Skip to main content

لَن
அறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாது
يَضُرُّوكُمْ
உங்களுக்கு
إِلَّآ
தவிர
أَذًىۖ
சிரமம்
وَإِن
இன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்
يُقَٰتِلُوكُمْ
திருப்புவார்கள்
يُوَلُّوكُمُ
உங்களுக்கு
ٱلْأَدْبَارَ
பின்புறங்களை
ثُمَّ
பிறகு
لَا يُنصَرُونَ
உதவி செய்யப்பட மாட்டார்கள்

Lai yadurrookum 'illaaa azanw wa ai yuqaatilookum yuwallookumul adbaara summa laa yunsaroon

(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள்.

Tafseer

ضُرِبَتْ
விதிக்கப்பட்டது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلذِّلَّةُ
இழிவு
أَيْنَ مَا
எங்கெல்லாம்
ثُقِفُوٓا۟
பெற்றுக் கொள்ளப்பட்டார்கள்
إِلَّا
தவிர
بِحَبْلٍ
கயிற்றைக் கொண்டு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَحَبْلٍ
இன்னும் கயிறு
مِّنَ ٱلنَّاسِ
மக்களின்
وَبَآءُو
இன்னும் திரும்பி விட்டார்கள்
بِغَضَبٍ
கோபத்தில்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَضُرِبَتْ
இன்னும் விதிக்கப்பட்டது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْمَسْكَنَةُۚ
ஏழ்மை
ذَٰلِكَ
அது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
بِغَيْرِ حَقٍّۚ
நியாயம் இன்றி
ذَٰلِكَ
அது
بِمَا عَصَوا۟
அவர்கள் மாறு செய்த காரணத்தால்
وَّكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
يَعْتَدُونَ
வரம்பு மீறுகிறார்கள்

Duribat 'alaihimuz zillatu aina maa suqifooo illaa bihablim minal laahi wa hablim minan naasi wa baaa'oo bighadabim minallaahi wa duribat 'alaihimul maskanah; zaalika bi-annahum kaanoo yakfuroona bi Aayaatil laahi wa yaqtuloonal Ambiyaaa'a bighairi haqq; zaalika bimaa 'asaw wa kaanoo ya'tadoon

அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.

Tafseer

لَيْسُوا۟
அவர்கள் இல்லை
سَوَآءًۗ
சமமானவர்களாக
مِّنْ أَهْلِ
வேதக்காரர்களில்
أُمَّةٌ
ஒரு கூட்டத்தினர்
قَآئِمَةٌ
காயிமா (நீதமானவர்கள்)
يَتْلُونَ
ஓதுகிறார்கள்
ءَايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ءَانَآءَ
நேரங்கள்
ٱلَّيْلِ
இரவின்
وَهُمْ
இன்னும் அவர்கள்
يَسْجُدُونَ
சிரம் பணிகிறார்கள்

Laisoo sawaaa'a; min Ahlil Kitaabi ummatun qaaa'imatuny yatloona Aayaatil laahi aanaaa'al laili wa hum yasjudoon

அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர்.

Tafseer

يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَيَأْمُرُونَ
இன்னும் ஏவுகிறார்கள்
بِٱلْمَعْرُوفِ
நன்மையைக்கொண்டு
وَيَنْهَوْنَ
இன்னும் தடுக்கிறார்கள்
عَنِ ٱلْمُنكَرِ
தீமையை விட்டும்
وَيُسَٰرِعُونَ
இன்னும் விரைகிறார்கள்
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்தான்
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்

Yu'minoona billaahi wal Yawmil Aakhiri wa yaa muroona bilma'roofi wa yanhawna 'anil munkari wa yusaari'oona fil khairaati wa ulaa'ika minas saaliheen

அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே.

Tafseer

وَمَا يَفْعَلُوا۟
அவர்கள் எதைச் செய்தாலும்
مِنْ خَيْرٍ
நன்மையில்
فَلَن يُكْفَرُوهُۗ
அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِٱلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களை

Wa maa yaf'aloo min khairin falai yukfarooh; wallaahu 'aleemun bilmuttaqeen

இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
لَن تُغْنِىَ
தடுக்காது
عَنْهُمْ
அவர்களை விட்டு
أَمْوَٰلُهُمْ
அவர்களின் செல்வங்கள்
وَلَآ أَوْلَٰدُهُم
இன்னும் அவர்களின்சந்ததிகள்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
شَيْـًٔاۖ
எதையும்
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் அவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۚ
நரகவாசிகள்
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Innal lazeena kafaroo lan tughniya 'anhum amwaalum wa laaa awlaaduhum minal laahi shai anw wa ulaaa'ika Ashaabun Naar; hum feehaa khaalidoon

நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள்.

