Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
ٱلْيَهُودَ
யூதர்களை
وَٱلنَّصَٰرَىٰٓ
இன்னும் கிறித்தவர்களை
أَوْلِيَآءَۘ
நண்பர்களாக
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلِيَآءُ
நண்பர்கள்
بَعْضٍۚ
சிலரின்
وَمَن
எவர்
يَتَوَلَّهُم
நட்புகொள்வார்/அவர்களுடன்
مِّنكُمْ
உங்களில்
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
مِنْهُمْۗ
அவர்களைச் சார்ந்தவர்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul Yahooda wan nasaaraaa awliyaaa'; ba'duhum awliyaaa'u ba'd; wa mai yatawallahum minkum fa innahoo minhum; innal laaha laa yahdil qawmaz zaalimeen

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

Tafseer

فَتَرَى
காண்பீர்
ٱلَّذِينَ
எவர்களை
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
مَّرَضٌ
நோய்
يُسَٰرِعُونَ
விரைபவர்களாக
فِيهِمْ
அவர்களில்
يَقُولُونَ
கூறுகின்றனர்
نَخْشَىٰٓ
பயப்படுகிறோம்
أَن تُصِيبَنَا
எங்களைஅடைவதை
دَآئِرَةٌۚ
ஆபத்து
فَعَسَى
ஆகலாம்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يَأْتِىَ
வருவது
بِٱلْفَتْحِ
வெற்றியைக் கொண்டு
أَوْ
அல்லது
أَمْرٍ
ஒரு காரியம்
مِّنْ
இருந்து
عِندِهِۦ
தன்னிடம்
فَيُصْبِحُوا۟
ஆகிவிடுவார்கள்
عَلَىٰ مَآ
மீது/எது
أَسَرُّوا۟
மறைத்தார்கள்
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் உள்ளங்களில்
نَٰدِمِينَ
துக்கப்பட்டவர்களாக

Fataral lazeena fee quloobihim maraduny yusaari'oona feehim yaqooloona nakhshaaa an tuseebanaa daaa'irah; fa'asallaahu ai yaatiya bilfathi aw amrim min 'indihee fa yusbihoo 'alaa maaa asarroo feee anfusihim naadimeen

(நபியே!) எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அவர்களிடம் (தோழமை கொள்ளவே) அவர்கள் விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அன்றி "(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு யாதொரு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசக் கருத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.

Tafseer

وَيَقُولُ
இன்னும் கூறுவார்(கள்)
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
أَهَٰٓؤُلَآءِ
இவர்கள்தானா
ٱلَّذِينَ
எவர்கள்
أَقْسَمُوا۟
சத்தியம்செய்தார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
جَهْدَ
உறுதியாக
أَيْمَٰنِهِمْۙ
தங்கள் சத்தியங்கள்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَمَعَكُمْۚ
உங்களுடன்தான்
حَبِطَتْ
அழிந்து விட்டன
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய (நல்ல)செயல்கள்
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக

Wa yaqoolul lazeena aamanooo ahaaa'ulaaa'il lazeena aqsamoo billaahi jahda aimaanihim innahum lama'akum; habitat a'maaluhum fa asbahoo khaasireen

நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?" என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
مَن
எவரும்
يَرْتَدَّ
மாறுவார்
مِنكُمْ
உங்களிலிருந்து
عَن دِينِهِۦ
விட்டு/தன்மார்க்கம்
فَسَوْفَ يَأْتِى
கொண்டு வருவான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِقَوْمٍ
ஒரு சமுதாயத்தை
يُحِبُّهُمْ
நேசிப்பான்/அவர்களை
وَيُحِبُّونَهُۥٓ
இன்னும் நேசிப்பார்கள்/அவனை
أَذِلَّةٍ
பணிவானவர்கள்
عَلَى
இடம்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
أَعِزَّةٍ
கண்டிப்பானவர்கள்
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களிடம்
يُجَٰهِدُونَ
போரிடுவார்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا يَخَافُونَ
பயப்பட மாட்டார்கள்
لَوْمَةَ
பழிப்பை
لَآئِمٍۚ
பழிப்பவனின்
ذَٰلِكَ
இது
فَضْلُ
அருள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُؤْتِيهِ
அதை கொடுக்கின்றான்
مَن يَشَآءُۚ
எவருக்கு/நாடுகிறான்
وَٱللَّهُ
அல்லாஹ்
وَٰسِعٌ
விசாலமானவன்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Yaa aiyuhal lazeena aamanoo mai yartadda minkum 'an deenihee fasawfa yaatil laahu biqawminy yuhibbuhum wa yuhibboonahoo azillatin 'alal mu'mineena a'izzatin 'alal kaafireena yujaahidoona fee sabeelil laahi wa laa yakhaafoona lawmata laaa'im; zaalika fadlul laahi yu'teehi mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّمَا
எல்லாம்
وَلِيُّكُمُ
உங்கள் நண்பன்
ٱللَّهُ
அல்லாஹ்
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يُقِيمُونَ
நிலை நிறுத்துகின்றனர்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَيُؤْتُونَ
இன்னும் கொடுக்கின்றனர்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَهُمْ رَٰكِعُونَ
அவர்கள் தலைகுனிவார்கள்

Innamaa waliyyukumul laahu wa Rasooluhoo wal lazeena aamanul lazeena yuqeemoonas Salaata wa yu'toonaz Zakaata wa hum raaki'oon

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகின்றனரோ அவர்களும்தான் நிச்சயமாக உங்களுடைய (உண்மையான) தோழர்களாகும்.

