Skip to main content

وَإِذْ وَٰعَدْنَا
இன்னும் சமயம்/வாக்களித்தோம்
مُوسَىٰٓ
மூஸாவிற்கு
أَرْبَعِينَ
நாற்பது
لَيْلَةً
இரவுகளை
ثُمَّ
பிறகு
ٱتَّخَذْتُمُ
எடுத்துக்கொண்டீர்கள்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
وَأَنتُمْ
நீங்கள்
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa iz waa'adnaa Moosaaa arba'eena lailatan summattakhaztumul 'ijla mim ba'dihee wa antum zaalimoon

அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.

Tafseer

ثُمَّ عَفَوْنَا
பிறகு/மன்னித்தோம்
عَنكُم
உங்களை
مِّنۢ بَعْدِ
பின்னர்/அதன்
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Summa 'afawnaa 'ankum mim ba'di zaalika la'allakum tashkuroon

நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம்.

Tafseer

وَإِذْ
இன்னும் சமயம்
ءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَٱلْفُرْقَانَ
இன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக

Wa iz aatainaa Moosal kitaaba wal Furqaana la'allakum tahtadoon

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம்.

Tafseer

وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
مُوسَىٰ
மூசா
لِقَوْمِهِۦ
சமுதாயத்திற்கு/தன்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ظَلَمْتُمْ
அநியாயம்செய்தீர்கள்
أَنفُسَكُم
ஆன்மாக்களுக்கு/உங்கள்
بِٱتِّخَاذِكُمُ
நீங்கள் எடுத்துக் கொண்டதினால்
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
فَتُوبُوٓا۟
எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள்
إِلَىٰ
பக்கம்
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
فَٱقْتُلُوٓا۟
ஆகவேகொல்லுங்கள்
أَنفُسَكُمْ
உயிர்களை/உங்கள்
ذَٰلِكُمْ
அது
خَيْرٌ
சிறந்தது
لَّكُمْ
உங்களுக்கு
عِندَ
இடம்
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
فَتَابَ
எனவே மன்னித்தான்
عَلَيْكُمْۚ
உங்களை
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்

Wa iz qaala Moosaa liqawmihee yaa qawmi innakum zalamtum anfusakum bittikhaa zikumul 'ijla fatoobooo ilaa Baari'ikum faqtulooo anfusakum zaalikum khairul lakum 'inda Baari'ikum fataaba 'alaikum; innahoo Huwat Tawwaabur Raheem

பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَإِذْ قُلْتُمْ
இன்னும் சமயம்/கூறினீர்கள்
يَٰمُوسَىٰ
மூஸாவே!
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
لَكَ حَتَّىٰ
உம்மை/நாம் காணும் வரை
ٱللَّهَ
அல்லாஹ்வை
جَهْرَةً
கண்கூடாக
فَأَخَذَتْكُمُ
எனவே பிடித்தது/உங்களை
ٱلصَّٰعِقَةُ
பெரும் சப்தம்
وَأَنتُمْ تَنظُرُونَ
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க

Wa iz qultum yaa Moosaa lan nu'mina laka hattaa naral laaha jahratan fa akhazat kumus saa'iqatu wa antum tanzuroon

அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது.

Tafseer

ثُمَّ
பிறகு
بَعَثْنَٰكُم
எழுப்பினோம்/உங்களை
مِّنۢ بَعْدِ
பின்னர்
مَوْتِكُمْ
மரணம்/உங்கள்
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Summa ba'asnaakum mim ba'di mawtikum la'allakum tashkuroon

நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம்.