Tafseer

مَثَلُ
உதாரணம்
مَا
எது
يُنفِقُونَ
தர்மம் செய்கிறார்கள்
فِى هَٰذِهِ
இதில்
ٱلْحَيَوٰةِ
வாழ்வு
ٱلدُّنْيَا
உலகம்
كَمَثَلِ
உதாரணத்தைப் போல்
رِيحٍ
காற்று
فِيهَا
அதில்
صِرٌّ
கடுமையான குளிர்
أَصَابَتْ
அடைந்தது
حَرْثَ
விளை நிலத்தை
قَوْمٍ
ஒரு கூட்டத்தாரின்
ظَلَمُوٓا۟
அநீதியிழைத்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்குத்தாமே
فَأَهْلَكَتْهُۚ
அதை அழித்தது
وَمَا ظَلَمَهُمُ
அநீதியிழைக்க வில்லை/அவர்களுக்கு
ٱللَّهُ وَلَٰكِنْ
அல்லாஹ்/எனினும்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்

Masalu maa yunfiqoona fee haazihil hayaatid dunyaa kamasali reehin feehaa sirrun as aabat harsa qawmin zalamooo anfusahum fa ahlakath; wa maa zalamahumul laahu wa laakin anfusahum yazlimoon

இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கின்றது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
بِطَانَةً
உற்ற நண்பர்களை
مِّن
இருந்து
دُونِكُمْ
உங்கள்அல்லாதவர்கள்
لَا يَأْلُونَكُمْ
குறைக்க மாட்டார்கள்/ உங்களுக்கு
خَبَالًا
தீங்கிழைப்பதை
وَدُّوا۟
விரும்பினார்கள்
مَا عَنِتُّمْ
நீங்கள் துன்பப்படுவதை
قَدْ بَدَتِ
வெளிப்பட்டுவிட்டது
ٱلْبَغْضَآءُ مِنْ
பகைமை/இருந்து
أَفْوَٰهِهِمْ
வாய்கள்/அவர்கள்
وَمَا تُخْفِى
இன்னும் எது/மறைக்கிறது
صُدُورُهُمْ
நெஞ்சங்கள்/அவர்கள்
أَكْبَرُۚ
மிகப் பெரியது
قَدْ بَيَّنَّا
திட்டமாக விவரித்தோம்
لَكُمُ
உங்களுக்கு
ٱلْءَايَٰتِۖ
அத்தாட்சிகளை
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْقِلُونَ
புரிகிறீர்கள்

Yaaa ayyuhal lazeena aamanoo laa tattakhizoo bitaanatam min doonikum laa yaaloonakum khabaalanw waddoo maa 'anittum qad badatil baghdaaa'u min afwaahihim; wa maa tukhfee sudooruhum akbar; qad baiyannaa lakumul Aayaati in kuntum ta'qiloon

நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)

Tafseer

هَٰٓأَنتُمْ
நீங்கள்
أُو۟لَآءِ
எப்படிப்பட்டவர்கள்
تُحِبُّونَهُمْ
நேசிக்கிறீர்கள்/ இவர்களை
وَلَا يُحِبُّونَكُمْ
அவர்கள் நேசிப்பதில்லை/ உங்களை
وَتُؤْمِنُونَ
இன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்
بِٱلْكِتَٰبِ
வேதத்தை
كُلِّهِۦ
அவை எல்லாம்
وَإِذَا
இன்னும் அவர்கள் சந்தித்தால்
لَقُوكُمْ
இன்னும் அவர்கள் சந்தித்தால் உங்களை
قَالُوٓا۟
கூறுகின்றனர்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
وَإِذَا خَلَوْا۟
இன்னும் அவர்கள் தனித்தால்
عَضُّوا۟
கடித்தனர்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْأَنَامِلَ
விரல் நுனிகளை
مِنَ ٱلْغَيْظِۚ
கோபத்தினால்
قُلْ
கூறுவீராக
مُوتُوا۟
சாவுங்கள்
بِغَيْظِكُمْۗ
உங்கள்கோபத்தினால்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِذَاتِ
உள்ளவற்றை
ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்

Haaa antum ulaaa'i tuhibboonahum wa laa yuhibboonakum wa tu'minoona bil kitaabi kullihee wa izaa laqookum qaalooo aamannaa wa izaa khalaw 'addoo 'alaikumul anaamila minal ghaiz; qul mootoo bighai zikum; innal laaha 'aleemum bizaatis sudoor

(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."

Tafseer

إِن تَمْسَسْكُمْ
உங்களைஅடைந்தால்
حَسَنَةٌ
ஒரு நல்லது
تَسُؤْهُمْ
வருத்தம் தருகிறது/ அவர்களுக்கு
وَإِن تُصِبْكُمْ
இன்னும் அடைந்தால்/ உங்களை
سَيِّئَةٌ
ஒரு தீங்கு
يَفْرَحُوا۟
மகிழ்ச்சி அடைகிறார்கள்
بِهَاۖ
அதன் மூலம்
وَإِن تَصْبِرُوا۟
நீங்கள் பொறுத்தால்
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சினால்
لَا
தீங்கிழைக்காது
يَضُرُّكُمْ
தீங்கிழைக்காது உங்களுக்கு
كَيْدُهُمْ
அவர்களின் சூழ்ச்சி
شَيْـًٔاۗ إِنَّ
சிறிதளவும்
ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை
مُحِيطٌ
சூழ்ந்துள்ளான்

In tamsaskum hasanatun tasu'hum wa in tusibkum saiyi'atuny yafrahoo bihaa wa in tasbiroo wa tattaqoo laa yad urrukum kaiduhum shai'aa; innal laaha bimaa ya'maloona muheet

உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

Tafseer