Tafseer

وَمَن
எவர்
يَتَوَلَّ
நேசிக்கிறார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதரை
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
فَإِنَّ
நிச்சயமாக
حِزْبَ
படையினர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُمُ
அவர்கள்தான்
ٱلْغَٰلِبُونَ
வெற்றியாளர்கள்

Wa mai yatawallal laaha wa Rasoolahoo wallazeena aamanoo fa inna hizbal laahi humul ghaaliboon

அன்றி எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக "ஹிஸ்புல்லாக்கள்" என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்.) அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّخِذُوا۟
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக்கொண்டார்கள்
دِينَكُمْ
உங்கள் மார்க்கத்தை
هُزُوًا
பரிகாசமாக
وَلَعِبًا
இன்னும் விளையாட்டாக
مِّنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
مِن قَبْلِكُمْ
உங்களுக்குமுன்னர்
وَٱلْكُفَّارَ
இன்னும் நிராகரிப்பவர்களை
أَوْلِيَآءَۚ
நண்பர்களாக
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul lazeenat takhazoo deenakum huzuwanw wa la'ibam minal lazeena ootul Kitaaba min qablikum walkuffaara awliyaaa'; wattaqul laaha in kuntum muu'mineen

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர்களாகவும்) எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.)

Tafseer

وَإِذَا نَادَيْتُمْ
நீங்கள் அழைத்தால்
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
ٱتَّخَذُوهَا
அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்
هُزُوًا
பரிகாசமாக
وَلَعِبًاۚ
இன்னும் விளையாட்டாக
ذَٰلِكَ
அது
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
قَوْمٌ
மக்கள்
لَّا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்

Wa izaa naadaitum ilas Salaatit takhazoohaa huzu wan'w wa la'ibaa; zaalika biannnahum qawmul laa ya'qiloon

நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால் அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்!

Tafseer

قُلْ
கூறுவீராக
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
هَلْ تَنقِمُونَ
நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)
مِنَّآ
எங்களை
إِلَّآ
தவிர
أَنْ ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
إِلَيْنَا
எங்களுக்கு
وَمَآ أُنزِلَ
இன்னும் இறக்கப்பட்டதை
مِن قَبْلُ
முன்னர்
وَأَنَّ
நிச்சயமாக அதிகமானவர்கள்
أَكْثَرَكُمْ
நிச்சயமாக அதிகமானவர்கள் உங்களில்
فَٰسِقُونَ
பாவிகள்

Qul yaaa Ahlal Kitaabi hal tanqimoona minnaaa illaaa an aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maa unzila min qablu wa annna aksarakum faasiqoon

"வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீங்கள் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)" என்று கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلْ أُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிக்கவா?
بِشَرٍّ
மிகக் கெட்டவனை
مِّن
விட
ذَٰلِكَ
இதை
مَثُوبَةً
தண்டனையால்
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
مَن
எவர்
لَّعَنَهُ
சபித்தான்/அவரை
ٱللَّهُ
அல்லாஹ்
وَغَضِبَ
இன்னும் கோபித்தான்
عَلَيْهِ
அவர்(கள்) மீது
وَجَعَلَ
ஆக்கினான்
مِنْهُمُ
அவர்களில்
ٱلْقِرَدَةَ
குரங்குகளாக
وَٱلْخَنَازِيرَ
இன்னும் பன்றிகளாக
وَعَبَدَ
இன்னும் வணங்கினார்(கள்)
ٱلطَّٰغُوتَۚ
ஷைத்தானை
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
شَرٌّ
மிகக் கெட்டவர்கள்
مَّكَانًا
தகுதியால்
وَأَضَلُّ
இன்னும் மிகவும் வழிதவறியவர்கள்
عَن
இருந்து
سَوَآءِ
நேரான (நடு)
ٱلسَّبِيلِ
பாதை

Qul hal unabbi'ukum bisharrim min zaalika masoobatan 'indal laah; malla'ana hul laahu wa ghadiba 'alaihi wa ja'ala minhumul qiradata wal khanaazeera wa 'abadat Taaghoot; ulaaa'ika sharrum makaananw wa adallu 'an Sawaaa'is Sabeel

"அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" (என்று நபியே! நீங்கள் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். அன்றி, நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று நீங்கள் கூறுங்கள்.

Tafseer