Tafseer

وَظَلَّلْنَا
இன்னும் நிழலிடச் செய்தோம்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْغَمَامَ
மேகத்தை
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
عَلَيْكُمُ
உங்கள் மீது
ٱلْمَنَّ
மன்னு
وَٱلسَّلْوَىٰۖ
இன்னும் ஸல்வா
كُلُوا۟
புசியுங்கள்
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
مَا رَزَقْنَٰكُمْۖ
நாம் வழங்கியது/உங்களுக்கு
وَمَا ظَلَمُونَا
அவர்கள் தீங்கிழைக்கவில்லை/நமக்கு
وَلَٰكِن
எனினும்
كَانُوٓا۟
இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்கே
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக

Wa zallalnaa 'alaikumul ghamaama wa anzalnaa 'alaikumul Manna was Salwaa kuloo min taiyibaati maa razaqnaakum wa maa zalamoonaa wa laakin kaanooo anfusahum yazlimoon

அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) "மன்னு ஸல்வா" (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவைகளைப் புசித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம்முடைய கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

وَإِذْ قُلْنَا
இன்னும் சமயம்/கூறினோம்
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
هَٰذِهِ
இந்த
ٱلْقَرْيَةَ
ஊரில்
فَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
مِنْهَا
அதில்
حَيْثُ
விதத்தில்
شِئْتُمْ
நாடினீர்கள்
رَغَدًا
தாராளமாக
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
ٱلْبَابَ
வாசலில்
سُجَّدًا
தலைகுனிந்தவர்களாக
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
حِطَّةٌ
பாவச்சுமை நீங்குக!
نَّغْفِرْ
மன்னிப்போம்
لَكُمْ
உங்களுக்கு
خَطَٰيَٰكُمْۚ
குற்றங்களை/உங்கள்
وَسَنَزِيدُ
இன்னும் அதிகப்படுத்துவோம்
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு

Wa iz qulnad khuloo haazihil qaryata fakuloo minhaa haisu shi'tum raghadanw wadkhulul baaba sujjadanw wa qooloo hittatun naghfir lakum khataayaakum; wa sanazeedul muhsineen

அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம்.

Tafseer

فَبَدَّلَ
ஆகவே மாற்றினார்(கள்)
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
قَوْلًا
வார்த்தையாக
غَيْرَ
அல்லாத
ٱلَّذِى قِيلَ
எது/கூறப்பட்டது
لَهُمْ
தங்களுக்கு
فَأَنزَلْنَا
எனவே இறக்கினோம்
عَلَى
மீது
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
رِجْزًا
வேதனையை
مِّنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்
بِمَا
காரணமாக
كَانُوا۟
இருந்தார்கள்
يَفْسُقُونَ
பாவம் செய்பவர்களாக

Fabaddalal lazeena zalamoo qawlan ghairal lazee qeela lahum fa anzalnaa 'alal lazeena zalamoo rijzam minas samaaa'i bimaa kaanoo yafsuqoon

ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.

Tafseer

وَإِذِ ٱسْتَسْقَىٰ
இன்னும் சமயம்/தண்ணீர் தேடினார்
مُوسَىٰ لِقَوْمِهِۦ
மூசா/சமுதாயத்திற்கு/தனது
فَقُلْنَا
ஆகவே, கூறினோம்
ٱضْرِب
அடிப்பீராக
بِّعَصَاكَ
தடியால்/உம்
ٱلْحَجَرَۖ
கல்லை
فَٱنفَجَرَتْ
பீறிட்டன
مِنْهُ
அதிலிருந்து
ٱثْنَتَا عَشْرَةَ
பன்னிரெண்டு
عَيْنًاۖ
ஊற்று(கள்)
قَدْ عَلِمَ
திட்டமாக அறிந்தார்(கள்)
كُلُّ
எல்லாம்
أُنَاسٍ
மக்கள்
مَّشْرَبَهُمْۖ
குடிக்குமிடத்தை/தங்கள்
كُلُوا۟
புசியுங்கள்
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
مِن رِّزْقِ
உணவிலிருந்து
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَا تَعْثَوْا۟
இன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مُفْسِدِينَ
விஷமிகளாக

Wa izis tasqaa Moosaa liqawmihee faqulnad rib bi'asaakal hajara fanfajarat minhusnataaa 'ashrata 'aynan qad 'alima kullu unaasim mash rabahum kuloo washraboo mir rizqil laahi wa laa ta'saw fil ardi mufsideen

மூஸா தன் இனத்தாரு(டன் "தீஹ்" என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)கு தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய தடியால் இக்கல்லை அடியுங்கள்" எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி "உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த ("மன்னு மற்றும் ஸல்வா" என்னும் உணவு பதார்தத்) திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்று கூறினோம்.)

Tafseer