Skip to main content

وَجَآءَتْ
வரும்
كُلُّ
எல்லா
نَفْسٍ
ஆன்மாவும்
مَّعَهَا
அதனுடன் இருக்கின்ற நிலையில்
سَآئِقٌ
ஓட்டிவருபவரும்
وَشَهِيدٌ
சாட்சி சொல்பவரும்

Wa jaaa'at kullu nafsim ma'ahaa saaa'iqunw wa shaheed

(அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்.

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
كُنتَ
நீ இருந்தாய்
فِى غَفْلَةٍ
மறந்த நிலையில்
مِّنْ هَٰذَا
இதை
فَكَشَفْنَا
நாம் அகற்றினோம்
عَنكَ
உன்னை விட்டும்
غِطَآءَكَ
உனது திரையை
فَبَصَرُكَ
ஆகவே, உனது பார்வை
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
حَدِيدٌ
மிகக் கூர்மையானதாக

Laqad kunta fee ghaf latim min haazaa fakashafnaa 'anka ghitaaa'aka fabasarukal yawma hadeed

அவனை நோக்கி "நிச்சயமாக நீ இதனைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னைவிட்டும் நாம் நீக்கிவிட்டோம். இன்றைய தினம் உன்னுடைய பார்வை கூர்மையாயிருக்கின்றது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்த இதனை உன் கண்ணைத் திறந்து பார்" என்று கூறப்படும்.)

Tafseer

وَقَالَ
கூறுவார்
قَرِينُهُۥ
அவனுடைய நண்பன்
هَٰذَا مَا
இது/எது/என்னிடம்
عَتِيدٌ
தயாராக

Wa qaala qareenuhoo haazaa maa ladaiya 'ateed

(சாட்சி கூற) அவனுடன் வந்தவர் "இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராகி) இருக்கின்றது" என்று கூறுவார்.

Tafseer

أَلْقِيَا
நீங்கள் இருவரும் தள்ளுங்கள்!
فِى جَهَنَّمَ
நரகத்தில்
كُلَّ
எல்லோரையும்
كَفَّارٍ
நிராகரிப்பாளர்
عَنِيدٍ
முரண்டு பிடிப்பவர்

Alqiyaa fee Jahannama kulla kaffaarin 'aneed

(உடனே இரு காவலர்களை நோக்கி) "நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தான் முதலிய) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்" (என்று கூறப்படும்).

Tafseer

مَّنَّاعٍ لِّلْخَيْرِ
தடுப்பவர்/செல்வத்தை
مُعْتَدٍ
எல்லை மீறுபவர்
مُّرِيبٍ
சந்தேகிப்பவன்

Mannaa'il lilkhayri mu'tadim mureeb

("அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக் கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக் கொண்டுமிருந்தான்" என்றும்,

Tafseer

ٱلَّذِى
எவர்
جَعَلَ
ஏற்படுத்தினாரோ
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا ءَاخَرَ
வேறு ஒரு கடவுளை
فَأَلْقِيَاهُ
அவரையும் தள்ளுங்கள்!
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
ٱلشَّدِيدِ
கடுமையான(து)

Allazee ja'ala ma'al laahi ilaahan aakhara fa alqiyaahu fil'azaabish shadeed

"இவன் அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்" (என்றும் கூறப்படும்).

Tafseer

قَالَ
கூறுவான்
قَرِينُهُۥ
அவனுடைய நண்பன்
رَبَّنَا
எங்கள் இறைவா!
مَآ أَطْغَيْتُهُۥ
நான் அவனை மீறச்செய்யவில்லை
وَلَٰكِن
எனினும்
كَانَ
இருந்தான்
فِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்
بَعِيدٍ
தூரமான(து)

Qaala qareenuhoo Rabbanaa maaa atghaituhoo wa laakin kaana fee dalaahim ba'eed

(அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்" என்று கூறுவான்.

Tafseer

قَالَ
கூறுவான்
لَا تَخْتَصِمُوا۟
தர்க்கம் செய்யாதீர்கள்
لَدَىَّ
என்னிடம்
وَقَدْ
திட்டமாக
قَدَّمْتُ
முற்படுத்திவிட்டேன்
إِلَيْكُم
உங்களுக்கு
بِٱلْوَعِيدِ
எச்சரிக்கையை

Qaala laa takhtasimoo ladaayya wa qad qaddamtu ilaikum bilwa'eed

(ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) "என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்" என்றும்,

Tafseer

مَا يُبَدَّلُ
மாற்றப்படாது
ٱلْقَوْلُ
பேச்சுகள்
لَدَىَّ
என்னிடம்
وَمَآ أَنَا۠
நான் இல்லை
بِظَلَّٰمٍ
அறவே அநியாயம் செய்பவனாக
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு

Maa yubaddalul qawlu ladaiya wa maaa ana bizal laamil lil'abeed

"என்னுடைய கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என்னுடைய அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல" என்றும் கூறுவான்.

Tafseer

يَوْمَ
நாளில்
نَقُولُ
நாம் கூறுகின்ற
لِجَهَنَّمَ
நரகத்திடம்
هَلِ ٱمْتَلَأْتِ
நீ நிரம்பிவிட்டாயா?
وَتَقُولُ
அது கூறும்
هَلْ مِن
இன்னும் அதிகம் இருக்கிறதா?

Yawma naqoolu li'jahannama halim talaati wa taqoolu hal mim mazeed

தவிர அந்நாளில் நரகத்தை நோக்கி, "உன்னுடைய வயிறு நிறைந்து விட்டதா?" என்று நாம் கேட்போம். அதற்கு அது "இன்னும் ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும்.

Tafseer