி விடுகின்றன
ٱلسَّيِّـَٔاتِۚ
பாவங்களை
ذَٰلِكَ ذِكْرَىٰ
இது/ஒருநல்லுபதேசம்
لِلذَّٰكِرِينَ
நினைவு கூருபவர்களுக்கு

Wa aqimis Salaata tarafayin nahaari wa zulafam minal layl; innal hasanaati yuzhibnas saiyi aat; zaalika zikraa liz zaakireen

பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்.

Tafseer

وَٱصْبِرْ
பொறுப்பீராக
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
أَجْرَ
கூலியை
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களின்

Wasbir fa innal laaha laa yudee'u ajral muhsineen

(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்.

Tafseer

فَلَوْلَا كَانَ
இருந்திருக்க வேண்டாமா?
مِنَ ٱلْقُرُونِ
தலை முறையினர்களில்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
أُو۟لُوا۟ بَقِيَّةٍ
சிறந்தோர்
يَنْهَوْنَ
தடுக்கின்றார்கள்
عَنِ ٱلْفَسَادِ
விஷமத்தை விட்டு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
إِلَّا
எனினும்
قَلِيلًا
குறைவானவர்(கள்)
مِّمَّنْ
இருந்து/எவர்கள்
أَنجَيْنَا
நாம் பாதுகாத்தோம்
مِنْهُمْۗ
அவர்களில்
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
ظَلَمُوا۟
அநியாயம் செய்தனர்
مَآ أُتْرِفُوا۟
எதில்/இன்பமளிக்கப்பட்டார்கள்
فِيهِ وَكَانُوا۟
அதில்/இன்னும் இருந்தனர்
مُجْرِمِينَ
குற்றவாளிகளாக

Falw laa kaana minal qurooni min qablikum ooloo baqiyyatiny yanhawna 'anil fasaadi fil ardi illaa qaleelam mimman anjainaa minhum; wattaba'al lazeena zalamoo maaa utrifoo feehi wa kaanoo mujrimeen

உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர்.

Tafseer

وَمَا كَانَ
இருக்க வில்லை
رَبُّكَ
உம் இறைவன்
لِيُهْلِكَ
அழிப்பவனாக
ٱلْقُرَىٰ
ஊர்களை
بِظُلْمٍ
அநியாயமாக
وَأَهْلُهَا
அவற்றில் வசிப்போரோ
مُصْلِحُونَ
சீர்திருத்துபவர்கள்

Wa maa kaana Rabbuka liyuhlikal quraa bizulminw wa ahluhaa muslihoon

(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான்.

Tafseer

وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
رَبُّكَ
உம் இறைவன்
لَجَعَلَ
ஆக்கியிருப்பான்
ٱلنَّاسَ
மக்களை
أُمَّةً وَٰحِدَةًۖ
ஒரே வகுப்பினராக
وَلَا يَزَالُونَ
அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்

Wa law shaaa'a Rabbuka laja'alannnaasa ummatanw waa hidatanw wa laa yazaaloona mukhtalifeen

உங்கள் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டே யிருப்பார்கள்.

Tafseer

إِلَّا
தவிர
مَن
எவர்
رَّحِمَ
அருள் புரிந்தான்
رَبُّكَۚ
உம் இறைவன்
وَلِذَٰلِكَ
இதற்காகத்தான்
خَلَقَهُمْۗ
அவன் படைத்தான்/அவர்களை
وَتَمَّتْ
நிறைவேறியது
كَلِمَةُ
வாக்கு
رَبِّكَ
உம் இறைவனின்
لَأَمْلَأَنَّ
நிச்சயமாக நான் நிரப்புவேன்
جَهَنَّمَ
நரகத்தை
مِنَ ٱلْجِنَّةِ
ஜின்களில்
وَٱلنَّاسِ
இன்னும் மக்கள்
أَجْمَعِينَ
அனைவர்

Illaa mar rahima Rabbuk; wa lizaalika khalaqahum; wa tammat Kalimatu Rabbika la amla'ana Jahannama minal jinnati wannnaasi ajma'een

அவர்களில் உங்கள் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே (மாறுபடும்) அவர்களை படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) "ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்" என்ற உங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்.

Tafseer

وَكُلًّا
எல்லாவற்றையும்
نَّقُصُّ
விவரிக்கிறோம்
عَلَيْكَ
உமக்கு
مِنْ
இருந்து
أَنۢبَآءِ
சரித்திரங்கள்
ٱلرُّسُلِ
தூதர்களின்
مَا
எதை
نُثَبِّتُ
உறுதிப்படுத்துவோம்
بِهِۦ
அதைக் கொண்டு
فُؤَادَكَۚ
உம் உள்ளத்தை
وَجَآءَكَ
இன்னும் வந்தன/உமக்கு
فِى هَٰذِهِ
இவற்றில்/உண்மை
وَمَوْعِظَةٌ
நல்லுபதேசம்
وَذِكْرَىٰ
அறிவுரை
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wa kullan naqussu 'alaika min ambaaa'ir Rusuli maa nusabbitu bihee fu'aadak; wa jaaa'aka fee haazihil haqqu wa maw'izatunw wa zikraa lilmu' mineen

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன.

Tafseer